- கைமாறும் கொளத்தூர் தொகுதி! திருச்சி வடக்கு மா.செ.வாகும் கருணை ராஜா!
by RENGANATHAN P
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. குறிப்பாக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததுதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மறுசீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டு கட்சியின் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன, குறிப்பாக, திமுகவின் கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]
- டாஸ்மாக் முறைகேடு வழக்கு! கார்த்திக்கின் ஜாமீன் மனு தள்ளுபடி!
by RENGANATHAN P
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் […]
- அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா? ஐகோர்ட் கடும் கண்டனம்!
by RENGANATHAN P
‘பிரதமராக இருந்த போது நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என சொல்ல அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மரிய வில்சனின் சகோதரர் மரியகுளோத்தின் வீடு புகுந்து அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் என்பவரை மரிய வில்சன் […]
- திமுகவில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்! பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
by RENGANATHAN P
திமுகவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில், 78-ல் இருந்து 110 மாவட்டங்களாக நிர்வாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய மாவட்டங்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி […]
- ராகுலின் பிரதமர் கனவை கானல் நீராக்கும் விஜய்! மீண்டும் பா.ஜ.க. ஆட்சி!
by RENGANATHAN P
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கும் இடையே இருந்த போட்டையை உடைத்து தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்பதை உறுதி செய்ததோடு, 2026ல்ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து விட்டது த.வெ.க.! 2029ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் (இண்டியா கூட்டணி) இடையேதான் போட்டி என்ற நிலையை த.வெ.க. உடைக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள். இது தொடர்பாக த.வெ.க. பல […]
- இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை எதிர்த்து முதல்வர் விஜய் பதில் மனு!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங் கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, […]
- நேரலையா? ‘நேர் கொலை’யா? மருது அழகுராஜ் ஆவேசம்..!
by RENGANATHAN P
‘தமிழக சட்டமன்றம் சண்டை மன்றமாக இருக்கிறது மக்கள் பிரச்னைகளை பேச முடியவில்லை’ என தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா பேசிய நிலையில், ‘நேரலை’ என்ற பெயரில் ‘நேர் கொலை’ செய்து வருகிறார்கள் என தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். ‘‘#மாண்புமிகு #பேரவை # கனவான்களே..?’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது […]
- ‘ஆதவ் அர்ஜுனா பேச எழுந்தால்…!’’ எச்சரித்த பிரேமலதா விஜயகாந்த்!
by RENGANATHAN P
‘‘சட்டப் பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்க கூடாது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார். சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும்தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால், […]
- அடுத்தாண்டு அரசியலில் குதிக்கும் தனுஷ்! உறுப்பினர் சேர்க்கை விறுவிறு..!
by RENGANATHAN P
நடிகர் தனுஷை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் அவரது இல்லத்தில் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தனுஷ் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சுகள் ஏற்கனவே இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. […]
- த.வெ.க. ஆட்சிக்கு ஆபத்து! திமுக ‘மாஜி’க்கள் ரகசிய மீட்டிங்!
by RENGANATHAN P
த.வெ.க. ஆட்சிக்கு ஆறு மாதம் கெடுவிதித்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த ஆறு மாதத்திற்குள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை த.வெ.க. அரசு சிறையில் தள்ள முயற்சித்து வருகிறது. அதற்குள் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. த.வெ.க. ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் […]
- மேட்டூர் அணையில் நாளை மறுநாள் தண்ணீர் திறக்கும் முதல்வர்!
by RENGANATHAN P
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 28) முதல்வர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கும் நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் மேட்டூர் அணையை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி […]
- ‘செந்தில் பாலாஜியை விட செல்வாக்கு மிகுந்தவர் கார்த்திக்!’ ஜாமீனுக்கு கடும் ஆட்சேபம்!
by RENGANATHAN P
டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் ‘செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திக் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க தயங்குவார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என அரசு தரப்பு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு […]
- சட்டசபையில் லாவணிக் கச்சேரி! தவெகவுக்கு பெ.சண்முகம் கண்டனம்!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் சட்டசபையில், “ஆரோக்கியமான விவாதம் இல்லை. லாவணி கச்சேரிதான் நடக்கிறது. தெரு சண்டை போல… குழாயடி சண்டை போல சம்பவங்கள் நடைபெறுகின்றன’’ என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ சந்தைப் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று […]