- வங்கி மேலாளருக்கு ‘பளார்’! விசாரணை வளையத்தில் மு.க.அழகிரி மகள்!
by RENGANATHAN P
சென்னையில் வங்கி மேலாளரை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கயல் விழியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் ஒர்க் ஆகாதது தொடர்பாக கட்டட உரிமையாளரான தன்னிடமே எகத்தாளமாக பேசுவியா என்ற ரீதியில் கோபம் கொண்ட கயல்விழி, வங்கி மேலாளரை கை நீட்டியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் […]
- எ.வ.வேலுவுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் ரத்து!
by RENGANATHAN P
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பணிகளே நடைபெறாத நிலையில் முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு […]
- ‘44 வயதில் தான்’… திரிஷாவின் திடீர் பதிவு! விரக்தியின் வெளிப்பாடா..?
by RENGANATHAN P
தமிழக முதல்வருடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தைப் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார் நடிகை திரிஷா! இந்த நிலையில்தான் திரிஷாவின் பதிவு ஒன்றுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சமீப காலமாக திரிஷா படங்களில் நடித்து பிரபலமாக இருப்பதை விடவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதுபோல அவருடைய சோசியல் மீடியா போஸ்ட் பார்ப்பதற்காகவும் அதிகமான ரசிகர்கள் […]
- பரபரக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்! உதயநிதியின் முக்கிய மீட்டிங்!
by RENGANATHAN P
பெரும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் உதயநிதி தலைமையில் நடக்கியது. 2026-27ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (6ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. தவெக […]
- 31 பேரின் அரசுப் பணி ரத்து! நீதிமன்றம் அதிரடி! நடந்தது என்ன? முழு விபரம்!
by RENGANATHAN P
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் […]
- ‘காக்ரோச்’ கட்சியை தொடர்ந்து உருவானது E20 ஜனதா கட்சி! அடுத்த குறி நிதின் கட்கரி!
by RENGANATHAN P
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் (காக்ரோச்) ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. மத்திய கல்வித்துறை அமைச்சரும் ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான், கரப்பான் ஜனதா கட்சியை போல பெட்ரோலில் எத்தனால் கலப்புக்கு எதிராக E20 ஜனதா கட்சி என்ற கட்சி உருவெடுத்துள்ளது. மத்திய அரசு பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை முழுமையாக […]
- ரூ.100 கோடி நில மோசடி! கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர் ஆஜர்!
by RENGANATHAN P
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு இன்று ஆஜரானார். கரூர் மாவட்டம், வாங்கலை சேர்ந்த பிரகாஷ், ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருக்கு வேண்டியவர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக அவர், அவரது தம்பி சேகர் […]
- ஊழல் வழக்கு! ‘கெடு’ விதித்த நீதிமன்றம்! வைத்திலிங்கத்திற்கு சிக்கல்!
by RENGANATHAN P
“முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை முடித்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2016ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை […]
- காக்ரோச் ஜனதாவுடன் கைகோர்க்கும் திமுக! கவலையில் சோனியா காந்தி!
by RENGANATHAN P
காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுடனான நட்பை அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது மு.க.ஸ்டாலின்தான். அதே போல் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக பங்கெடுத்ததும் தி.மு.க.தான். அப்படிப்பட்ட தி.மு.க.வை இரண்டு அமைச்சர்கள் பதவிக்காக உதறினார் ராகுல்காந்தி. இன்றைக்கு காக்ரோச் ஜனதா கட்சியுடன் கோர்க்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள்தான் சோனியா காந்தியை கவலையில் ஆழ்த்தியிருக்கிறதாம். […]
- அரசியலில் நுழையும் தனுஷ்? முதல் அடியை எடுத்து வைத்த பின்னணி?
by RENGANATHAN P
பிரபல நடிகர் தனுஷ், தனது ரசிகர்களை ‘‘நலத்திட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்’’ என்று கேட்டு கொண்டதன் மூலம் அரசியலில் களமிறங்குவது குறித்த யூகங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார். கடந்த 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற்ற இரத்ததான முகாமில் பேசிய தனுஷ், ‘‘ரசிகர்கள் வெறும் சினிமா கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், தங்களை சுற்றியுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சமூக சேவைகளில் முழுமையாக ஈடுபட […]
- சிகிச்சைக்கு வந்த பெண்களை (100+) ‘சீரழித்த’ மருத்துவர்! ‘பிளாக் மெயில்’ நர்ஸ் பகீர் புகார்!
by RENGANATHAN P
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு கற்பை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம், சிகிச்சைக்கு வந்த 100க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை 65 வயது மருத்துவர் ஒருவர் சூறையாடியிருக்கும் சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது மருத்துவரிடம் ரூ.2 கோடி பறித்ததாக கைது செய்யப்பட்ட நர்ஸ், நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பு வெளியிட்ட […]
- அமைச்சர்கள் சிடிஆர்.நிர்மல்குமார் – ராஜ் மோகனுக்கு புதிய பொறுப்பு!
by RENGANATHAN P
தென் மண்டல கவுன்சில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள் சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகனும், சட்டத்துறை அமைச்சராக சி.டி.நிர்மல் குமாரும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் […]
- காவிரி நீர் – மேகதாது விவகாரம்! ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா பதிலடி!
by RENGANATHAN P
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனைக்காக கர்நாடகாவில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் செல்ல இருப்பதாக தகவல் வெளியான நிலையில், காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு […]