Home

  • ‘யார் அந்த 3வது நபர்..?’
    ‘‘எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்’’ என ஆர்த்தி ரவி விளக்கம் அளித்துள்ளார். ரவி மோகன் – ஆர்த்தி ரவி இருவருக்கும் இடையே அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆர்த்தி ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் […]
  • உருவாகிறது ‘சக்தி’ புயல்..!
    மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மே 25 முதல் 26-ல் புயலாக வலுப்பெறும். இதற்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மே 24ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தகவல் அளித்துள்ளார்.
  • சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
    தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. […]
  • ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!
    ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ராஜ்பவனில் உள்ள சுதர்மா பவனில் இருந்து […]
  • ‘பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி!’ தமிழக பாஜக கோரிக்கை!
    ‘‘பிரிவினைவாத அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் […]
  • அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ‘டாஸ்மாக்’ து.மேலாளர்!
    டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது; டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மதுபானங்கள் கொள்முதல் செய்ததில் உள்ள முரண்பாடுகள் […]
  • ‘யார் அந்த தம்பி?’ திமுக மீது அதிமுகவின் அடுத்த அட்டாக்!
    தமிழக டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறையின் விசாரணையில் இருந்து தப்பிய தொழிலதிபர் ரத்தீஷை, ‘யார் அந்த தம்பி?’ என கேள்வி கேட்டு, தி.மு.க.,வுக்கு எதிராக அடுத்த பிரசாரத்தை அ.தி.மு.க., துவக்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து, தி.மு.க., அனுதாபியாக இருந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். மாணவியை அவர் மிரட்டும் போது, ‘சார்’ […]
  • பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது!
    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், […]
  • அன்புமணியின் கட்டுப்பாட்டிற்குள் வரும் பா.ம.க.! அதிச்சியில் ‘ஐயா’!
    பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தை முக்கியமான நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், ‘பா.ம.க. ராமதாஸின் கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் அன்புமணியின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும்’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள. பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை தொடர்ந்து, 2வது நாளாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை மகளிரணி, மாணவரணி மற்றும் இளைஞரணியும் புறக்கணித்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணிப்பதால் […]
  • ‘வேலவன்’ பஸ் டூ ‘டான்’ சினிமா! சிக்கிய ஆகாஷின் பின்னணி!
    ‘டாஸ்மாக் நிறுவனத்திற்கும், ‘டான் சினிமா’ நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவதற்கான காரணம் என்ன என நினைக்கிறீர்களா… காரணம் இருக்கிறது…! தமிழ் திரையுலகில் சமீப காலமாக மிக முக்கியமான தயாரிப்பாளராக இருந்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் […]
  • த.வெ.க.வில் ‘பனிப்போர்’! ஆட்டம் காட்டும் ஆதவ் அர்ஜூனா!
    தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான ‘பனிப்போர்’ முற்றியதில் 34 பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாக்களில் (ஐ.டி.விங்) பதிவிட பிரசாந்த் கிஷோர் தலைமையிலி 60 பேர் கொண்டு குழுவினர் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்தான் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் […]
  • கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக! அதிர்ச்சியில் அறிவாலயம்!
    தூத்துக்குடி எம்.பி., கனிமொழிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதுதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்பிகளைத் தவிர்த்து, மத்திய அரசு சசி தரூரின் பெயரை தேர்வு செய்துள்ளது. இதனால் திருவனந்தபுரம் எம்.பி.க்கும் […]
  • இளைஞர்களின் வழிகாட்டி இபிஎஸ்! ராஜ் சத்தியன் புகழாரம்!
    ‘தமிழ்நாட்டின் இளைஞர்களின் வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்’ என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் பேசியிருப்பதுதான் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., சார்பில் நடந்த ரத்ததான முகாம்களில் பங்கேற்ற இளைஞர்களின் ஓட்டுகள் அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைய உதவும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் […]