- திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!
by RENGANATHAN P
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், சிபிஎம், விசிக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வெவ்வேறு கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்ற […]
- எரிவாயு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்! பாஜக கண்டனம்!
by RENGANATHAN P
பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு விலை உயர்ந்து விட்டதாக சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈரான்-அமெரிக்க யுத்ததையடுத்து இந்தியாவில் வீடுகளுக்கான சமையல் 14.2 […]
- த.வெ.க. அலுவலகத்திற்கு தீ! சிசிடிவியில் சிக்கிய இருவர்..!
by RENGANATHAN P
ருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பனியன் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைப்பு செய்த காட்சிகள் சிசிடிவியில் […]
- ‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்!’ பிரேமலதா விஜயகாந்த்!
by RENGANATHAN P
‘‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்” என தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்; எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு […]
- ‘மேல் 4ல் மகுடம் சூடும் ஸ்டாலின்!’ மருது அழகுராஜ் ஆருடம்..!
by RENGANATHAN P
2021ல் ஸ்டாலினுக்கு ‘கட்டம் சரியில்லை’ முதல்வராக முடியாது என அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். ஆருடங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’ என்று கூறி பதவியேற்ற போது அனைவரும் வியர்ந்து பார்த்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் உச்ச நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற பேச்சுக்கள் […]
- மது போதையில் சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர்..!
by RENGANATHAN P
சட்டப்பேரவைக்கு மது போதையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வந்தார். இந்த செயல் அவமானம் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதனால் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் பெரும் […]
- அதிமுகவிற்கு அபரிமிதமான வெற்றி! கடம்பூர் ராஜு நம்பிக்கை..!
by RENGANATHAN P
தமிழகத்தில் 2026 ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்த, தேர்தலுக்கு முந்தய கருத்து கணிப்புகளும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் இந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றிபெறும் என அறிவித்திருந்தது. எனவே, அரசியல் தலைவர்கள் பலரிடமும் இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் […]
- தமிழகத்தில் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இடமாற்றம்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணமோசடி வழக்கையும், நடிகர் விஜயின் விவாகரத்து வழக்கையும் விசாரித்து வந்த நீதிபதிகள் மாற்றப்பட்டிருப்பது சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் 95-க்கும் மேற்பட்ட நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி […]
- அன்று கூவத்தூர்..! இன்று பனையூர்..! உஷாரான விஜய்..!
by RENGANATHAN P
“வெற்றி பெற்றதும் எங்கும் தங்காமல் உடனடியாக பனையூருக்கு வந்துவிட வேண்டும்’’என்று தவெக வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியாகின. பெரும்பாலான கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் […]
- ஆட்சி அமைக்கும் அதிமுக? கவனிக்க வைத்த 2 கருத்துக் கணிப்புகள்!
by RENGANATHAN P
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தக்க வைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் கணிப்பில் பெரும்பாலும் திமுக ஆட்சியைத் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக என்டிடிவி, ரிபப்ளிக் டிவி,சாணக்கியா ஸ்ட்ராடஜிஸ், கருத்துக் கணிப்பின்படி திமுக […]
- தவெக வேட்பாளருக்கு பாதுகாப்பு! ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
by RENGANATHAN P
துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு அமைச்சர் சேகர்பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தல் வழக்கில், அதில், வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ம் தேதி அமைச்சர் […]
- ‘Exit Poll’! தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?
by RENGANATHAN P
தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. VOTE VIBE மற்றும் JVC டைம்ஸ் நவ் நிறுவன கருத்துக் கணிப்புகளில் அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 […]
- மேற்கு வங்கத்தில் 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குப்பதிவு!
by RENGANATHAN P
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் மாலை 5 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 89.99 சதவீதம் வாக்குப் பதிவாகியிருக்கிறது. அதாவது, 90 சதவீதத்தை வாக்குப் பதிவு […]