- கலைஞர் உருவாக்கிய மாநில திட்டக்குழுவை கலைக்கும் விஜய்?
by RENGANATHAN P
நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் ‘அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான்..!’ என அடித்துப் பேசினார் தமிழக முதல்வர் விஜய்! அதனால்தான் என்னவோ, கலைஞரின் சுவடுகளை கலைக்கிறாரா விஜய்? என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்! கடந்த ஆட்சியில் தி.மு.க.வால் கெண்டுவரப்பட்ட திட்டங்கள் முதல் டெண்டர்கள் வரை த.வெ.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் […]
- மதுராந்தகம் – மரகதம் குமரவேல்! தாராபுரம் – சத்தியபாமா! த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!
by RENGANATHAN P
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் […]
- ‘ஒரு தலைமுறையை ஏமாற்றுகிறீர்கள்!’ முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!
by RENGANATHAN P
“விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் விவரம்: “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற […]
- த.வெ.க. தலைமையில் ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்!
by RENGANATHAN P
தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த […]
- 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு! செப்.28ல் இறுதி விசாரணை!
by RENGANATHAN P
ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் […]
- ‘இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும்!’ எடப்பாடியின் ‘நம்பிக்கை’ பேட்டி!
by RENGANATHAN P
தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட, சபாநாயகர் உத்தரவின் பெயர்கள் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது. 10 மணி நேரம் அவை நடந்தால், 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை பேசப்படுகிறது. […]
- த.வெ.க. கூட்டணி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது!
by RENGANATHAN P
“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்.தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் […]
- ‘விபத்து’ முதல்வரால் தலைகுனியும் தமிழகம்! மருது அழகுராஜ் ஆவேசம்!
by RENGANATHAN P
தமிழக சட்டசபையில் நேற்று விஜய் பேசியதற்கு கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘மக்களை தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறார் தமிழகத்தின் ‘விபத்து முதல்வர்’ என தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் விஜய்க்கு எதிராக ஆவேசமாக பதிவிட்டிருக்கிறார்! ‘‘#விபத்து…’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘ உடல் மொழியால் கேலி […]
- விஜய்யின் வீட்டிற்கு அருகே புதிய தலைமைச் செயலகம்!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள 25 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடம் விஜய்யின் இல்லத்திற்கு (விட்டிற்கு) அருகே அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது! சென்னை தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் […]
- டெண்டர் ஊழல்! முதல் குற்றவாளி கே.என்.நேரு! விரைவில் கைது நடவடிக்கை!
by RENGANATHAN P
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் கடந்த 4-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த […]
- வீராணம் முதல் பார்ட்டி ஃபண்ட் வரை… உதயநிதியை ‘தெறி’க்க விட்ட விஜய்!
by RENGANATHAN P
சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் கடந்த 7ம் தேதி பதில் அளித்தார். அப்போது, சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத் துறையின் அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது கடுமையாக குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கடந்த திங்கட்கிழமை கூடியது. காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு […]
- பிரதமர் வேட்பாளர்! திமுகவுக்கு காங்கிரஸ் தூது! கண் சிவந்த ஸ்டாலின்!
by RENGANATHAN P
கூட்டணிக் கட்சிகளின் தயவில் த.வெ.க. ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தி.மு.க.வை பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் த.வெ.க.வினர். இதனால் உதயநிதி முதற்கொண்டு ஸ்டாலின் வரை கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி தவெக பிரச்சாரம் செய்து வருவதாக அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ், மீண்டும் திமுகவுக்கு தூது அனுப்பிய நிலையில் முன்னாள் […]
- த.வெ.க. அரசு மீது கடும் அதிருப்தியில் கம்யூனிஸ்டுகள்!
by RENGANATHAN P
த.வெ.க. அரசு மீது கடுமையான அதிருப்தியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. த.வெ.க. ஆதரவு கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த கம்யூனிஸ்டுகள், 2வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தவெக ஆதரவு கட்சிகளின் 2ஆம் கட்ட கூட்டம் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் […]