Home

  • பட்டிமன்றங்களுக்கு ‘விடை கொடுத்த’ சாலமன் பாப்பையா!
    பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, மதுரையில் வயது முதிர்வு காரணமாகக் காலமானார். மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். புகழ்பெற்ற தமிழறிஞரும், […]
  • இரண்டு தொகுதி இடைத்தேர்தல்! பொறுப்பாளர்களை நியமித்த திமுக!
    தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தவெகவிற்கு செக் வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த தொகுதிக்கான பொறுப்பாளர்களையும் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது தவெக. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு பல்டி அடித்த நிலையில், அந்த […]
  • த.வெ.க. கூட்டணியில் கம்யூனிஸ்டுகள்? மனம் திறந்த செங்கோட்டையன்!
    ‘‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்! மதுராந்தகம், தாராபுரம் இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. 100 சதவீத வெற்றியை எட்டும். த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வருமா? ’’ என்ற கேள்விக்கும் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பியதன் அடிப்படையில், ஒரு […]
  • ‘ஜனவரிக்குள் த.வெ.க ஆட்சி கவிழும்!’ ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!
    தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மூன்று கட்சிகளிலும் வலுவான வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான், மதுராந்தகத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ‘‘தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலேய தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லுமளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் […]
  • மாணவிக்கு ஆபாச மெஸேஜ்! உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது!
    சென்னையில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் மூர்த்தி (34) […]
  • ‘ஸ்டாலினின் வீடியோ விளக்கம் தற்குறிகளுக்கு அல்ல!’ திமுக மீண்டும் பதிலடி!
    ‘‘ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு ஸ்டாலின் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல. அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறக்கூடாது என்பதற்காகத்தான்’’ என தவெகவை திமுக விமர்சித்துள்ளது. மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை […]
  • ‘போலி பிம்பம் உடைந்தது ..!’ தி.மு.க.வுக்கு த.வெ.க. பதிலடி!
    ‘உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவு குறித்து தவெக விமர்சித்துள்ளது. மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் […]
  • கலைஞர் உருவாக்கிய மாநில திட்டக்குழுவை கலைக்கும் விஜய்?
    நடந்து முடிந்த சட்டமன்றத் கூட்டத் தொடரில் ‘அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு பின் விஜய் தான்..!’ என அடித்துப் பேசினார் தமிழக முதல்வர் விஜய்! அதனால்தான் என்னவோ, கலைஞரின் சுவடுகளை கலைக்கிறாரா விஜய்? என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்! கடந்த ஆட்சியில் தி.மு.க.வால் கெண்டுவரப்பட்ட திட்டங்கள் முதல் டெண்டர்கள் வரை த.வெ.க. ஆட்சியில் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் […]
  • மதுராந்தகம் – மரகதம் குமரவேல்! தாராபுரம் – சத்தியபாமா! த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!
    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது. அதன்படி மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வரும், தவெக தலைவருமான விஜய் […]
  • ‘ஒரு தலைமுறையை ஏமாற்றுகிறீர்கள்!’ முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!
    “விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்” என்று மிசாவில் கைதானது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் முதல்வர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோ பதிவின் விவரம்: “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற […]
  • த.வெ.க. தலைமையில் ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயம்!
    தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம், பனையூரில் இன்று நடைபெற்றது. தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்றன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த […]
  • 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு! செப்.28ல் இறுதி விசாரணை!
    ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் […]
  • ‘இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும்!’ எடப்பாடியின் ‘நம்பிக்கை’ பேட்டி!
    தமிழக சட்டப்பேரவையில் இன்று திமுகவினர் அமளியில் ஈடுபட, சபாநாயகர் உத்தரவின் பெயர்கள் அவர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதன்பின் சில மணி நேரங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் மாறி மாறி பேசி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது. 10 மணி நேரம் அவை நடந்தால், 3 மணி நேரம் தான் மக்கள் பிரச்சனை பேசப்படுகிறது. […]