- ‘பிகிலும்… திகிலும்..!’ மர்மம் உடைக்கும் மருது அழகுராஜ்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வின் ஆதரவில் த.வெ.க.வை பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என ‘பிகிலும்… திகிலும்-..!’ எனும் தலைப்பில் மர்மத்தை உடைத்திருக்கிறார் மருது அழகுராஜ்! தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்… ‘#பிகிலும்… #திகிலும்..’ எனும் தலைப்பில், ‘‘வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழலில் ஊறிய உத்தமர்களை எல்லாம் ஏற்கெனவே தத்தெடுத்து வைத்திருக்கும் பாஜக… […]
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி! ஆதரவு 144! எதிர்ப்பு 22! நடுநிலை 5!
by RENGANATHAN P
புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் கூடியது. தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை […]
- குதிரை பேரத்தில் த.வெ.க.! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதல்வர் விஜய் ஆதரிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான். கட்சி நிர்வாகிகளின் பெருமித்த ஆதரவோடு நான் இந்த பொறுப்பிற்கு வந்தேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்தோம். இந்த […]
- சி.வி.சண்முகம் அலுவலகத்தில் விஜய்! அமைச்சர் பதவிக்காக உடையும் அதிமுக!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முக அணியினரை சந்தித்துப் பேசியது அதிமுகவில் சலசலப்பை கூட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். […]
- தவெகவுக்கு தாவிய அமமுக எம்.எல்.ஏ. நீக்கம்! டிடிவி அதிரடி!
by RENGANATHAN P
‘தவெகவுக்கு தன்னிச்சையாக ஆதரவளித்துள்ள அமமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் […]
- முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு முக்கிய அரசு பதவி!
by RENGANATHAN P
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. […]
- மே 14ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றி கழகம்’ வெற்றி பெற்று ச.ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றார். தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்த சூழலில்தான் முதன் முறையாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 14ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 14ம் […]
- வினாத்தாள் கசிந்த விவகாரம்… நீட் தேர்வு ரத்து..!
by RENGANATHAN P
நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். ராஜஸ்தான் […]
- சபாநாயகர் மரபு… பேரவையில் ‘குட்டிக் கதை’ சொன்ன முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
சட்டப்பேரவைத் தலைவராக ஜேசிடி பிரபாகர் இன்று தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், துணை சபாநாயகராக ரவிசங்கர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் சபநாயகர், துணை சபாநாயகருக்கான வாழ்த்துரைகளை […]
- ‘தூயசக்தி’களுக்கும் வாழ்வளித்த ‘பராசக்தி’யே! மருது அழகுராஜ் சூசகம்!
by RENGANATHAN P
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ‘2026 தேர்தல் தீயசக்திக்கும், தூயசக்திக்கும் இடையேதான் போட்டி’ என தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த விஜய், ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தார். தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘வரும் காலம்’ எனும் தலைப்பில் தனது வலைதளப்பக்கத்தில் ‘துயசக்தி(-?)களுக்கும் வாழ்வளித்த […]
- திமுக கூட்டணி அமைக்க முயற்சித்த எடப்பாடி! தவெகவுக்கு அதிமுக ஆதரவின் பின்னணி?
by RENGANATHAN P
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் […]
- இரு துருவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
1977 எம்.ஜி.ஆரின் சாதனையை முறியடித்த விஜய், அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறி வந்த நிலையை முறியத்தவர், இன்றைக்கு இரு துருவ அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த […]
- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!
by RENGANATHAN P
திமுக ஆட்சிக்காலத்தில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதன்மூலம் […]