- அரசு ஒப்பந்தங்கள்… அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ‘Strict Order’!
by RENGANATHAN P
சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ‘த.வெ.க. ஒரு தூயசக்தி… மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன்… தொடவும் விடமாட்டேன்..!’ என வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜய், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்களுக்கு ஒரு விஷயத்தில் ‘ஸ்ட்ரிக் ஆர்டர்’ போட்டிருக்கிறாராம்! இது பற்றி கோட்டை வட்டாரத்தில் பேசினோம்… ‘‘சார், ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித […]
- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
by RENGANATHAN P
கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் உடனடியாக அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் […]
- சட்டமன்றத்தில் அட்லி வசனம் பேசிய ‘மாஜி’ மீது வழக்குப் பதிவு!
by RENGANATHAN P
நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் த.வெ.க. அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆட்லி வசனம் குறித்து ஆவேசமாக பேசிய நிலையில், வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கில் இன்று அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனக்கூறி மோசடி செய்த இளஞ்செழியனை போலீசார் கைது செய்தனர். இளஞ்செழியன் யார் […]
- பி.டி.அரசகுமார் மீது பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்க போலீஸ் வேண்டுகோள்!
by RENGANATHAN P
தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ஏமாற்றியதால் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் மீது பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் புகார் கொடுக்கலாம் என சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி ஏமாற்றியதாக […]
- தனி ‘மெஜாரிட்டி’யை நோக்கி த.வெ.க! அதிமுகவில் மீண்டும் குழப்பம்!
by RENGANATHAN P
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி கோவையில் நடத்திய ஆலோசனைக் கூட்டம்தான் அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இதனால், அதிருப்தியில் இருந்த 25 எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகரிடம் புகார் மனு அளித்தார். அதன் […]
- ‘ சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் டான்ஸ் ஆடுவார்!’ உதயநிதி ஆவேசம்!
by RENGANATHAN P
‘‘சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங்போல ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன்’’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க.முத்து தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் […]
- போலியோ சொட்டு மருந்து முகாம்! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
by RENGANATHAN P
தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு […]
- காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர்! திமுகவில் இணையும் செல்வப்பெருந்தகை?
by RENGANATHAN P
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை கடந்த 2024-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகளால் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]
- டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்! தவெகவுக்கு இந்திய கம்யூ. அழுத்தம்!
by RENGANATHAN P
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயாணா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்துக்கு இந்த நியமனம் அமலில் இருக்கும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் […]
- 9 ஆண்டுகால உறவு முறிந்தது! திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக!
by RENGANATHAN P
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் […]
- ரகசிய காப்பு உறுதிமொழியை மீறுகிறாரா விஜய்? வில்சன் சரமாரி கேள்வி!
by RENGANATHAN P
கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’யாக நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘‘ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆவர். அரசில் அவர்கள் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் […]
- திமுக ஆட்சியில் திமுகவினர் மகிழ்ச்சியில் இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்! அதிர்ந்த ஸ்டாலின்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைத்தார் ஸ்டாலின். அந்தக் குழு அளித்துள்ள அறிக்கைதான் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் திமுகவினரே மகிழ்ச்சியாக இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கீழ் மட்ட தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் செவிசாய்க்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் நிலவும் […]
- இன்று தாயகம்! நாளை அறிவாலயம்! வைகோவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் ஸ்டாலின்!
by RENGANATHAN P
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக இன்று கூடுகிறது மதிமுக பொதுக்குழு. அதேசமயம், தங்களைத் தூற்றிவிட்டு தவெக-வை தூக்கிவைத்துக் கொண்டாடும் விதமாக இன்றைய பொதுக்குழுவில் முடிவெடுக்கப் போகிறது மதிமுக என்பதை ஊகித்துவிட்ட திமுக தலைமை, மதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ‘பொடா தியாகிகள்’ உள்ளிட்டோரையும் நடப்பு நிர்வாகிகள் சிலரையும் நாளை காலையில் அறிவாலயப் பிரவேசத்துக்கு அழைத்திருக்கிறது. தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் ஆதரவான […]