Home

  • ‘விஜய் கர்நாடகா வரவேண்டாம்!’ முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தல்!
    காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது; கடந்தாண்டு கர்நாடகாவில் நல்ல […]
  • டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன்!
    டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மாலியா […]
  • செந்தில் பாலாஜி முன் ஜாமீன் வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற பெண் நீதிபதி!
    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி வி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மதுவிலக்கு […]
  • விஜய்யுடன் கர்நாடகா செல்லும் விஷ்ணு ரெட்டி – ஜான் ஆரோக்கியசாமி!
    தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது, மாறாக டெல்லி செல்லவேண்டும் என மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். முதல்வர் விஜய் கர்நாடக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருடன் 3 அமைச்சர்கள், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் செல்வது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜூன் 12ஆம் […]
  • ‘கைதாகக் கூடாது!’ உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற செந்தில் பாலாஜி!
    டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நிலையில், உடனடியாக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2021 முத்ல 2025ம் ஆண்டு வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை தொடர்ந்து அதிகரித்தாலும் கூட வருவாய் என்பது […]
  • டாஸ்மாக் முறைகேடு! கைவிட்ட நீதிமன்றம்! கைதாகும் செந்தில் பாலாஜி!
    அ.தி.மு.க., திமுக ஆட்சி காலங்களில் மிகுந்த செல்வாக்கு கொண்ட அமைச்சராக வலம் வந்தவர் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகிறது. அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் 1000 கோடி மோசடி, டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு என பல்வேறு வழக்குகள் தூசு […]
  • அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,518 பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
    தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியிலான பணிகள், இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதேபோல, அவ்வப்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகளும் வெளியாகிறது. அதாவது அப்ரெண்டீஸ் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: பட்டதாரி அப்ரெண்டீஸ் (பொறியியல்) […]
  • கொளத்தூர் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு..!
    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்த கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சிம்பல் லோடிங் யூனிட் (Symbol Loading Unit) என்ற கருவியைப் […]
  • கே.என்.நேருவுக்கு எதிராக ஐகோட்டில் தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!
    ‘‘நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு தனது விளக்கத்தை கேட்க வேண்டும் என்று கே.என்.நேரு கேட்க அடிப்படை உரிமையில்லை’’ என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முக்கியமான வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் […]
  • செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனை!
    மத்திய புலனாய்வு அமைப்புகளும் சரி, மாநில புலனாய்வு அமைப்புகளும் சரி… செந்தில் பாலாஜியை விடுவதாகத் தெரியவில்லை. விசாரணை அமைப்புகள் மூலம் அவரை எப்படியாவது முடக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடந்த […]
  • வங்கி மேலாளருக்கு ‘பளார்’! விசாரணை வளையத்தில் மு.க.அழகிரி மகள்!
    சென்னையில் வங்கி மேலாளரை மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கயல் விழியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் ஒர்க் ஆகாதது தொடர்பாக கட்டட உரிமையாளரான தன்னிடமே எகத்தாளமாக பேசுவியா என்ற ரீதியில் கோபம் கொண்ட கயல்விழி, வங்கி மேலாளரை கை நீட்டியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் […]
  • எ.வ.வேலுவுக்கு எதிரான ‘லுக் அவுட்’ நோட்டீஸ் ரத்து!
    திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பணிகளே நடைபெறாத நிலையில் முன்கூட்டியே தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கோடிக்கணக்கில் தொகை விடுவிக்கப்பட்டு […]
  • ‘44 வயதில் தான்’… திரிஷாவின் திடீர் பதிவு! விரக்தியின் வெளிப்பாடா..?
    தமிழக முதல்வருடன் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தைப் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டினார் நடிகை திரிஷா! இந்த நிலையில்தான் திரிஷாவின் பதிவு ஒன்றுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. சமீப காலமாக திரிஷா படங்களில் நடித்து பிரபலமாக இருப்பதை விடவும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். அதுபோல அவருடைய சோசியல் மீடியா போஸ்ட் பார்ப்பதற்காகவும் அதிகமான ரசிகர்கள் […]