Home

  • கரூர் துயரம்! சிபிஐ சம்மன்! மார்ச் 17ல் ஆஜராகும் செந்தில்பாலாஜி!
    கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக […]
  • திமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் யாருக்கு சீட்டு?
    சமீபத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான, ஓ.பி.ரவீந்திரநாத்தும் இணைந்தார். இணையும்போதே தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தரும் உத்தரவாதத்தை தி.மு.க.விடம் பெற்றுக்கொண்டுதான் இணைந்தாராம் ஓ.பி.எஸ்.. ‘‘ மூன்றுமுறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதி, வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதி, […]
  • த.வெ.க.வில் யாருக்கு சீட்டு? வெளியான வேட்பாளர் பட்டியல்!
    த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் […]
  • நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக எம்.பி.!
    அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவரான ஜி.கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான […]
  • விஜய் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு அன்பில் மகேஷ் ஆறுதல்!
    தவெக கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே அய்யாச்சாமிபட்டியில் மார்ச் 4-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர […]
  • சிபிஐயிடம் அவகாசம் கேட்கும் விஜய்! ‘சம்மன் வரவில்லை’! செந்தில் பாலாஜி!
    கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், தேர்தல் பணி கா ரணமாக 15 நாள் அவகாசம் கேட்டு சிபிஐக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் […]
  • திருச்சி கிழக்கு – பெரம்பூர்! விஜய் களமிறங்கும் 2 தொகுதிகள்!
    த.வெ.க. தலைவர் விஜய் நாளை விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக […]
  • கரூர் துயரம்! மீண்டும் சம்மன்! விஜய் திடீர் ஆலோசனை!
    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த […]
  • முடக்கப்படும் மக்கள் சந்திப்பு? போராட்டத்தை அறிவித்த தவெக!
    விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி தவெக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக […]
  • மானாமதுரை- பேராசிரியருக்கு வாய்ப்பு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் உ.பி.க்கள்!
    சிவகங்கை மாவட்டத்திள் உள்ள சட்டமன்றத் (தனி) தொகுதிதான் மானாமதுரை! வைகைக் கரையில் வாழ்ந்து தமிழரின் நாகரீகம் 2600 ஆண்டுகள் பழமையானது ன உலகிற்கு உரக்கச் சொல்லியே கீழடி அமைந்துள்ள தொகுதி மானாமதுரை சட்டமன்றத் தொகுதி. இங்கு நடந்த ஆறுகட்ட அகழாய்வுப் பணிகள் இந்திய வரலாற்றையே மாற்றி போட்டுள்ளனர். திருப்புவனம், இளையான்குடி ஆகிய நகரங்கள் அடங்கிய இந்தத் தொகுதியில் மண்பாண்டத் […]
  • அவதூறு பேச்சு! கோபியில் அதிமுக பேச்சாளரை ‘வழிமறித்த’ த.வெ.க.வினர்!
    கோபிசெட்டிபாளையம் அருகே, தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, தவெக தொண்டர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளான புதுக்கரைப்புதூர், பாரியூர் இந்திரா நகர், முத்துக்காளிமடை, குள்ளம்பாளையம் மற்றும் வேட்டைக்காரன் கோவில் […]
  • தேர்தலுக்கு முன் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
    ஜனவரி 9ம்தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் உள்பட எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக (அரசியல் ரீதியாக) தள்ளிப்போதனை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இருப்பினும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆகாமல் […]
  • பில்டிங் ஸ்ட்ராங்! பேஸ்மட்டம் வீக்! தொகுதி பங்கீட்டில் இழுபறி!
    தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வலுவாக கட்டமைத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. […]