Home

  • ‘இனி திமுக எழுந்திருக்கவே கூடாது!’ கரூரில் கர்ஜித்த முதல்வர் விஜய்!
    “நம் அனைவருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்’’ என்று கரூரில் முதல்வர் விஜய் பேசினார். கரூரில் முதல்வர் விஜய் உரையாற்றுகையில், “ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் எத்தனை உயரங்களுக்குச் சென்றாலும், சில […]
  • கரூர் அரசு பணி! மனிதாபிமானத்தின் மறுவுருவமாக மாறிய ஜி.கே.வாசன்!
    த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, கரூரில் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து வரும் நிலையில், ‘அரசு பணி வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்’ என மனிதாபிமானத்தின் மறுவுருமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன். ‘‘கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதை மனிதாபிமான […]
  • ‘அரசியல் பணி தேர்வாணையம்!’ விஜய்யை விமர்சித்த மருது அழகுராஜ்!
    கரூர் விஜய் பரப்புரை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்குவதற்கு ஒரு தரப்பில் ஆதரவும், அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகளே எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. கரூரில் விஜய்யை பார்க்க வந்து உயிரிழந்த குடும்பத்தினர் 32 பேருக்கு அரசு பணி வழங்குவதற்கு தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காரணம், சி.பி.ஐ. விசாரணை நடந்துகொண்டிருக்கும் […]
  • சென்னை- புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
    சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நசீர் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வரும் நசீர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு […]
  • குதிரை பேரம் வழக்கு! செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!
    குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை […]
  • ஃபைவ் ஸ்டார் ஓட்டல்! ஃபாரின் சரக்கு! டிஜிட்டல் பரிவர்த்தனை! அரசகுமாரின் அதிர வைக்கும் வாக்குமூலம்!
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் மதுவிருந்து அளித்தது, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் வசூலித்தது […]
  • சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி டெண்டர்கள் அதிரடியாக ரத்து!
    சென்னை மாநகராட்சி நிதி நெருக்​கடி​யில் சிக்கி​யுள்​ளதை அடுத்​து, ரூ.700 கோடி மதிப்​பிலான புதிய உள்​கட்​டமைப்பு திட்​டங்​களுக்​கான டெண்​டர்​களை ரத்து செய்​துள்​ளது. தமிழகத்​தில் புதிய அரசு பொறுப்​பேற்​றதை தொடர்ந்​து, மாநக​ராட்​சி​யின் செல​வினங்​களை முறைப்​படுத்​த​வும், திட்​ட​மிடலை மேம்​படுத்​த​வும் பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இதன் ஒரு பகு​தி​யாக, நிதி பற்​றாக்​குறையை சமாளிக்​க​வும், வரு​வாயைப் பெருக்​க​வும் சொத்​து​வரி மற்​றும் தொழில்​வரி ஆகிய​வற்றை […]
  • அமைச்சரின் பரிந்துரை கடிதம்! அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தொடரும் சர்ச்சை!
    அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் பெயரில் வெளியாகியுள்ள பரிந்துரைக் கடிதத்தால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தபின் ஆவின் தலைவர், அரசு […]
  • கரூர் செல்லும் விஜய்! பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு!
    ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். […]
  • ‘விசில் ஒலிகள் ஓங்கி ஒலிக்கட்டும்!’ தோனிக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து!
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வரலாற்றுப் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வோடு […]
  • குதிரை பேர விவகாரம்! செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு!
    தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை காவல் […]
  • கரூர் செல்லும் விஜய்! தி.மு.க.வின் மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
    முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘‘சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த […]
  • அதிமுகவின் எதிர்காலம் டி.டி.வி.யா? அண்ணாமலையா? உள்ளே நுழையும் மிதுன்!
    தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்தது மிகப்பெரிய தோல்வி என்பதுதான் உண்மை. காரணம், 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் […]