Home

  • தேநீர் விருந்தில் கனிமொழி! ‘ஷாக்’கில் காங்கிரஸ்! ‘குஷி’யில் பி.ஜே.பி.!
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரிய தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இதில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் புதிய அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரியத் தேநீர் விருந்தை காங்கிரஸ், […]
  • அதிமுகவிலிருந்து விலகிய அப்சரா! மனம் திறந்து எழுதிய மடல்!
    அதிமுகவில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, திருநங்கை அப்சரா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், தற்போது அப்சராவும் கட்சியில் இருந்து விலகுவதாக பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த […]
  • ‘டாஸ்மாக்‘கைப் போல் குவாரிகளை தமிழக அரசே நடத்துமா..?
    தமிழகத்தில் அனைத்து குவாரிகளையும் அரசு நடத்தக் கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமர்லால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும். அவற்றை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், குவாரிகளில் இருந்து […]
  • மனிதனின் ‘தலைவிதி’! சிந்திக்க வைத்த மருது அழகுராஜின் பதிவு..!
    தமிழக அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி ‘குட்டு’ வைத்து எழுதுபவர்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். சமீபதில் ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ கோட்டை’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் பதிவு செய்திருந்தது மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்தான் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,‘‘தலைவிதி’’ எனும் தலைப்பில்… ‘‘ “தல”எழுதியவிதிஅதனால்அதற்குதலைவிதிஎனப் […]
  • காவல்துறையில் ஊழல் ஒழிப்பு தனி பிரிவு! சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி!
    போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி […]
  • ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ் கோட்டை!’ மருது அழகுராஜ் ஆவேசம்..!
    ‘கன்னிப் பேச்சு பேசும் உறுப்பினர்கள் கண்ணியமாக பேசவேண்டும்’ என சொந்தக் கட்சி உறுப்பினர்களுக்கே சபாநாயகர் குட்டு வைக்கும் அவலநிலை தமிழக சட்டப் பேரவையில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்தான், ‘‘புகழிழந்து போகிறது புனித ஜார்ஜ் கோட்டை..!’’ எனும் தலைப்பில் கவிஞரும், எழுத்தாளரும், தி.மு.க. கொள்கை பரப்புத் துணைத் தலைவருமான மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக தனது […]
  • கண்ணைக் கட்டும் கடன்! சட்டப் பேரவையில் கர்ஜித்த எடப்பாடி!
    “தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சி முடியும்போது ரூ.10 லட்சம் கோடி கடன் என்பது ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஓர் அரசின் […]
  • லஞ்சம், ஊழல்! கே.என்.நேருவை பாதுகாத்த திமுக அரசு! நீதிமன்றத்தில் பகீர் தகவல்!
    ‘‘ நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியும் முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேரு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். கடந்த திமுக ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் […]
  • எடப்பாடிக்கு எதிராக மீண்டும் ‘உடைத்து’ பேசிய சி.வி.சண்முகம்!
    “தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? முறையாக கூட்டணி அமைக்காதது; பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுதான் அதிமுக தொல்விக்கு மிகப் பெரிய காரணம். சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் […]
  • மேகதாது விவகாரம்! தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்!
    மேகேதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியலில் ஈடுபட உள்ளதால் தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கன்னட அமைப்புகள் இன்று மதியம் மறியலில் ஈடுப்பட உள்ளன. இதன் காரணமாகத் தமிழக – கர்நாடக எல்லையில் […]
  • தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் கொண்டு முதல்வர் !
    ‘‘அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’’ என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும், அதையும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் […]
  • சட்டசபையில் எடப்பாடிக்கு ‘ஜெ’ பாணியில் செக் வைக்கும் விஜய்!
    கடந்த 2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் விஜயகாந்துக்கு ஜெயலலிதா எப்படி நெருக்கடி கொடுத்தாரோ, அதே போல் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் விஜய் வியூகம் வகுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் வரலாறுகளை திருப்பி போட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் எந்த கட்சியும் ஆட்சியைப் பிடித்ததில்லை […]
  • விவகாரத்து வழக்கு! வாபஸ் வாங்கிய சங்கீதா! வழக்கு முடித்து வைப்பு!
    முதல்வர் விஜயிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை மனைவி சங்கீதா இன்று (ஆகஸ்ட் 7) அதை வாபஸ் பெற்றார். இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. முதல்வர் விஜய் 1999ல் சங்கீதாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பு தீவிர அரசியலில் பிரசாரம் […]