Home

  • ரூ.75 ஆயிரம் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு!
    கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.75,000 வரை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.17) விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்று வெளியிட்ட முதல்வர் விஜய், “தமிழக மக்கள் நம் உயிர் என்றால், தமிழக விவசாயிகள் நம் உயிர்நாடி” உலகில் ஜாதி, மதம், இனம், மொழி […]
  • ‘போதை ஒழிப்பு வெற்று வசனமே!’ தவெகவுக்கு மருது அழகுராஜ் ஆவேச கேள்வி!
    சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘போதைப் பொருட்களை ஒழிக்க த.வெ.க. அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. தி.மு.க. என்ன செய்திருக்கிறது-..?’ என கேள்வி எழுப்பியிருந்தார். ‘த.வெ.க.வின் போதை ஒழிப்பு என்பது வெற்று வசனமே!’ என்று ஆவேசமாக பதிவிட்ட தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘முதலில் இதைச் செய்யுங்க…’ என வலைளத்தில் பதிவிட்டிருப்பதுதான் வைராலாகி வருவதோடு […]
  • டெண்டர் ஊழலில் தவெக அமைச்சர்கள்! ஆடியோ ஆதாரம்! அண்ணாமலை ‘பகீர்’!
    தமிழகத்தில் அமைச்சர்கள் டெண்டர்களில் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள் எனவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த 16ம் தேதி மாலை பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த […]
  • ஆதவ் அர்ஜுனா Vs உதயநிதி! சட்ட சபையில் சரவெடி! திமுக வெளிநடப்பு!
    தமிழக சட்டசபை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கிய நிலையில் மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் மாணவரின் மரணம் தொடர்பாக அரசின் விளக்கம் ஏற்படையதாக இல்லை எனக் கூறி திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக […]
  • சீறும் சி.வி.சண்முகம்..! எகிறி அடிக்கப் போகும் எடப்பாடி பழனிசாமி!
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அடிக்கடி சீறி வரும் சி.வி.சண்முகத்துக்கு தக்க பாடம் புகட்ட எடப்பாடியார் காத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி உருவானது. அதில் இருந்த (புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர்)பலர் த.வெ.க.வில் இணைந்து விட்டனர். ஆனால், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி […]
  • தி.மு.க.வில் பதவியிழக்கும் 13க்கும் மேற்பட்ட மா.செ.க்கள்!
    திமுகவில் இளைஞர்கள் மற்றும் புதியவர்களுக்கு கட்சிப் பணிகளில் வாய்ப்பளிக்கும் வகையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. குறிப்பாக, முதல்வராக இருந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூரில் தோல்வியைத் தழுவியது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தோல்விக்கான காரணம் […]
  • தி.மு.க. மா.செ.க்கள் மாற்றமா? கோவை எதிர்பார்ப்பு..!
    கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் திமுக வலுவடைய பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வந்தாலும் இழுபறியாகவே உள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கோவை மாவட்ட திமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில் அதை ஐந்தாக மாற்றி அமைத்தது. ஆனாலும் அந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து நடந்த […]
  • தலைவர் பதவியிலிருந்து நயினாரை நீக்க வேண்டும்! முன்னாள் பாஜக நிர்வாகி ஆவேசம்!
    ‘கட்சியில் தன்னுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக அநாகரீகமாக பேசும் நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘செய்தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாக பேச தொடங்கியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, […]
  • பா.ஜ.க. கூட்டணியில் சரத்பவார்! மத்திய அமைச்சராகிறாரா கனிமொழி..?
    சமீபத்தில் சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் (கனிமொழி) தி.மு.க. கலந்து கொண்டது டெல்லியில் காங்கிரஸ், தமிழகத்தில் த.வெ.க. போன்ற கட்சிகளை உற்று நோக்க வைத்ததோடு, சில அதிர்வலைகளையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. சமீபத்தில் சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் தி.மு.க. கலந்து கொண்டது டெல்லியில் காங்கிரஸ், தமிழகத்தில் த.வெ.க. போன்ற கட்சிகளை உற்று நோக்க வைத்ததோடு, சில அதிர்வலைகளையும் […]
  • ‘அம்மாவிடம் கேட்டால் தானே…’ நாகரீகமற்று பேசிய நயினார்? அண்ணாமலை கண்டனம்!
    தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. தேர்தலுக்கு முன்பே விஜய் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் பாஜக நயினார் நாகேந்திரன். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்ததை விமர்சிக்கும் வகையில், சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று விஜய் கிண்டல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் அவரின் தாய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் […]
  • சுதந்திர தின விழாவில் முக்கியத்தும் பெற்ற திரிஷா! விமர்சனத்தில் சிக்கிய விஜய்!
    எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது எந்த நடிகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தனது உடன்பிறவா தோழிக்குக் கூட இப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் விஜய் திரிஷாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கெடுக்கிறார் என தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதல்முறையாகச் சென்னை கோட்டையில் தேசியக் கொடி […]
  • எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தி! மா.செ.க்கள் மாற்றம்! களையெடுக்கும் ஸ்டாலின்!
    முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மா.செ.க்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது! தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடு குறித்து எழுந்துள்ள விமரிசனங்களும், அதனால் கட்சித் தலைமைக்குள் உருவாகியுள்ள சலசலப்புகளும் தற்போது அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்குச் சளைக்காமல் பதிலடி கொடுப்பதோடு, சட்டமன்ற விவாதங்களில் மிகவும் […]
  • சென்னையில் நாளை ‘வி த லீடர்ஸ்’ பேரணி!
    பாஜக மாநிலத் தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை, அக்​கட்​சி​யில் இருந்து விலகி ‘வி த லீடர்​ஸ்’ எனும் மக்​கள் இயக்​கத்தை தொடங்​கி​யுள்​ளார். பொது மக்​களின் அன்​றாடப் பிரச்​சினை​களுக்கு குரல் கொடுத்து ஆதர​வைத் திரட்​டும் வகை​யில் பல்​வேறு நிகழ்​வு​களை அண்​ணா​மலை நடத்தி வரு​கி​றார். இதன் ஒரு பகு​தி​யாக, நாளை (ஆக.16) மாலை 3 மணி அளவில் சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் […]