- HD பிரிண்ட்டில் ‘ஜனநாயகன்’! டி.ஜி.பி.யிடம் புகார்! KVN நிறுவனம் எச்சரிக்கை!
by RENGANATHAN P
ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டதால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுமார் 500 கோடி ரூபாய் […]
- காலம் கடந்து வந்த விஜய்! காரைக்குடி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!
by RENGANATHAN P
காரைக்குடி தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, பிரச்சாரம் நடக்கும் இடத்துக்கு வந்ததால், தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் காரைக்குடியில் விஜய் பேசாமல் திரும்பிச் சென்றார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காவல் துறை அனுமதியும் அளித்திருந்தது. காரைக்குடியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாக […]
- விஜய்யின் சைக்கிள் பயணம் – ரோடு ஷோ..! கலகலக்கும் காரைக்குடி!
by RENGANATHAN P
காரைக்குடி பரப்புரைக்கு செல்லும் விஜய், இடையில் சைக்கிளில் சென்றபோது, தொண்டர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் விஜய் தனது கட்சி தொண்டர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை […]
- விஜய்க்கு அனுமதி! உதயநிதிக்கு மறுப்பு! கடலூர் பிரச்சாரத்தில் ‘ட்விஸ்ட்’!
by RENGANATHAN P
கடலூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரம் காரணமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்தந்த கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரம், பரப்புரை என தேர்தல் களமே சூடு பிடித்துள்ளது.இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு பிற்பகல் […]
- மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! மருத்துவமனைக்கு ஓடிய அமைச்சர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பளார்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில்தான் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளரை, மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று தி.மு.க. அமைச்சர் நலம் விசாரித்த சம்பவம்தான் நெகிழச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருவிடைமருதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துவிட்டு […]
- விதிகள் மீறப்பட்டால் மே.வங்கத்திற்கு மறுதேர்தல்! ஆணையம் எச்சரிக்கை!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிதகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக அங்கு தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த முறை தேர்தல் ஆணையம் விதிகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தத் தயாராகி வருகிறது. விதிகளை மீறினால் மறுதேர்தல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, வாக்குச்சாவடி அதிகாரிகள் […]
- மாம்பழம் சின்னம் ! டாக்டர் ராமதாசுக்கு ‘பேரிடி’!
by RENGANATHAN P
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. உட்கட்சி பிரச்னை தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உரிமையியல் […]
- தலைமைச் செயலாளர் மாற்றம்! அதிகார அத்துமீறலின் உச்சம்! ஸ்டாலின் ஆவேசம்!
by RENGANATHAN P
தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாஜகவை ஆதரித்து நேரில் பரப்புரை செய்ய களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை […]
- தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!
by RENGANATHAN P
தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு […]
- திமுக கூட்டணியும், பா.ஜ.க கூட்டணியும் ஒன்றுதான்! நெல்லையில் பொங்கிய விஜய்!
by RENGANATHAN P
தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், இன்று தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக நெல்லை வந்து, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். நெல்லை மக்களிடம் உரையாற்றிய அவர், உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.விஜய் பேசுகையில்,“என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களே! உங்களுக்கு என் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க மகன், உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க தோழன், […]
- விஜய் உருவ சிலையுடன் திருவெறும்பூர் வேட்பாளர் ‘நூதன’ தேர்தல் பிரச்சாரம்!
by RENGANATHAN P
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜய், விஜய் சிலையுடன் ‘நூதன’ முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதை மீறி தேர்தல் பிரச்சாரத்துக்க வந்தால் அவர் மீது வழக்குகள் பதியப்படுவதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், விஜய் தேர்தல் […]
- ‘எடப்பாடி’ தொகுதி தவெக வேட்பாளர் மாயம்! திமுக மனு நிறுத்தி வைப்பு!
by RENGANATHAN P
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் போட்டியிடும் நிலையில் வேட்புமனு பரிசீலனை நாளான இன்று திடீரென்று மாயமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியாகும். கடந்த 2011, […]
- ரூ.1,020 கோடி ஊழல் புகார்! நேருவின் அஸ்திவாரத்தை அசைத்த E.D. ! சிக்கும் அதிகாரிகள்?
by RENGANATHAN P
தமிழக அமைச்சரவையில் ‘பசை மிக்க’ துறையாக பார்க்கப்படுவது நகராட்சி நிர்வாகத்துறை! தற்போது இந்தத் துறை, அமைச்சர் கே.என்.நேருவைச் சுற்றி எழுந்துள்ள 1,020 கோடி ரூபாய் ஊழல் புகாரால் நிலைகுலைந்து போயிருக்கிறது. அமலாக்கத்துறை, தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள 252 பக்க ரகசிய ஆவணங்கள், ஆளுங்கட்சியின் தூக்கத்தைக் கலைத்துள்ளன! இந்த விவகாரத்தின் தொடக்கமே ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த […]