- 2021 டூ 2026! ஈரோடு திமுகவில் தொடரும் ‘தேர்தல்’ உள்குத்து!
by RENGANATHAN P
கடந்த 2021ல் சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் சீனியர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளடி வேலைகளால் தோற்கடிக்கப்பட்டார்! அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவல்கள்தான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பற்றி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நடுநிலையான சீனியர் உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், சுப்புலட்சுமி […]
- ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைய ஒப்புதல்!
by RENGANATHAN P
ஆம் ஆத்மி கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இணைப்புக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஏழு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டதை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். […]
- மே 4ம் தேதி யாருடைய ‘கணக்கு’ பலிக்கும்..?
by RENGANATHAN P
கடந்த காலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஓரளவு பலித்திருக்கிறது. அதுவும் ‘எக்ஸிட் போல்’ கருத்துக்கணிப்புகள் ஓரளவு கள நிலவரத்தை உணர்த்தியிருக்கிறது. ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளையும் சரி, ‘எக்ஸிட் போல்’ கணிப்புகளையும் எந்தளவிற்கு நம்ப முடியும்? என்ற கேள்விகளையே எழுப்பியிருக்கிறது. காரணம், த.வெ.க. என்ற புதிய கட்சி திராவிடக் கட்சிகளின் அஸ்திவாரத்தையே கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. தமிழக […]
- ‘மே 4ம் தேதி’க்கு முன்பாகவே ‘கொண்டாடிய’ திரிஷா..!
by RENGANATHAN P
மே மாதம் 4ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய திரிஷா, அதற்கு முன்பாகவே பிறந்த நாளை கொண்டாடியது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் […]
- லாட்ஜில் இளம்பெண்..? காவல்துறை கடும் கட்டுப்பாடு!
by RENGANATHAN P
தமிழகத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் கொலை, தற்கொலை மற்றும் போதைப்பொருள் பதுக்கல் போன்ற தொடர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விடுதி உரிமையாளர்களுக்கு சென்னை காவல்துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி அடையாள அட்டை விபரங்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கத் தவறினால் விடுதி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை […]
- அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? டெல்லியில் நடக்கும் மூவ்!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஓரிரு தினங்களில் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்கிற தகவல்தான் சத்தியமூர்த்தி பவனை மேலும் சூடேற்றியிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி அவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியிலேயே நிறைவடைந்துவிட்டது. அழகிரி மீது ஏராளமான புகார்கள் தலைமைக்கு […]
- அடுத்த முதல்வர் விஜய்..! அடித்துச் சொல்லும் ஜோதிடர்கள்..!
by RENGANATHAN P
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவிருக்கும் முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அரசியல் களம் ஒருபுறம் பரபரப்பாக இருக்க, மறுபுறம் ஜோதிட உலகம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ குறித்து அதிரடியான கணிப்புகளை வெளியிட்டுள்ளது. “விஜய் அரியணை ஏறுவது உறுதி” எனப் பல ஜோதிட நிபுணர்கள் அடித்துச் சொல்லத் தொடங்கியுள்ளனர். […]
- கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
by RENGANATHAN P
கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் பேட்ஸ்மேனாக படைத்திருக்கும் சாதனை என்ன என்பது குறித்து பார்ப்போம். […]
- பிஜேபியின் பிளான் ‘B’! தவெகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை யாரும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. காரணம், விஜய் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போதைய அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு […]
- அனுமதியின்றி கனமவளங்கள் எடுத்தால் குண்டர் சட்டம்!
by RENGANATHAN P
ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் இருந்து அரசின் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி யெடுத்து, வாகனங்களில் கடத்திச் […]
- ஆம் ஆத்மி கட்சியை ‘முடித்த’ பா.ஜ.க.!
by RENGANATHAN P
ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் முன்னிறுத்தி, எந்தவிதமான தனி அரசியல் கோட்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (AAP), இன்று தன் வரலாற்றிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லி அரசியல் களத்தில் அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், ஒரு கட்சிக்கு “கொள்கை” (Ideology) எவ்வளவு முக்கியம் என்பதை உரக்கச் […]
- மே 4ம் தேதி (ரிசல்ட்) ஆஸ்திரேலியா செல்லும் விஜய்!
by RENGANATHAN P
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் […]
- ‘அவரே தொடர்கிறார்’! மருது அழகுராஜ் ஆருடம்..!
by RENGANATHAN P
திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு தி.மு.க.வினரைத் தாண்டி அனைத்துக் கட்சியினரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக மருது அழகுராஜ் […]