- ‘எலும்புகள் எல்லோருக்கும் உண்டு!’ திமுகவை எச்சரித்த அமைச்சர் வன்னி அரசு!
by RENGANATHAN P
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என விஜய்யை மிரட்டிய மார்க்கண்டேயனுக்கு அமைச்சர் வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்துக்குள் முதல்வருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என வன்முறையை தூண்டும் வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியுள்ளார் எனவும், அவர் மீது சட்டப்பேரவை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன்னி அரசு கூறியுள்ளார். தமிழக முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் […]
- ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற – பி.வி.சிந்துக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து!
by RENGANATHAN P
‘‘பி.வி.சிந்து தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும்’’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ‘‘ஜப்பான் ஓபன் 2026 இறுதிப்போட்டியில் அகானே யாமகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து தனது முதல் ‘சூப்பர் 750’ பட்டத்தையும், […]
- ‘சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?’ மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
by RENGANATHAN P
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் தவெக ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் […]
- ஆட்சியை கவிழ்க்க சதி! சிக்கிய ரூ.2,82 கோடி! சீல் வைக்கப்பட்ட நிறுவனம்!
by RENGANATHAN P
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசியதாக எழுந்த புகாரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரூரில் கனகராஜ் என்பவரின் பைனான்ஸ் அலுவலகத்தில் […]
- முதல்வர் விஜய்யை விமர்சித்த மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ. கைது!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18-ம் தேதி இரவு கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக […]
- வைகோ நூல் வெளியீட்டு விழா! ஒரே மேடையில் ராகுல் – விஜய்!
by RENGANATHAN P
வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளியிட, ஜோசப் விஜய் பெற்றுக்கொள்கிறார். நாடாளுமன்ற அவைகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பான புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் டெல்லியில் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர். […]
- அனைத்துக்கட்சி கூட்டம்! காங்கிரசுடன் திமுகவும் வெளிநடப்பு! அதிர்ச்சியில் பா.ஜ.க.!
by RENGANATHAN P
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது’ என தி.மு.க.வின் சீனியர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரையொட்டி டெல்லியில் இன்று (ஜூலை 19) நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இருந்து திமுக, […]
- தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்! முழு விபரம் – பட்டியல்!
by RENGANATHAN P
நாட்டின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தேசிய நடிகராக மலையாள நடிகர் மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன் ஆகியோரும், சிறந்த நடிகையாக யாமி கவுதமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்கள் அள்ளியுள்ளன. சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தேர்வு […]
- பழனி கோவில் நில முறைகேடு! ‘பகீர்’ கிளப்பிய ‘மாஜி’ மூர்த்தி!
by RENGANATHAN P
‘‘பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி. மேலும் ‘‘நினைத்தவுடன் எந்த சொத்தையும் பதிய முடியாது எனவும், இது எதார்த்தமாக நடந்துவிட்டது என அமைச்சர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ எனவும் கூறியுள்ளார். மதுரை ஐயர் […]
- 3 தனியார் சட்டக்கல்லூரி அங்கீகாரம் ரத்து! அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவிப்பு!
by RENGANATHAN P
இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் முறையான அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தியதற்காக 3 தனியார் சட்டக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஒழுங்கு முறை விதிகளின் படி, சட்டக் கல்லூரிகளில் சில நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட்டு, அரசு […]
- பழனி கோவில் நில மோசடி! விற்றவர், வாங்கியவர், சார்பதிவாளர் வீடுகளில் ரெய்டு!
by RENGANATHAN P
பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் […]
- ‘ஜனநாயகன்’ ரிலீஸ்! புஸ்ஸி ஆனந்தின் அன்புக் கட்டளை!
by RENGANATHAN P
வருகிற 23ம் தேதி முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ‘இப்படைத்தை த.வெ.க.வினர் திருவிழா போல் கொண்டாடவேண்டும்’ என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்தநாளன்று கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கலுக்கு படத்தை ரீலீஸ் செய்ய கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. […]
- நேற்று ஆய்வு… இன்று அரசாணை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் சமூகநீதி விடுதில் நேற்று ஆய்வு செய்து, இன்றைக்கு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதுதான் மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னையில் மழைக்கு நடுவே சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் இன்று மாலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சமயத்தில் விடுதியில் உள்ள மாணவர்கள் விஜய்யிடம் பல்வேறு புகார்களை கூறிய நிலையில் விரைவில் சரிசெய்து வழங்குவதாக விஜய் […]