- 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! அதிமுக வழக்கு! தள்ளிப் போகும் இடைத்தேர்தல்?
by RENGANATHAN P
அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்தும், நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். த.வெ.க. அரசின், கடந்த மே 13 ஆம் தேதி பெரும்பான்மை […]
- விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட பிரச்னையால் விஜய் சங்கீதா தம்பதி பிரிந்து வாழ்ந்து […]
- ‘அரசுனு எதுவும் உள்ளதா?’ 3 வயது குழந்தை பாலியல் கொடுமை! கனிமொழி காட்டம்!
by RENGANATHAN P
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் அரசு என எதுவும் உள்ளதா என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தொழில் […]
- த.மா.கா.விலிருந்து விலகிய யுவராஜா! த.வெ.க.வில் ஐக்கியமா..?
by RENGANATHAN P
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். கூட்டணியிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியேறியுள்ளது. அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகியான ஈரோடு யுவராஜா […]
- ‘கனத்த இதயத்துடன் விலகுகிறேன்!’ எடப்பாடிக்கு கவுதமி கடிதம்!
by RENGANATHAN P
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பொறுப்பு வகித்த நடிகை கவுதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி எழுதியுள்ள கடிதத்தில், “இன்று (14/06/2026) முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, […]
- ‘விஜய்யை வீழ்த்த கனிமொழி திமுக தலைவர் ஆகனும்!’
by RENGANATHAN P
‘தமிழகத்தில் த.வெ.க.வின் அசுர வளர்ச்சியை தடுத்து தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அக்கட்சியின் தலைவராக கனிமொழியால் மட்டுமே முடியும்’ என தமிழக அரசியல் களத்தில் உண்மை நிலவரத்தை பத்திரிகையாளர் யாதார்த்தமாக பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை பெரும் […]
- ஜூன் 17ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
by RENGANATHAN P
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சட்டப்பேரவைக் கட்சியின் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 17-06-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” […]
- அறிவாலயத்தில் ‘மணி’யோசை? கொங்கு மண்டல திருப்பம்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் ஆகியோர் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில்தான், கொங்குமண்டலத்தில் கோலோச்சிய எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு அறிவாலயத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அறிவாலய வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், அ.தி.மு.க.வின் தாய்க்கழகம் தி.மு.க.தான். தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றுதான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கி […]
- தவெகவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம்! கரையும் அதிமுக! கரைசேருமா திமுக?
by RENGANATHAN P
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தமிழக வெற்றிக் கழகம். ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்காவிட்டாலும், 108 (இரண்டு தொகுதிகளில் விஜய் வெற்றி) தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைப் பிடித்தது வரலாற்றை தகர்த்தெறிந்து உடைத்திருக்கிறது. அதாவது, பணப்பட்டுவடாவுக்கு முற்றுப்பள்ளி… கட்டமைப்பு இல்லாமலேயே வெற்றி… என கருத்துக்கணிப்புக்களை எல்லாம் தவிடு […]
- உயிர்ப்பித்த ஊழல் வழக்கு! வைத்திலிங்கத்திற்கு வைக்கப்பட்ட செக்!
by RENGANATHAN P
முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஒரத்தநாடு வைத்திலிங்கம் மீதான முடித்து வைக்கப்பட்ட ஊழல் வழக்கு உயிர்ப்பித்திருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற அனுமதிக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
- அண்ணாமலை கட்சியில் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!
by RENGANATHAN P
நடிகர்கள் பலரும் ‘மக்களுக்கு சேவை’ செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர். இதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. தமிழகம் முழுவதிலும் 1980ம் ஆண்டே ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜயகாந்தால் 2011ல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பிடிக்க முடிந்தது. அதன் பிறகு அக்கட்சியும் பெயருக்குதான் இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சி […]
- கட்டுக் கடங்காத கடன் ! தவெகவுக்கு தாவும் அதிமுக புள்ளிகள்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடும் என நினைத்து பலரும் பல கோடிகளை வாரியிறைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் இந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களிடம் முன்கூட்டியே ‘10 சி’ கொடுத்தவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டது. பல ‘மாஜி’க்கள் ‘10 சி’ கொடுக்க தயங்கியதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு பைசா கூட செலவு […]
- 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!
by RENGANATHAN P
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அந்த 4 தொகுதிகளும் காலியாகியுள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கையை […]