- காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரு வாரத்தில் சீட் வாங்கியிருக்கிறார் பா.ம.க. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன்! தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பின் இன்றைய தினம் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மேலூர் தொகுதிக்கான ஒரு வேட்பாளர் மட்டும் இன்று மாலை அல்லது இரவு அறிவிக்கப்படுதாக […]
- பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
by RENGANATHAN P
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கிறது.
- ஜெகத்ரட்சகன் சொத்துக்கள் பறிமுதல் ரத்து! உச்சநீதிமன்றம் அதிரடி..!
by RENGANATHAN P
நேற்றை தினம் செம்மண் முறைகேடு வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சீகாமணி விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு ஜெகத்ரட்சகன் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்த அமலாக்கத்துறையின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து […]
- ஆ.ராசா பேசிய(தாக) ஆடியோ லீக்! வெளுத்து வாங்கிய எடப்பாடி!
by RENGANATHAN P
சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக எம்பி ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது திமுகவில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இந்த ஆடியாவை முன்வைத்து பேசினார். அரூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கனிமொழியும், ஆ.ராசாவும் […]
- அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்!
by RENGANATHAN P
கரூரில் இருந்து கோவை தெற்கில் செந்தில் பாலாஜி களமிறங்கும் நிலையில், கோவை வடக்கில் செந்தில் பாலாஜி களமிறங்கவேண்டும் என அ.தி.மு.க. வேட்பாளர்கள் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அல்லது கட்சியில் தேசியளவிலான பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எந்த முக்கியப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. […]
- பிரச்சாரத்தின்போது விபத்து! சாலையில் இறங்கிய விஜய்..!
by RENGANATHAN P
திருச்சி பிரச்சாரத்தின் போது விஜய் வாகனம் சென்ற இடத்தில் இளம்பெண் கணவருடன் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியபோது, உடனடியாக விஜய் சாலையில் இறங்கியதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய் ஓபன் வேனில் வராமல் வாகனத்துக்குள் இருந்தபடியே மக்களை சந்தித்தார். மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் […]
- ‘ஆட்சியை காப்பாற்றிய எனக்கே..?’ எடப்பாடிக்கு எதிராக குமுறிய தனபால்!
by RENGANATHAN P
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் தனபால், அவிநாசி தொகுதியில் போட்டியிட நான் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த தகவலை […]
- திருச்சியில் கே.என்.நேருவை சீண்டிய விஜய்! விண்ணை தொட்ட விசில் சத்தம்!
by RENGANATHAN P
திருச்சிக்கு வந்த விஜய் கே.என்.நேருவை நேரடியாக சீண்டிய விவகாரம்தான் தி.மு.க.வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்து ஏராளமான தொண்டர்களை கடந்து திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இரண்டாவது மண்டல குழு அலுவலகத்திற்கு விஜய் சென்றடைந்தபோது, சுயேட்சை ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார். அதனால் வேனில் அமர்ந்தபடியே காத்திருந்தார். சுயேட்சையின் வேட்புமனு தாக்கல் […]
- தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. விலகல்!
by RENGANATHAN P
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர […]
- மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
by RENGANATHAN P
சீர்காழி தொகுதி மதிமுக வேட்பாளரும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். முன்னர், ஒரு தொகுதியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று வைகோ கூறியிருந்த நிலையில் இந்த முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026, ஏப்ரலில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், […]
- ‘திருச்சி கிழக்கு’ தொகுதியில் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் விசிட்!
by RENGANATHAN P
திருச்சியில் இன்று (புதன் கிழமை) காலை காந்தி மார்க்கெட் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணத்துடன் கூடிய வாக்கு சேகரிப்பை மேற்கொண்டார். திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நேற்று திருவாரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கினார். நேற்று இரவு சாலை வழியாக திருச்சி வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இன்று […]
- விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்த திமுக தேர்தல் அறிக்கை!
by RENGANATHAN P
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார் அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அப்படிப்பட்ட விவசாயிகளுக்கான கூட்டுறவுக்கடன் தள்ளுபடி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக வெளியாகவில்லை. […]
- திருச்சியில் விஜய்யின் அடுத்த தேர்தல் பிரச்சாரம்!
by RENGANATHAN P
தவெக தலைவர் விஜய், நேற்று (30ஆம் தேதி) தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அடுத்து அவர் எங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனையடுத்து வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு […]