Home

  • ‘பாவம்’ ஒருபக்கம்! ‘பழி’ ஒருபக்கம்! உப்பிலியபுரம் தில்லுமுல்லு!
    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சி மங்கப்பட்டியில் சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். […]
  • ஆட்சியில் பங்கு! திமுகவை மீண்டும் மீண்டும் சீண்டும் காங்கிரஸ்!
    ‘‘தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பிரச்சனை இல்லை’’ என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டுள்ளார். ‘‘தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், ‘‘பிற மாநிலங்களில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் போது தமிழகம் தயங்குவது ஏன்?’’ என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். […]
  • ஜெ. பிறந்த நாள்… சசிகலா முக்கிய அறிவிப்பு!
    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக அவருடன் 30 வருடங்களாக வாழ்ந்து வந்தவர்தான் சசிகலா. அ.தி.மு.க.வின் திரைமறைவு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். ஜெ. மறைவிற்குப் பிறகு சசிகலா அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். இந்த நிலையில்தான், ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24ம் தேதி ராமநாதபுரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த சசிகலா முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பை […]
  • பிப்.22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! திமுக அறிவிப்பு!
    வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், […]
  • ‘அய்யா பா.ம.க.!’ ராமதாஸின் புதிய கட்சி!
    பாமக​வும், மாம்​பழம் சின்​ன​மும் அன்​பு மணி கட்​டுப்​பாட்​டில் இருக்​கும் நிலை​யில், அய்யா பாமக என்ற புதிய கட்சி ராம​தாஸ் தரப்​பால் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பாமக​வில் ராம​தாஸ், அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. தந்​தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்​சினை​யால் கட்​சி​யினர் இரு பிரி​வு​களாக செயல்​பட்டு வரு​கின்​ற​னர். கட்​சி​யில் பெரும்​பாலானோர் அன்​புமணி […]
  • திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தும் விஜய்! உண்மையை உடைத்த திருமா!
    த.வெ.க. தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தி.மு.க.வை 2026ல் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த உதவும் என்ற வகையில் திருமாவளவன் பேசியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது’’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். ‘‘தவெக கட்சிக்கு இன்னும் உறுதியான அடித்தளம் மற்றும் கட்டமைப்பு […]
  • 2026 சட்டமன்றத் தேர்தல்! காங்கிரஸ் தனித்துப் போட்டி!
    2026ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் மேற்குவங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள நிலையில், இந்தத் தேர்தல் அக்கட்சியின் தொடர்ச்சியான வெற்றியை சோதிக்கும். மேற்குவங்காளத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, இதில் […]
  • தமிழகம் முழுவதும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு! காரணம் என்ன?
    குரூப்- 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் முதன்மைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் […]
  • செய்தியாளரை தாக்கிய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!
    குளித்தலை அருகே கல்குவாரியை படம் எடுக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட மூவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டி மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளது சனிக்கிழமை தெரியவந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சிவாயம் வடக்கு கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வீதிமீறல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் […]
  • அமித் ஷாவை சந்திக்கும் ஒபிஎஸ்! அதிமுக கூட்டணியில் இணைய முடிவு!
    அதிமுக &- பாஜக கூட்டணியில் இணைய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அமித் ஷாவை ஓ.பி.எஸ். சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செயல்பட்ட, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்து விட்டார். […]
  • சி.எஸ்.கே. அணியை வாங்கும் உதயநிதி!
    சமீபத்தில்தான் மகளிர் டி20 மேட்ச் முடிந்தது. இதில் ஆர்.சி.பி. அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கான சி.எஸ்.கே. அணி இல்லை என்பதுதான் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் விரைவில் மகளிர் பிரீமியர் லீக்கில் அணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், […]
  • திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறும்! திருமா எச்சரிக்கை!
    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தற்போது குடைச்சலைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் […]
  • தவெக விருப்பமனு விநியோகம்! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!
    தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே பல்லாயிரக்கணக்கான […]