- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கிடையே, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி […]
- அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் பாஜக! மருது அழகுராஜ் சூசகம்!
by RENGANATHAN P
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலோடு அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதிவிடும் என தி.மு.க.வின் செய்தி தொடர்புகுழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி என முதலில் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, பின்னர் பா.ஜ.க.வுடன் இனி எந்த காலமும் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்றார். ஆனால், வருகிற 2026 சட்டமன்றத் […]
- கரூர் சம்பவத்தில் “முரண்பட்ட” காவல்துறை! தவெக அதிர்ச்சி தகவல்!
by RENGANATHAN P
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு, 90 கேள்விகள் அடங்கிய கையேட்டை வழங்கி விஜயிடம் விரிவான விளக்கம் […]
- பயிர்க்கடன் பணத்தில் பொங்கல் ‘ரொக்கம்’! விவசாயிகள் வேதனை!
by RENGANATHAN P
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் விவசாயக் கடன் வாங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதால் இப்போதைக்கு பயிர்க்கடன், மாட்டுக்கடன் வழங்க முடியாது என கைவிரித்திருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி! 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் தமிழக அரசு வழங்கியது. தமிழக அரசின் கஜனா ஒட்டுமொத்தமாக […]
- அடுக்கடுக்கான கேள்விகள்… சளைக்காமல் பதில் அளித்த விஜய்!
by RENGANATHAN P
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜய் மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் […]
- ‘N.D.A.’வுக்கு எதிராக திரும்பிய விஜய் தொண்டர்கள்! ‘குஷி’யில் திமுக!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்லை குறிவைத்து ‘மாஸ்’ நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, ‘அரசியல் எதிரி தி.மு.க.; கொள்கை எதிரி பா.ஜ.க.’ என அரசியல் களமாடினார். இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கே இதுநாள் வரை இல்லாத அளவிற்கு விஜய்க்கு தொண்டர்களின் செல்வாக்கு அதிகரித்தது. விஜய் பிரச்சாரத்திற்கு சென்றால் பார்ப்பதற்கு லட்சக்காணக்கான இளைஞர்கள் திரண்டு […]
- கூட்டணி ஆட்சியா? மனம் திறந்த நயினார் நாகேந்திரன்!
by RENGANATHAN P
கூட்டணி ஆட்சியை பாஜக வலியுறுத்தவில்லை என்று தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தால் அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வருகை தர வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய தமிழக […]
- இறுதி குற்றப்பத்திரிகை! சிபிஐ அலுவலகத்தில் விஜய்!
by RENGANATHAN P
கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று நேரில் ஆஜரானார். கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் […]
- ‘ஆட்சியில் பங்கு!’ காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக!
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் ஐ. பெரியசாமி காங்கிரசின் கரகோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எழுந்த குரல்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி முற்றுப்புள்ளி வைத்தார். […]
- ராஜபாளையம் தொகுதியை குறி வைக்கும் நடிகை கௌதமி!
by RENGANATHAN P
அ.தி.மு.க. வேட்பாளராக நடிகை கௌதமி ராஜபாளையத்தில் களமிறங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக – அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் […]
- தொடர் போராட்டம்… சென்னையில் 1,500 ஆசிரியர்கள் கைது!
by RENGANATHAN P
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ் டிஏ) சார்பில், கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து […]
- பாஜகவினர் மீது திமுகவினர் தாக்குதல்! விவாத நிகழ்ச்சியில் விபரீதம்!
by RENGANATHAN P
தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி விபரிதமாக மாறி, தி.மு.க., பா.ஜ.க.வினரிடையே நடந்த மோதல்தான் தமிழகத்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது. நியூஸ் 18 தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மக்கள் சபை நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில், பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் கலந்துகொண்ட செந்தில்வேல் பேசும்போது பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் கிண்டல் செய்ததாகவும், இதனால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய […]
- ‘பழைய அடிமைகள்… புதிய அடிமைகள்..!’ உதயநிதியின் ‘பஞ்ச்’ டயலாக்!
by RENGANATHAN P
‘‘தமிழ்நாட்டில் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என யாரையும் உள்ளே விடமாட்டோம்’’ என உதயநிதி ஸ்டாலின் ‘பஞ்ச்’ டயலாக் பேசியிருக்கிறார். சென்னை வியாசர்பாடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் […]