Home

  • ‘ஜனநாயகன்’ படம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும்! சபாநாயகரின் ‘அடடே’ பதில்!
    ‘‘ ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய, விரல் நுணியில் விவரங்களோடு, முதல்வர் முனைப்புடன் தயாராக […]
  • காவிரி நீர் விவகாரம்! ஆக.3 கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்!
    “மேகேதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்.” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். அதே சமயம் காவிரி நீர் விவகாரம் தொடர்பாகவும் அம்மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கும்பகோணத்தில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக […]
  • ஒரு மாத தலைமறைவுக்கு முற்றுப்புள்ளி! நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!
    தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு கடந்த 8-ந்தேதி நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருவரும் காலை […]
  • ஆகஸ்டில் கட்சி, கொடி அறிமுகம்! செப்டம்பரில் முதல் அரசியல் மாநாடு!
    தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சர் ஆனார் விஜய்! இது திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மத்தியிலும் ஆளும் பா.ஜ.க. 2026ல் கூட்டணி ஆட்சியை அமைத்துவிடுவோம் என்று கணக்குப் போட்டதும் பொய்த்துப் போனது. இந்த […]
  • தமிழக அரசு கிரீன் சிக்னல்! உச்சநீதிமன்றம் அனுமதி! சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்ல உள்ளது. வழக்கின் […]
  • செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி! ஐகோர்ட் சரமாரி கேள்வி!
    செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. ‘முன்ஜாமீன் பெற்றும் இதுவரை சரண் அடையாதது ஏன்?’ என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி செந்தில்பாலாஜி […]
  • ரத்தக் காயத்துடன் கைதான ராகுல் காந்தி! த.வெ.க. கடும் கண்டனம்!
    டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் ரத்தக் காயம் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு […]
  • அதிமுகவில் சசிகலா – டிடிவி! எடப்பாடிக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ‘‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’’யாகி போய்விட்டது. அ.தி.மு.க. தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், இன்றைக்கு அக்கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்” என, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் […]
  • தனியார் மயமாகிறதா டாஸ்மாக்? அமைச்சர் சொன்ன மெஸேஜ்!
    சமீபத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதல்வர் விஜய் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டாஸ்மாக்கை தனியார் மயமாக்லாமா? அல்லது டாஸ்மாக்கையே எடுத்துவிடலாமா’ என்பது தொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், ‘‘இப்போதும் கூட டாஸ்மாக் சென்று பார்த்தால் குப்பைமேடாக இருக்கும். யாரேனும் எங்கேயாவது படுத்திருப்பார்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? இந்த […]
  • பெரம்பூர் தொகுதியில் வெற்றி! முதல்வர் விஜய்க்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
    சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விஜய் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக […]
  • ஆகஸ்ட் 5ம் தேதி த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்!
    தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்த முடிந்த நிலையில் வரும் நாட்களில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசு பதவியேற்று முதல் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த தகவலை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு […]
  • மதுபான கொள்முதல்! மாற்றி யோசித்த விஜய்! அதிர்ச்சியில் ஆலை அதிபர்கள்!
    தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது, அவர்களுக்கு வேண்டப்பட்ட மதுபான தொழிற்சாலைகளில் இருந்து அதிக சரக்குகள் வாங்குவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்திருக்கிறார் முதல்வர் விஜய்! தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய […]
  • பழனி கோவில் நில மோசடி! யார் இந்த ‘சார்’ பதிவாளர்..?
    பழனி கோயில் தண்டாயுதபாணி மடத்திற்கு சொந்தமான நில மோசடி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடந்த ஆண்டே வேறு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ 100 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது […]