- ‘விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமையா?’ மனம் திறந்த ரஜினி!
by RENGANATHAN P
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார். சென்னை – போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர […]
- அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள்! எப்போது நியமனம்..?
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்..! தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி […]
- சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் சி.வி.சண்முகம்! பொ.செ.வாகும் சசிகலா!
by RENGANATHAN P
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியில் சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்காக பழனிசாமிக்கு எதிராகச் சண்முகம் தரப்பு அதிரடியாகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. மறுபுறம் சண்முகம் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு செய்திருப்பதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
- விஜய் அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார். அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. […]
- எடப்பாடியை சந்திக்கிறாரா ஆளுநர் அர்லேகர்..?
by RENGANATHAN P
தமிழ்நாடு அரசியல் பரபரப்பில், தவெக அரசைச் சுற்றிய குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் அதிமுக உள்கட்சி போருக்கு வழிவகுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி அணியை குறிவைத்து, 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி நடவடிக்கை கோரிய நிலையில், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்க முயல்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான […]
- அமைச்சர் பதவி கல்தா! அந்தரத்தில் எஸ்.பி.வேலுமணி ‘அண்ட் கோ’!
by RENGANATHAN P
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியிருக்கிறது த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களின் நிலைமை! சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக […]
- ராஜ்யசபா எம்.பி.யாகும் திரிஷா! எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்!
by RENGANATHAN P
கலைஞருக்கு முரசொலி மாறன், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிக்கு மு.தம்பிதுரை என்பதைப் போல் விஜய்க்கு டெல்லியில் ‘பவர் சென்டர்’ ஆகும் வகையில் திரிஷாவுக்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி […]
- ‘எடப்பாடியின் நீக்கம் செல்லாது!’ வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை!
by RENGANATHAN P
‘அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கிய பழனிசாமியின் அறிவிப்பு செல்லாது. நீக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள்’ என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி, துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘அதிமுக இன்று தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த எஃகுக் கோட்டையின் […]
- விஜய் மீது பாயும் சிபிஐ வழக்கு! ‘இடி’யை இறக்கிய இன்பதுரை!
by RENGANATHAN P
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப் பதியப்பட வாய்ப்புள்ளதாக ‘இடி’யை இறக்கியிருக்கிறார் இன்பதுரை எம்.பி.! தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு குதிரை பேரம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வரின் முன்னரே எதிர்க்கட்சிகள் […]
- ஊழல் ‘மாஜி’ மந்திரிகள்… விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!
by RENGANATHAN P
‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு […]
- தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்? ரேஸில் 6 பேர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் நிர்வாக ரீதியில் பல்வேறு […]
- ஜூன் 21ம் தேதி ‘நீட்’ மறுதேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
by RENGANATHAN P
வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது […]
- உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2026-ல், […]