- எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி தரப்பு ‘ஷாக்’ எச்சரிக்கை!
by RENGANATHAN P
“கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் ஆர்டிக்கல் 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்’’ என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்பதுரை எம்.பி., வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கட்சித் தாவல் தடைச் […]
- முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளி […]
- ‘சாதிய இறுக்கத்திலிருந்து விடுபடாத தமிழகம்!’ திருமாவளவன் ஆதங்கம்!
by RENGANATHAN P
“சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது. திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், அது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் […]
- அரசியலில் இருந்து ஓய்வு… ஸ்டாலினுக்கு ‘ஷாக்’ கொடுத்த பி.டி.ஆர்.!
by RENGANATHAN P
அரசியலில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதார் பத்ருதீனிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இன்று (மே 18) பிடிஆர் அறிக்கை ஒன்றை […]
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய செம்மலை!
by RENGANATHAN P
அ.தி.மு.க. தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போது, பக்கபலமாக இருந்தவர்தான் சேலத்தைச் சேர்ந்த செம்மலை. அதிமுக மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில் எடப்பாடி தலைமையிலானோர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மறுபுறம் எஸ்பி வேலுமணி- சி வி சண்முகம் […]
- ‘விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமையா?’ மனம் திறந்த ரஜினி!
by RENGANATHAN P
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார். சென்னை – போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர […]
- அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள்! எப்போது நியமனம்..?
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்..! தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி […]
- சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் சி.வி.சண்முகம்! பொ.செ.வாகும் சசிகலா!
by RENGANATHAN P
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியில் சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதற்காக பழனிசாமிக்கு எதிராகச் சண்முகம் தரப்பு அதிரடியாகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது. மறுபுறம் சண்முகம் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாட பழனிசாமி தரப்பு முடிவு செய்திருப்பதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
- விஜய் அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார். அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. […]
- எடப்பாடியை சந்திக்கிறாரா ஆளுநர் அர்லேகர்..?
by RENGANATHAN P
தமிழ்நாடு அரசியல் பரபரப்பில், தவெக அரசைச் சுற்றிய குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் அதிமுக உள்கட்சி போருக்கு வழிவகுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி அணியை குறிவைத்து, 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி நடவடிக்கை கோரிய நிலையில், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்க முயல்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான […]
- அமைச்சர் பதவி கல்தா! அந்தரத்தில் எஸ்.பி.வேலுமணி ‘அண்ட் கோ’!
by RENGANATHAN P
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாறியிருக்கிறது த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்களின் நிலைமை! சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக […]
- ராஜ்யசபா எம்.பி.யாகும் திரிஷா! எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்!
by RENGANATHAN P
கலைஞருக்கு முரசொலி மாறன், எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமிக்கு மு.தம்பிதுரை என்பதைப் போல் விஜய்க்கு டெல்லியில் ‘பவர் சென்டர்’ ஆகும் வகையில் திரிஷாவுக்கு விரைவில் ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி […]
- ‘எடப்பாடியின் நீக்கம் செல்லாது!’ வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை!
by RENGANATHAN P
‘அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கிய பழனிசாமியின் அறிவிப்பு செல்லாது. நீக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள்’ என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி, துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘அதிமுக இன்று தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த எஃகுக் கோட்டையின் […]