Home

  • 10வது மாடியில் முதல்வர் அலுவலகம்! ஆடம்பரமாகும் அமைச்சர்களின் அலுவலகங்கள்!
    முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை சென்னை சட்டசபை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றி உள்ளார். அங்கு அலுவலகம் அமைப்பதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டசபை செயலகத்தில் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களை புனரமைக்க முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. […]
  • எல்லை தாண்டிய நிதிநிலை அறிக்கை! சட்டமன்ற மரபு மீறப்பட்டதா?
    தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், எதிர்வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் வரைவை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்திய நிகழ்வு, சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும். வரும் நிதியாண்டில் மக்கள் வரிப்பணம் எப்படி செலவிடப் போகிறது? வருவாய் வரவினங்கள் […]
  • காவிரி நீர் ‘அரசியலுக்கு’ முற்றுப்புள்ளி! தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!
    கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்​து​ வரு​வ​தால் அங்​குள்ள கபினி, ஹாரங்​கி, கிருஷ்ண​ராஜ​சாகர் உள்​ளிட்ட அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. இதனால் அணை​களின் பாது​காப்பு கரு​தி, தமிழகத்​துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த மே மாத இறு​தி​யில் வழக்​க​மான அளவுக்கு தென்​மேற்​குப் […]
  • இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை நீக்க கோரி விஜயபாஸ்கர்(கள்) மனு!
    தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற […]
  • ‘தி.மு.க. ஆட்சியை இழந்தது ஏன்?’ மனம் திறந்த தோப்பு வெங்கடாச்சலம்!
    “உட்கட்சி பூசலால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. நான் திமுகவுக்கு வந்தது என்னை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. ஒருநாள் கூட நான் நல்ல தூக்கம் தூங்கியது கிடையாது” என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உருக்கமாக தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், “உட்கட்சி பூசலால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. தேர்தல் தோல்விக்கு […]
  • ‘அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா?’ விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!
    “மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், […]
  • தமிழகம் வரும் ராகுல்காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்காமல் செல்வது ஏன்?
    காவிரி விவகாரம், மேகதாது அணை, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுன்றத் தேர்தல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு தமிழகம் வரும் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திக்காமல் செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கர்நாடகா உடனான காவிரி பிரச்சினையின் நடுவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழக பயணம் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் பதவியேற்பு […]
  • தூத்துக்குடியை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்த திமுக அமைச்சர்கள்! தவெக பகீர் குற்றச்சாட்டு!
    ‘தூத்துக்குடி மாவட்டத்தை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்து வருகின்றனர் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன்’ என பகீரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்! திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. தமிழக அரசியல் சூழல் அப்படியே மாறியுள்ளது. திமுகவும், அதிமுகவும் தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடியில் […]
  • ‘விஜய் கர்நாடகா வரவேண்டாம்!’ முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தல்!
    காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது; கடந்தாண்டு கர்நாடகாவில் நல்ல […]
  • டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன்!
    டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா […]
  • செந்தில் பாலாஜி முன் ஜாமீன் வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற பெண் நீதிபதி!
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி வி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மதுவிலக்கு […]
  • விஜய்யுடன் கர்நாடகா செல்லும் விஷ்ணு ரெட்டி – ஜான் ஆரோக்கியசாமி!
    தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது, மாறாக டெல்லி செல்லவேண்டும் என மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். முதல்வர் விஜய் கர்நாடக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருடன் 3 அமைச்சர்கள், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் செல்வது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜூன் 12ஆம் […]
  • ‘கைதாகக் கூடாது!’ உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற செந்தில் பாலாஜி!
    டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நிலையில், உடனடியாக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2021 முத்ல 2025ம் ஆண்டு வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடர்ந்து அதிகரித்தாலும் கூட வருவாய் என்பது […]