- குதிரை பேர அரசியல்! திமுக, அதிமுக அதிரடி முடிவு!
by RENGANATHAN P
“முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் […]
- எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
by RENGANATHAN P
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஜூலை 13-ந் தேதி மேல்முறையீடு செய்துள்ளது. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ”திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் […]
- கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் தேவை! Dr.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
by RENGANATHAN P
‘‘தமிழகத்தில் தற்போது நிலவிவரும் குதிரை பேர அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: ‘‘தமிழகத்தில் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான் எனது கோரிக்கை. திமுக, அதிமுக, […]
- ஜெ.வின் போயஸ் இல்லத்தை வாங்குகிறாரா முதல்வர் விஜய்..?
by RENGANATHAN P
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, தற்போதைய முதலமைச்சர் விஜய் ரூ.350 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலாங்கரையிலிருந்து தினமும் 18.5 கி.மீ தூரம் அவர் தலைமை செயலகத்திற்கு பயணிப்பதால், பாதுகாப்பு பணிகளால் மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. போயஸ் கார்டனுக்கு குடியேறுவதன் மூலம், […]
- ‘ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க. ஆட்சி முடிந்துவிடும்!’ ராஜேந்திர பாலாஜி பேச்சு!
by RENGANATHAN P
சமீபத்தில் கரூரில் பேசிய விஜய், ‘‘ தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்’’ என்றார் விஜய் பேசியது உண்மை என்பதற்கு வலுசேர்க்கும் வகையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, […]
- முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது வழக்குப் பதிவு! அதிர்ச்சியில் அறிவாலயம்!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி, எவ வேலு, கே என் நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்த திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார்களும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது நில அபகரிப்பு புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னையைச் சேர்ந்த […]
- 2031ல் தமிழகத்தில் அண்ணாமலையின் ஆட்சி! பொள்ளாச்சியில் சூளுரை!
by RENGANATHAN P
’வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் அரசியல் கட்சியாக மாறும். 2031-ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என, பொள்ளாச்சியில் நடந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசியதாவது: பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்போடும் […]
- ‘இனி திமுக எழுந்திருக்கவே கூடாது!’ கரூரில் கர்ஜித்த முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
“நம் அனைவருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார். கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில், “ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும், சில […]
- கரூர் அரசு பணி! மனிதாபிமானத்தின் மறுவுருவமாக மாறிய ஜி.கே.வாசன்!
by RENGANATHAN P
த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து வரும் நிலையில், ‘அரசு பணி வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்’ என மனிதாபிமானத்தின் மறுவுருமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். ‘‘கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதை மனிதாபிமான […]
- ‘அரசியல் பணி தேர்வாணையம்!’ விஜய்யை விமர்சித்த மருது அழகுராஜ்!
by RENGANATHAN P
கரூர் விஜய் பரப்புரை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்குவதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளே எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. கரூரில் விஜய்யை பார்க்க வந்து உயிரிழந்த குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு பணி வழங்குவதற்கு தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காரணம், சி.பி.ஐ. விசாரணை நடந்துகொண்டிருக்கும் […]
- சென்னை- புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
by RENGANATHAN P
சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நசீர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் நசீர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு […]
- குதிரை பேரம் வழக்கு! செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!
by RENGANATHAN P
குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை […]
- ஃபைவ் ஸ்டார் ஓட்டல்! ஃபாரின் சரக்கு! டிஜிட்டல் பரிவர்த்தனை! அரசகுமாரின் அதிர வைக்கும் வாக்குமூலம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் மதுவிருந்து அளித்தது, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் வசூலித்தது […]