Home

  • விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் இல்லை! அப்பாவு அதிரடி!
    ‘‘தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை’’ என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது: மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிஹாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும், […]
  • ‘2026க்கு பின் திராவிடம் துடைத்து தூரவீசப்படும்!’ சீமான் ஆவேசம்!
    “தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026-க்குப் பிறகு, திராவிடம் துடைத்து தூரவீசப்படும்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பெரியார் குறித்த சர்ச்சைப் […]
  • கனிமவளக் கொள்ளை! ரூ.3,500 கோடி அபராதம்..!
    திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாய் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்து வரும் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு […]
  • வேட்புமனு ஏற்பில் குளறுபடி! தேர்தல் அதிகாரி மாற்றம்..!
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் […]
  • எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி..!
    ‘‘அரசியல் வியாபாரி’’ என தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்’’ என விமர்சித்துள்ளார் செந்தில் பாலாஜி. தமிழக மின்சாரம் மற்றும் மது […]
  • பாலியல் பலாத்காரம்! போலீசாரிடமும் விசாரணை!
    அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணையை கடுமையாக்கினர். […]
  • ‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!
    ‘டங்ஸ்டன் திட்டம் நான் முதல்வராக இருக்கும் வரை நிறைவேறாது. அப்படி நிறைவேறும் பட்சத்தில் நான் பதவியில் இருக்கமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் நெருக்கடிக்கு ஒன்றிய அரசு பணிந்த நிலையில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய முடிவு […]
  • அமெரிக்காவை விட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு! பூங்கோதை ஆலடி அருணா பேச்சு!
    ‘திராவிட மாடல் ஆட்சி’யில், ‘இன்றைக்கு அமெரிக்காவை விட தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கிறது’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை பேசியிருக்கிறார்! தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் வடக்கு ஒன்றியம் மடவார் விழாகத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும், […]
  • ‘எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்..!’ சவுக்கு சங்கர் ஆவேசம்..!
    ‘‘எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்’’ என ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கர் சரவெடியாய் வெடித்திருக்கிறார் தனது வலைதளப் பக்கத்தில்! சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் விடுதலையானார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பாசிசம் வென்றதாக வரலாறு […]
  • கதிர் ஆனந்த் கல்லூரில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!
    தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 3 நாட்களுக்கு மேலாக, கதிர் ஆன்ந்துக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். […]
  • நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம்! ‘லைட் டூட்டி’ தேவையா?
    தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது ‘லைட் டூட்டி’ தேவையா? என கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்! 2018 ஆண்டு ரூ. 24,718 கோடியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் 2022-இல் ரூ.48,478 கோடியாக அதிகரித்தது என்று இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பற்றிய இந்தியாவின் […]
  • ‘வாரிசு’ தயாரிப்பாளரை வளைத்த வருமான வரித்துறை..!
    ‘வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ‘தில்’ ராஜு வருமான வரித்துறை அதிகாரிகள் வளைத்திருப்பதுதான் தெலுங்கு திரையுலகத்தை தாண்டி தமிழ்த் திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்தார். பின்னர் படிப்படியாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த இவர் முதன்முதலில் தயாரித்த படம் தில். […]
  • ஈரோடு கிழக்கு; நள்ளிரவில் வெளிமாநில பெண்ணின் வேட்புமனு தள்ளுபடி!
    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், […]