Home

  • அதிதீவிர தேடுதல் வேட்டை! செந்தில் பாலாஜியை கைது செய்ய காத்திருக்கும் போலீசார்!
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமாரை கைது செய்வதல் தமிழக போலீசார் அதிதீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே […]
  • பா.ஜ.க. பிடியில் த.வெ.க.? அன்று புரோஹித்! இன்று அர்லேகர்!
    ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல் தற்போது ஆளுநராக இருக்கும் அர்லேகரும் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , ‘‘பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். மக்கள் பிரச்னைகளைத் […]
  • ‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்..!
    முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது குறித்து மகிழ்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது. நடிகரும், முதலமைச்சருமான விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்தது. இதனை […]
  • ஜூலை மாத இறுதியில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்!
    தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் பட்ஜெட் தயாரிப்புகள் குறித்து கடந்த சில நாட்களாக தலைமைச் செயலகத்தில் பல்வேறு அரசுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இந்த ஜூலை மாத […]
  • செந்தில் பாலாஜி -அசோக்குமாருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்! இனி தப்பிக்க முடியாது!
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பித்து […]
  • த.வெ.க. அரசு, அமைச்சர்கள் மீதான ‘பகீர்’ புகாரை ஆளுநரிடம் கொடுத்த நயினார்!
    “தவெக அமைச்சர்கள் பலரின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது. ஆளும் கட்சி தரப்பினர் மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. அரசு வழக்கறிஞரை நியமிக்க ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை அமைச்சர் நிர்மல் குமார் லஞ்சம் கேட்பதாக புகார் வந்துள்ளது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் […]
  • குட்கா வழக்கு… சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க, எம்.பி. – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் […]
  • லண்டன் செல்லும் மு.க.ஸ்டாலின்! உடன் பிறப்புக்களுக்கு ‘உற்சாக’ கடிதம்!
    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் அவர், அங்கிருந்து லண்டன் செல்கிறார். முன்னதாக உடன் பிறப்புக்களுக்கு ‘உற்சாக’ கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “பொழுது புலர்ந்தாலே, எல்லோருக்கும் புத்துணர்ச்சி பிறக்கும். எனக்கோ, அந்தப் புத்துணர்ச்சியோடு புது உற்சாகமும் ஊக்கமும் கிடைக்கிறது. அதற்கு உடன்பிறப்புகளான […]
  • ‘தூயசக்தி’ மீது ஊழல் குற்றச்சாட்டு! ஆளுநரை சந்தித்த நயினார்!
    தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சந்தித்து, தவெக அரசுக்கு எதிராக ஒரு புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்றைய தினம் ட்விட்டரிலும் தகவல்களை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘‘ஆரம்பமாகிறதா “தூயசக்தி”யின் ஊழல் வேட்டை தவெக ஆட்சியில் லஞ்சத்தின் அடிப்படையில் தான், அரசு […]
  • தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்! கைதானவர்கள் ‘பகீர்’ வாக்கு மூலம்!
    தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், கைது செய்யப்பட்ட 8 பேர் போலீஸாரிடம் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், ‘எங்களது தலைவர் 3 மாதத்தில் தேர்தல் […]
  • திமுக ஆட்சியில் டெண்டர் ஊழல்! புகார் அளிக்க ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்!
    கடந்த ஆட்சிகளில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் நடைபெற்றிருந்தால் என்னிடம் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சலிலோ புகார் தெரிவிக்கலாம் என பொதுப்பணி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு (DVAC) […]
  • தவெக ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது!
    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்த செந்தில் பாலாஜி ஆதாரவாளர்கள் இருவர் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் திருநாவுக்கரசு மீது […]
  • ‘நாளை த.வெ.க.வில் இணைகிறேன்!’ சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு!
    நாளை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமாக இருந்த சி. விஜயபாஸ்கர் கடந்த (ஜூன்) மாதம் 16 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது […]