Home

  • ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்!’ துரை வைகோ பேச்சு!
    “தவெக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. ஆளுங்கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ரூ.13.18 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறப்பபட்டுள்ளது. இது இதுவரை இல்லாத கடன் அளவாகும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 17) […]
  • சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இருவர் ராஜினாமா? ‘மறுமலர்ச்சி’யுடன் விஜய்!
    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று அ.தி.மு.க, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பொதுவான விமர்சனத்தை வைத்தன. ஆனால், இன்றைக்கு பொன்விழா கண்ட கட்சியும், வெள்ளி விழா கண்ட கட்சியும் வியக்கும் அளவிற்கு ‘அரசியல்’ செய்து வருகிறார் முதல்வர் விஜய்! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே நான்கு பேர் ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்த நிலையில் நேற்று […]
  • திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்!
    திருச்சி சூர்யா, முக்தார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 3-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்புப்படுத்தி ‘யூடியூபர்’ முக்தார் அகமது, திருச்சி […]
  • முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் வழக்கு!
    திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். […]
  • எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்!
    விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் அளித்தார். சி.விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். […]
  • பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம்! ‘அனுபவமற்ற முதல்வர்!’ எச்சரித்த எடப்பாடி!
    “தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். சுமை தூக்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதைப் போல் தவெக அரசு விவசாயிகளை ஏமாற்றக் கூடாது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
  • சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எஸ்.பி.வேலுமணி? காரணம் இதுதான்!
    தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதம் 18ம் தேதி சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை அ.தி.மு.க.வின் சீனியரான எஸ்.பி.வேலுமணி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவரிடம் பேசினோம். ‘‘தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு […]
  • பயிர்க்கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய்யின் புதிய அறிவிப்பு!
    கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ. 50,000 பயிர்க்கடன் தள்ளுபடி என்று தவெக அரசு அறிவித்திருந்தது. சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.50 ஆயிரம் வாங்கியிருந்தால் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி என அறிவித்திருந்த […]
  • எம்எல்ஏக்களுக்கு பயிற்சி முகாம்! பாஜக, பாமக பங்கேற்பு! திமுக புறக்கணிப்பு!
    சட்டப் பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மற்றும் நாளை (17-ம் தேதி) […]
  • டெண்டர் முறைகேடு! முதல்வரின் ரகசிய குழு! திமுக ‘மாஜி’க்களுக்கு செக்!
    கடந்த தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொதுப்பணித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறை டெண்டர்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடியதாக முதல்வர் விஜய்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரகசிய குழு ஒன்றை அமைத்து, முறைகேடுகளை புள்ளிவிபரங்களுடன் கேட்டுப் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத் […]
  • 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! அதிமுக வழக்கு! தள்ளிப் போகும் இடைத்தேர்தல்?
    அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்தும், நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். த.வெ.க. அரசின், கடந்த மே 13 ஆம் தேதி பெரும்பான்மை […]
  • விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
    முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட பிரச்னையால் விஜய் சங்கீதா தம்பதி பிரிந்து வாழ்ந்து […]
  • ‘அரசுனு எதுவும் உள்ளதா?’ 3 வயது குழந்தை பாலியல் கொடுமை! கனிமொழி காட்டம்!
    கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் அரசு என எதுவும் உள்ளதா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தொழில் […]