Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மக்களின் தேவையை அறிந்து தி.மு.க அரசு செயல்படவில்லை – இ.பி.எஸ் !

சேலம் ஓமலூரில் அ.தி.முக. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கே தேர்தலில் பேட்டியிட சீட் வழங்கப்படும்.…

பரவி வரும் டெங்கு காய்ச்சல்… பொது மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு தொடங்கியதில்…

போராட்டம் தற்காலிக வாபஸ்! பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை…

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து டெல்லியில் மாணவர் அமைப்புடன் இணைந்து தி.மு.க. மாணவரணி பேரணி!

காங்கிரஸ் – தி.மு.க. உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக போட்டியிட வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி கட்சி,…

முரசொலி அலுவலக நிலம்! மீண்டும் விசாரிக்க உத்தரவு!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்த தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825…

பொங்கல் பரிசுத் தொகுப்பு ! முதலமைச்சர் தொடங்கி வைத்தார் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இல்லங்களில் இன்பம் பொங்கிடும் தமிழர் திருநாளின் மகிழ்ச்சியைக் கூட்டிடும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தேன். சமத்துவமும் சகோதரத்துவமும் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பெருகி எங்கும்…

திமுக ஆட்சியை கண்டித்து திருச்சியில் தெருமுனை பிரச்சாரம்!

தி.மு.க. ஆட்சியில் கடுமையாக விலைவாசி ஏறியிருப்பதை கண்டித்து, தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது தொடர்பாக திருச்சியின் முன்னாள் எம்.பி.ப.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு…

ராஜ்யசபா எம்.பி.யாகும் கமல்! திமுகவின் தேர்தல் கணக்கு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் கணக்குப் போட்டு வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் ராஜ்ய சபா எம்.பி. ஆகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது…

‘பசை’ உள்ளவர்களுக்கு சீட்! எடப்பாடியின் புது அஜெண்டா!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கலாம்’ என்ற அஜெண்டாவை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார்,…

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா..!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல். தனது முடிவை முதல்வர் மற்றும்…