Home

  • பழைய வழக்கில் புதிய சிக்கல்! அதிர்ச்சியில் ஆதவ் அர்ஜுனா!
    நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசி சர்ச்சையாகி, அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை நீதிமன்றம் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய், கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கில் த.வெ.க. நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. […]
  • சீண்டிய சி.வி.சண்முகம்..! சீறாத நயன்தாரா..!
    நடிகை நயன்தாரா பற்றி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன் ஒரு பதிவை போட்டுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்திற்கு பிரச்சாரம் களைகட்ட உள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான […]
  • 2026ல் முதல்வர் யார்? தீர்மானிக்கும் சக்தியாக மாறுமா தவெக?
    தமிழ்நாட்டின் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில்தான் திடீரென்று அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி பல மாதங்களுக்கு முன்பே உறுதியானது. விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாட்டில் அ.தி.மு.க.வை விமர்சிக்காத விஜய்! அடுத்தடுத்த பிரச்சாரங்களில் அ.தி.மு.க.வையும் கடுமையாக […]
  • புதுச்சேரியில் முறியும் கூட்டணி… ஜோஸ் மார்ட்டின் காரணமா..?
    புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி திடீரென விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து பாஜக […]
  • நேரடியாக ‘டீல்’ செய்த ஸ்டாலின்! முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!
    தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசியதைத் தொடர்ந்து தி.மு.க. & கம்யூனிஸ்டுகள் இடையேயான தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் […]
  • செந்தில் பாலாஜியிடம் துருவி துருவி விசாரணை! சிபிஐ அலுவலகத்தில் நடந்தது என்ன?
    கரூர் நெரிசலில் உயி​ரிழப்​பு​கள் தொடர்​பான வழக்​கில், டெல்​லி​யில் செந்​தில் பாலாஜி​யிடம் சிபிஐ அதி​காரி​கள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசா​ரணை நடத்​தினர். அவரிடம் சில ஆதாரங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்! கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி கரூரில் நடை​பெற்ற தமிழக வெற்​றிக் கழகத்​தின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 […]
  • தமிழகத்திற்கு ஏப்.23 தேர்தல்! மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை!
    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் […]
  • டெல்லியில் விஜய்! வெளியாகும் தேர்தல் தேதி! 2 நாளில் முக்கிய முடிவு!
    டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில்தான் தனித்துப் போட்டியா? என்.டி.ஏ.வுடன் கூட்டணியா என விஜய் இன்னும் இரண்டு நாட்களில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது. […]
  • திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி!
    தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை இருந்த கட்சிகளோடு, புதிதாக (ம.நீ.ம, தே.மு.தி.க.) இரண்டு கட்சிகளையும் மிகவும் சாதுர்யமாக இணைத்துள்ளதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைத்து கொடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராமல் இழுபறியாக […]
  • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!
    தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் […]
  • ஈரான் தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு! அமெரிக்கா அறிவிப்பு!
    ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா […]
  • உணவகம், டீக்கடைகள்… யூனிட்டுக்கு ரூ.2 மானியம்! தமிழக அரசு அதிரடி!
    ‘உணவகங்கள், டீக்கடைகள், கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவு உற்பத்தி தொழிற்கூடங்கள் எரிவாயுவுக்கு (LPG) பதிலாக மின் அடுப்புகளை பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வுக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள வணிக எரிவாயு பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலம் வரை இந்த மானியம் வழங்கப்படும்’ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது […]
  • பவானி தொகுதியில் திமுக வெல்லுமா? உச்சக்கட்ட மல்லுக்கட்டு..!
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 8 முறை அதிமுகவும், முன்று முறை காங்கிரசும், இரண்டு முறை தி-மு.க.வும், தலா ஒருமுறை பா.ம.க. மற்றும் த.மா.க. வெற்றி பெற்றிருக்கிறது. பவானி தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. 2001, 2016, 2021 ஆகிய மூன்று முறை அ.தி.மு.க. சார்பில் பவானி தொகுதியில் போட்டியிட்ட கே.சி.கருப்பண்ணன் வெற்றி […]