- விஜய் மீது பாயும் சிபிஐ வழக்கு! ‘இடி’யை இறக்கிய இன்பதுரை!
by RENGANATHAN P
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க குதிரை பேரம் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்குப் பதியப்பட வாய்ப்புள்ளதாக ‘இடி’யை இறக்கியிருக்கிறார் இன்பதுரை எம்.பி.! தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டு குதிரை பேரம் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வரின் முன்னரே எதிர்க்கட்சிகள் […]
- ஊழல் ‘மாஜி’ மந்திரிகள்… விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!
by RENGANATHAN P
‘முதல்வர் விஜய்யின் ‘நாகரிக சந்திப்பு’, ஊழல் வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடக் கூடாது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘தமிழ்நாடு முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு […]
- தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி. யார்? ரேஸில் 6 பேர்!
by RENGANATHAN P
தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்படுவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கான ரேஸில் மொத்தம் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர்களில் மகேஷ் குமார் அகர்வாலுக்கு இந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் நிர்வாக ரீதியில் பல்வேறு […]
- ஜூன் 21ம் தேதி ‘நீட்’ மறுதேர்வு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
by RENGANATHAN P
வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது […]
- உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமனம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கர்க் நியமிக்கப்பட்டிருக்கிறார். நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 2026-ல், […]
- ‘தூய சக்தியா? அதிமுக எம்எல்ஏக்களை தூக்கும் சக்தியா?’ ஸ்டாலின் சரமாரி கேள்வி!
by RENGANATHAN P
“இது தூய சக்தியா அல்லது அடுத்த கட்சி எம்எல்ஏ-க்களைத் தூக்கும் சக்தியா என தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்த மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிவிட்டது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது […]
- ‘பிகிலும்… திகிலும்..!’ மர்மம் உடைக்கும் மருது அழகுராஜ்!
by RENGANATHAN P
அ.தி.மு.க.வின் ஆதரவில் த.வெ.க.வை பா.ஜ.க. தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என ‘பிகிலும்… திகிலும்-..!’ எனும் தலைப்பில் மர்மத்தை உடைத்திருக்கிறார் மருது அழகுராஜ்! தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்… ‘#பிகிலும்… #திகிலும்..’ எனும் தலைப்பில், ‘‘வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஊழலில் ஊறிய உத்தமர்களை எல்லாம் ஏற்கெனவே தத்தெடுத்து வைத்திருக்கும் பாஜக… […]
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி! ஆதரவு 144! எதிர்ப்பு 22! நடுநிலை 5!
by RENGANATHAN P
புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புக்காக சட்டப்பேரவை இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் கூடியது. தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை […]
- குதிரை பேரத்தில் த.வெ.க.! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதல்வர் விஜய் ஆதரிப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான். கட்சி நிர்வாகிகளின் பெருமித்த ஆதரவோடு நான் இந்த பொறுப்பிற்கு வந்தேன். என் தலைமையில் தேர்தலை சந்தித்தோம். இந்த […]
- சி.வி.சண்முகம் அலுவலகத்தில் விஜய்! அமைச்சர் பதவிக்காக உடையும் அதிமுக!
by RENGANATHAN P
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முக அணியினரை சந்தித்துப் பேசியது அதிமுகவில் சலசலப்பை கூட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். […]
- தவெகவுக்கு தாவிய அமமுக எம்.எல்.ஏ. நீக்கம்! டிடிவி அதிரடி!
by RENGANATHAN P
‘தவெகவுக்கு தன்னிச்சையாக ஆதரவளித்துள்ள அமமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் […]
- முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு முக்கிய அரசு பதவி!
by RENGANATHAN P
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகவும் தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வருகிறார். முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer – Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது. […]
- மே 14ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றி கழகம்’ வெற்றி பெற்று ச.ஜோசப் விஜய் முதல்வராக பதவியேற்றார். தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்த சூழலில்தான் முதன் முறையாக தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 14ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (மே 14ம் […]