Home

  • அமைச்சர்கள் சிடிஆர்.நிர்மல்குமார் – ராஜ் மோகனுக்கு புதிய பொறுப்பு!
    தென் மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சட்டத்துறை அமைச்சராக சி.டி.நிர்மல் குமாரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் […]
  • காவிரி நீர் – மேகதாது விவகாரம்! ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி!
    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு […]
  • ‘மாதவிடாய்’ காலத்திலும் செக்ஸ் டார்ச்சர்! தவெக மா.செ. மீது பகீர் புகார்!
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது ஆற்காடு நகர காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகனைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி […]
  • டாஸ்மாக் பார் டெண்டர்! த.வெ.க. அரசின் அடுத்த அதிரடி..!
    டாஸ்மாக் கடைகள் பார்களை டெண்டர் எடுக்க புது விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை எடுக்கப்பட்டவர்கள் இல்லாமல் புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வழி வகை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதிலும் பண்டிகை நாட்கள் என்றால் 200 […]
  • ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்! செந்தில் பாலாஜியிடம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை!
    த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீசார் 2 மணி நேரம் ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். தவெக எம்​எல்​ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்​பட்ட வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது, அவர்​களிடம் 2 மணி […]
  • மா.செ. மாற்றம்! ஆலோசித்த ஸ்டாலின்! காத்திருக்கும் அதிர்ச்சி!
    நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று அறிவாலயத்திற்கு (25ம் தேதி) வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். திமுகவில் 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அந்த 20 நிர்வாகிகளும் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக மாநில அளவிலான பதவியை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் […]
  • மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா! மாணவர்கள் கொண்டாட்டம்!
    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்“ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். […]
  • அரசியலில் இருந்து ஓய்வு! இனி அன்புமணிதான்! ராமதாஸ் அறிவிப்பு!
    ‘‘அரசியலில் இருந்து விலகுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். இனி நான் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன்’’ என்று ராமதாஸ் ஓய்வை அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை ஒட்டி அவரை தைலாபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்த அன்புமணி, வாழ்த்து […]
  • ஆய்வு பணியில் அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் வெடித்த சர்ச்சை!
    மீபத்தில்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து கட்சியினர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார். தவிர, அரசு பள்ளியில் பெண் அமைச்சர் ஆய்வு(!?) நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்களுமே தேவையில்லாமல் ஆய்வுக்கு செல்லவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான், புதுக்​கோட்​டை​யில் அரசு முகாமில் அமைச்​சரின் சகோ​தரர் ஆய்வு செய்த விவ​காரம் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.இதுதொடர்​பாக […]
  • முதல்வர் அறை மாற்றம்..? மாற்றப்படும் மரபு..? பின்னணியில் ஜோதிடரா..?
    தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப் படிதான் பல்வேறு முடிவுகளை எடுப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதல்வர் அறையையும் தனது ஜோதிடரிடன் ஆலோசனைப்படி மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷயாம் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தில் திமுக காவிரி விவகாரம் குறித்து குரல் எழுப்பி […]
  • நள்ளிரவு வீடியோ… இளைஞர்களுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி..!
    நீட் வினாத்தாள் முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியும் கரப்பான் பூச்சி கட்சியினர் சார்பாக டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஜேபி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நள்ளிரவில் ஒரு வீடியோவை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, […]
  • ‘ஜனநாயகன்’ படம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும்! சபாநாயகரின் ‘அடடே’ பதில்!
    ‘‘ ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய, விரல் நுணியில் விவரங்களோடு, முதல்வர் முனைப்புடன் தயாராக […]
  • காவிரி நீர் விவகாரம்! ஆக.3 கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்!
    “மேகேதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்.” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். அதே சமயம் காவிரி நீர் விவகாரம் தொடர்பாகவும் அம்மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கும்பகோணத்தில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக […]