- தனியார் மயமாகிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்ன மெஸேஜ்!
by RENGANATHAN P
சமீபத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதல்வர் விஜய் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டாஸ்மாக்கை தனியார் மயமாக்லாமா? அல்லது டாஸ்மாக்கையே எடுத்துவிடலாமா’ என்பது தொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், ‘‘இப்போதும் கூட டாஸ்மாக் சென்று பார்த்தால் குப்பைமேடாக இருக்கும். யாரேனும் எங்கேயாவது படுத்திருப்பார்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? இந்த […]
- பெரம்பூர் தொகுதியில் வெற்றி! முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
by RENGANATHAN P
சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக […]
- ஆகஸ்ட் 5ம் தேதி த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்!
by RENGANATHAN P
தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த நிலையில் வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசு பதவியேற்று முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தகவலை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு […]
- மதுபான கொள்முதல்! மாற்றி யோசித்த விஜய்! அதிர்ச்சியில் ஆலை அதிபர்கள்!
by RENGANATHAN P
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது, அவர்களுக்கு வேண்டப்பட்ட மதுபான தொழிற்சாலைகளில் இருந்து அதிக சரக்குகள் வாங்குவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்திருக்கிறார் முதல்வர் விஜய்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய […]
- பழனி கோவில் நில மோசடி! யார் இந்த ‘சார்’ பதிவாளர்..?
by RENGANATHAN P
பழனி கோயில் தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான நில மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது […]
- சென்னையில் அதிகாலையிலேயே களமிறங்கிய அமலாக்கத்துறை!
by RENGANATHAN P
சென்னையில் அதிகாலையிலேயே இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர் தரணிதரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
- ‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு!’ திமுகவை எச்சரித்த அமைச்சர் வன்னி அரசு!
by RENGANATHAN P
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்துக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார் எனவும், அவர் மீது சட்டப்பேரவை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னி அரசு கூறியுள்ளார். தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் […]
- ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற – பி.வி.சிந்துக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து!
by RENGANATHAN P
‘‘பி.வி.சிந்து தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும்’’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ‘‘ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து தனது முதல் ‘சூப்பர் 750’ பட்டத்தையும், […]
- ‘சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
by RENGANATHAN P
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் […]
- ஆட்சியை கவிழ்க்க சதி! சிக்கிய ரூ.2,82 கோடி! சீல் வைக்கப்பட்ட நிறுவனம்!
by RENGANATHAN P
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூரில் கனகராஜ் என்பவரின் பைனான்ஸ் அலுவலகத்தில் […]
- முதல்வர் விஜய்யை விமர்சித்த மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ. கைது!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக […]
- வைகோ நூல் வெளியீட்டு விழா! ஒரே மேடையில் ராகுல் – விஜய்!
by RENGANATHAN P
வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளியிட, ஜோசப் விஜய் பெற்றுக்கொள்கிறார். நாடாளுமன்ற அவைகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பான புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் டெல்லியில் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர். […]
- அனைத்துக்கட்சி கூட்டம்! காங்கிரசுடன் திமுகவும் வெளிநடப்பு! அதிர்ச்சியில் பா.ஜ.க.!
by RENGANATHAN P
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது’ என தி.மு.க.வின் சீனியர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, […]