Home

  • தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. விலகல்!
    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர […]
  • மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
    சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026, ஏப்ரலில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், […]
  • ‘திருச்சி கிழக்கு’ தொகுதியில் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்!
    திருச்சியில் இன்று (புதன் கிழமை) காலை காந்தி மார்க்கெட் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார். திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நேற்று திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். நேற்று இரவு சாலை வழியாக திருச்சி வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இன்று […]
  • விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்த திமுக தேர்தல் அறிக்கை!
    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார் அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கான கூட்டுறவுக்கடன் தள்ளுபடி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக வெளியாகவில்லை. […]
  • திருச்சியில் விஜய்யின் அடுத்த தேர்தல் பிரச்சாரம்!
    தவெக தலைவர் விஜய், நேற்று (30ஆம் தேதி) தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அடுத்து அவர் எங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு […]
  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏன்? பகீர் தகவல்!
    தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு வெளியாகியிருக்கும் காரணம்தான் பகீரைக் கிளப்பியிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளையும், வேட்பாளர் […]
  • மகளிருக்கு மாதம் ரூ.3000! பா.ஜ.க.வின் அசாம் தேர்தல் வாக்குறுதி!
    அசாமில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும், லவ் ஜிகாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 31 தேர்தல் வாக்குறுதிகளை பாஜக வழங்கியுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில், பதிவாகும் வாக்குகள் மே […]
  • பரம்பரை திமுகவினருக்கு மறுக்கப்பட்ட சீட்! அதிமுகவினருக்கு வாய்ப்பு! குமுறும் உ.பி.க்கள்
    தி.மு.க.வில் பரம்பரை பரம்பரையாகவும், கட்சியின் வளர்ச்சிகாகவும் பாடுபட்டவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக சீட் கொடுத்திருப்பதுதான் தி.மு.க.வில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை. அதே போல் அமைச்சர்கள் ராணிப்பேட்டை காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, சிட்டிங் […]
  • திருச்சியில் திமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை!
    திருச்சி மாவட்டம் கூத்தையப்பார் பேரூராட்சி 11 ஆவது வார்டு கவுன்சிலர் ரஞ்சித்குமார் (38) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட கூத்தையப்பார் பேரூராட்சியின் 11 ஆவது வார்டு கவுன்சிலராக இருந்தவர் ரஞ்சித் குமார் (38). இவர் திமுக இளைஞரணி செயலாளரும் ஆவார். ரஞ்சித்குமார் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை சிலர் […]
  • திமுக ஆதரவில் ‘திடீர்’ காங்கிரஸ் வேட்பாளராகும் தமிழ்க்குமரன்..?
    காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஓரிரு நாட்களில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் ‘திடீர்’ வேட்பாளராக இருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வின் தீவிர ஆதரவைப் பெற்ற தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதுதான் காங்கிரஸ் கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காரணம், காலம் காலமாக கட்சிக்கு உழைத்துவரும் கதர்சட்டைக்காரர்களுக்கே வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில், தமிழ்குமரனுக்கு […]
  • ‘200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும்!’ ஸ்டாலின் நம்பிக்கை!
    “தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதன்படி, கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று மனுத்தாக்கல் செய்தார். அவருடன் […]
  • விஜய் பிரச்சாரம்… ‘ஸ்தம்பித்த’ சென்னை..!
    வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த விஜய் அதனை திடீரென ரத்து செய்துள்ளார். காரணம், பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் தலைநகர் சென்னையே ‘ஸ்தம்பித்து’ போனது. தவெக தரப்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், இன்று அங்கு அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். […]
  • கண்ணீர் விட்ட திமுக நிர்வாகி! ஆ.ராசா காரணமா? ஜெயங்கொண்டம் குமுறல்!
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தி.மு.க. நிர்வாகி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதை எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் தனசேகரும் போட்டியிட வாய்ப்புக் கேட்டு காத்திருந்தார். இந்த நிலையில்தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தனசேகரன் கண்ணீர் […]