- த.வெ.க.வை மீண்டும் எச்சரித்த கம்யூனிஸ்ட்!
by RENGANATHAN P
‘‘ரேஷனில் தப்பித்தவறி கை வைக்கலாம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் உங்கள் கதை முடிந்துவிடும்’’ என த.வெ.க.வுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, ரேஷன் அரிசி தொடர்பாக தவெக அமைச்சர்கள் கூறிய கருத்தை கடுமையாக சாடினார். பெ […]
- கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு! ஸ்டாலின் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு!
by RENGANATHAN P
கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. சென்னை கொளத்தூர் தொகுதியில், த.வெ.க., – எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை […]
- நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற வீடு! காப்பாற்றப்பட்ட குடும்பத்தினர்!
by RENGANATHAN P
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவுகளும், வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்த கொடூரக் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்தன. இருப்பினும், இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியிலும் நம்பிக்கையளிக்கும் ஒரு அதிசய மீட்புச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெள்ளத்தில் மற்ற அனைத்துக்கட்டிடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பச்சை நிறம் பூசப்பட்ட […]
- திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்ட நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தி.மு.க-வின் அடிப்படை […]
- காமராஜர் வழியில் மூப்பனார்! 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலியில் புகழாரம்!
by RENGANATHAN P
மக்கள் தலைவர் ஜயா ஜி.கே.மூப்பனாரின் 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 30)அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. த.வெ.க. சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசும்போது, ‘‘இந்நிகழ்ச்சியில் […]
- 21 ‘லிமிடெட்’ டெண்டர்கள் ரத்து! பின்னணியில் அறப்போர் இயக்கம்!
by RENGANATHAN P
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட சர்ச்சைக்குரிய 21 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோரப்பட்டிருந்த 21 வரம்பிற்குட்பட்ட ((Limited) டெண்டர்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ‘ அறப்போர் இயக்கம் ‘ எழுப்பிய உடனடிப் புகாரைத் தொடர்ந்து […]
- போக்சோ வழக்கில் ‘ஜெம்’ குழுமத்தின் தலைவர் வீரமணி கைது!
by RENGANATHAN P
கிரானைட் தொழிலதிபரும், ‘ஜெம்’ குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து ‘பென்டிரைவ் ஒன்றை […]
- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தடுமாறிய திமுக! ப.சிதம்பரம் பகீர் தகவல்!
by RENGANATHAN P
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தடுமாறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதி மறுவரையறைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்தம் செய்வதே பாஜக அரசின் நோக்கமாக உள்ளது’’ என்றார். தொகுதி மறுவரையறையைக் கொண்டுவந்தால் […]
- மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு! தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு!
by RENGANATHAN P
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, ‘இசட்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, […]
- மீண்டும் மருத்துவ பரிசோதனை! அமலாக்கத்துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
by RENGANATHAN P
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதியை ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி […]
- எம்.எல்.ஏ. சீட்… ரூ.4 கோடி மோசடி! சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு!
by RENGANATHAN P
சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், […]
- கைமாறும் கொளத்தூர் தொகுதி! திருச்சி வடக்கு மா.செ.வாகும் கருணை ராஜா!
by RENGANATHAN P
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. குறிப்பாக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததுதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மறுசீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டு கட்சியின் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன, குறிப்பாக, திமுகவின் கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]
- டாஸ்மாக் முறைகேடு வழக்கு! கார்த்திக்கின் ஜாமீன் மனு தள்ளுபடி!
by RENGANATHAN P
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் […]