- பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… எச்சரித்த முதல்வர் விஜய்..!
by RENGANATHAN P
“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ம் தேதி […]
- ‘தங்கம், குட்டி’யால் ‘கெட்டி’யாக சிக்கும் ‘மாஜி’ மந்திரி..!
by RENGANATHAN P
தி.மு.க. ஆட்சி முடிந்து த.வெ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி […]
- ‘த.வெ.க. அரசில் ஊழல் குறைந்துள்ளது!’ அன்புமணி பெருமிதம்!
by RENGANATHAN P
“தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதல்வரை சந்தித்து தமிழகத்தில் சாதி […]
- முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்காது ஏன்? அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!
by RENGANATHAN P
“முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.” என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், […]
- பிரபல பாருக்குள் பாலியல் தொழில்! பாய்ந்து பிடித்த ‘சிங்கப் பெண்’!
by RENGANATHAN P
பிரபலமான பாரில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் போதையின் உச்சத்திற்கு கொண்டு சென்று, பலான தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தட்டித் தூக்கியிருப்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஹைதராபாத் கூகட்பல்லி பகுதியில் உள்ள ‘கிளப் மஸ்தி’ எனும் பார் வெகு பிரசித்தம். இதனை ‘குயின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்றும் அழைப்பர். இங்கு இரவில் நிபந்தனைகளை […]
- தேர்தல் தோல்விக்கு யார் காரணம்? சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!
by RENGANATHAN P
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஸ்டாலின் ஆலோசித்தாரம். அடுத்த ஓரிரு நாட்களில் ஸ்டாலின் சில அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி […]
- லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு..?
by RENGANATHAN P
நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 2,538 பணி நியமனங்களுக்கு ரூ.650 கோடி […]
- உதயநிதி Vs விஜய் Vs அண்ணாமலை! தமிழக அரசியலில் ‘தலைமுறை’ மாற்றம்!
by RENGANATHAN P
முதன் முறையாக இந்திய அரசியல் வரலாற்றில் தலைமுறை மாற்றத்தை தமிழக அரசியல் களம் சந்தித்து வருகிறது. அரை நூற்றாண்டு காலமாக தி.மு.க., அ.தி.மு.க.வைச் சுற்றியே வந்த நகர்வுகள் தற்போது மாறியிருக்கின்றன! பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனது புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசியலின் எதிர்காலம் “உதயநிதி ஸ்டாலின் Vs தளபதி விஜய் Vs கே.அண்ணாமலை” […]
- தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜூன் 18ம் தேதி தொடக்கம்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், இதுவரை 3 முறை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், […]
- திருச்சி கிழக்கில் களமிறங்கும் விஜய்யின் ‘நிழல்’!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் விஜய்யின் மேனேஜரும், ரூட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெகதீஷ் பழனிசாமி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், அவருக்கு விஜய் வாய்ப்பு அளிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த நகர்வுகளால் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் […]
- அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு! அடுத்தது என்ன..?
by RENGANATHAN P
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனிடம் ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை அளித்திருந்தார். இந்நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புதிய கட்சி தொடங்கப் […]
- 2026ல் இன்பதுரை (எம்.எல்.ஏ) வெற்றி செல்லாது! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
by RENGANATHAN P
2016 சட்டமன்ற தேர்தலில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவுவை வீழ்த்தி இன்பதுரை வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த அளவில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. ஜெயலலிதா தலைமையில் களமிறங்கியிருந்த அதிமுக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்து. குறிப்பாக ராதாபுரம் தொகுதியில், ஐ.எஸ்.இன்பதுரை ஜெயித்ததாக தேர்தல் […]
- போதை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… மகேஷ் குமார் அகர்வால் அதிரடி!
by RENGANATHAN P
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால். பின்னர், அவர், ‘‘போதைப் பொருட்கள் கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த நிலையில், தற்போது கூட்டணி ஆட்சிதான் நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமையும் முன்னர் […]