- காமராஜர் வழியில் மூப்பனார்! 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலியில் புகழாரம்!
by RENGANATHAN P
மக்கள் தலைவர் ஜயா ஜி.கே.மூப்பனாரின் 25ம் ஆண்டு நினைவு புஷ்பாஞ்சலி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆகஸ்ட் 30)அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. த.வெ.க. சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஸ்ரீநாத் மூப்பனாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசும்போது, ‘‘இந்நிகழ்ச்சியில் […]
- 21 ‘லிமிடெட்’ டெண்டர்கள் ரத்து! பின்னணியில் அறப்போர் இயக்கம்!
by RENGANATHAN P
தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட சர்ச்சைக்குரிய 21 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைத் துறையில் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோரப்பட்டிருந்த 21 வரம்பிற்குட்பட்ட ((Limited) டெண்டர்களைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ‘ அறப்போர் இயக்கம் ‘ எழுப்பிய உடனடிப் புகாரைத் தொடர்ந்து […]
- போக்சோ வழக்கில் ‘ஜெம்’ குழுமத்தின் தலைவர் வீரமணி கைது!
by RENGANATHAN P
கிரானைட் தொழிலதிபரும், ‘ஜெம்’ குழுமத்தின் தலைவருமான வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து ‘பென்டிரைவ் ஒன்றை […]
- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தடுமாறிய திமுக! ப.சிதம்பரம் பகீர் தகவல்!
by RENGANATHAN P
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தடுமாறியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், ‘‘நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதி மறுவரையறைக்கும் சம்பந்தமே கிடையாது. திருத்தப்பட்ட அரசியல் சாசனத்தை மீண்டும் திருத்தம் செய்வதே பாஜக அரசின் நோக்கமாக உள்ளது’’ என்றார். தொகுதி மறுவரையறையைக் கொண்டுவந்தால் […]
- மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு! தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு!
by RENGANATHAN P
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, ‘இசட்’ பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, […]
- மீண்டும் மருத்துவ பரிசோதனை! அமலாக்கத்துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
by RENGANATHAN P
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதியை ஜிப்மர் மருத்துவமனையில் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி […]
- எம்.எல்.ஏ. சீட்… ரூ.4 கோடி மோசடி! சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு!
by RENGANATHAN P
சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், […]
- கைமாறும் கொளத்தூர் தொகுதி! திருச்சி வடக்கு மா.செ.வாகும் கருணை ராஜா!
by RENGANATHAN P
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. குறிப்பாக முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததுதான் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மறுசீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் செயற்குழு கூட்டப்பட்டு கட்சியின் நிர்வாகச் சீரமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன, குறிப்பாக, திமுகவின் கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]
- டாஸ்மாக் முறைகேடு வழக்கு! கார்த்திக்கின் ஜாமீன் மனு தள்ளுபடி!
by RENGANATHAN P
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் […]
- அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா? ஐகோர்ட் கடும் கண்டனம்!
by RENGANATHAN P
‘பிரதமராக இருந்த போது நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார், நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என சொல்ல அமைச்சர் மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?’ என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மரிய வில்சனின் சகோதரர் மரியகுளோத்தின் வீடு புகுந்து அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் என்பவரை மரிய வில்சன் […]
- திமுகவில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்! பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
by RENGANATHAN P
திமுகவில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்சி மறுசீரமைப்பின் அடிப்படையில், 78-ல் இருந்து 110 மாவட்டங்களாக நிர்வாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான புதிய மாவட்டங்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி […]
- ராகுலின் பிரதமர் கனவை கானல் நீராக்கும் விஜய்! மீண்டும் பா.ஜ.க. ஆட்சி!
by RENGANATHAN P
தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க.வுக்கும் இடையே இருந்த போட்டையை உடைத்து தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்பதை உறுதி செய்ததோடு, 2026ல்ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்து விட்டது த.வெ.க.! 2029ல் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் (இண்டியா கூட்டணி) இடையேதான் போட்டி என்ற நிலையை த.வெ.க. உடைக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள். இது தொடர்பாக த.வெ.க. பல […]
- இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை எதிர்த்து முதல்வர் விஜய் பதில் மனு!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங் கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, […]