- ஆட்சியில் பங்கு… காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
by RENGANATHAN P
மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க.விடம் ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ‘கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதன் […]
- பரமக்குடி தொகுதி பாஜகவுக்கா? அதிமுக மாசெ மீது பகீர் குற்றச்சாட்டு!
by RENGANATHAN P
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுவரை 8 முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. தவிர, 4 முறை திமுகவும், ஒருமுறை த.மா.க.வும், ஒருமுறை காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தமுறை 2026ல் பரமக்குடி தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் […]
- ஆபாசம்… வக்கிரம்… திமுக பேச்சாளருக்கு 3 ஆண்டு சிறை!
by RENGANATHAN P
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் 2023ல் நடந்த திமுக நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவியையும், பாஜக நிர்வாகி குஷ்புவையும் இழிவாக பேசியிருந்தார். கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று (பிப்ரவரி 14) தீர்ப்பு வழங்கிய நீதிபதி […]
- ‘விஜய் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை!’ தி.மு.க. கடும் தாக்கு!
by RENGANATHAN P
‘த.வெ.க. தலைவர் விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை’ என தி.மு.க.வின் சீனியரான ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக பேசியிருக்கிறார். திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, மகளிர் உரிமைத் தொகை தொடர்பான சமீபத்திய அறிவிப்பு குறித்து கடுமையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5,000 (மூன்று மாத உரிமைத் தொகை கோடை […]
- 20ம் தேதி வரை விருப்பமனு! தவெக தலைமை நீட்டிப்பு!
by RENGANATHAN P
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தவெகவினர் விருப்ப மனுவை சமர்ப்பிக்கக் கால அவகாசம் பிப்.20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் தங்களுக்கான விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான […]
- ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்!
by RENGANATHAN P
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன், டிஜிபி அலுவலகத்தில் இயங்கி வரும் சட்டம் – ஒழுங்கு உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மேற்கு துணை ஆணையர் மதன், தூத்துக்குடி எஸ்.பி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி தலைமையிட […]
- அதிமுகவில் இணையும் ‘அஞ்சா நெஞ்சன்’ ஆதரவாளர்கள்!
by RENGANATHAN P
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து பல மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தும், ‘அழைப்பு’ விடுக்காததால், ‘அஞ்சா நெஞ்சனின்’ ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘கலைஞர் கருணாநிதி காலத்தில் டெல்லிக்கு முரசொலி மாறன், சென்னைக்கு மு க ஸ்டாலின், மதுரைக்கு மு.க.அழகிரி என்றுதான் இருந்தது. தமிழ்நாடு […]
- ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் ரூ.20க்கு சிக்கன் பிரியானி!
by RENGANATHAN P
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ‘மதுரை சரவணா கிச்சன்’ சார்பில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனை துவக்கப்பட்டிருக்கிறது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் பா.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான […]
- ‘2026ல் விஜய்யா? ஸ்டாலினா?’ சேலத்தில் கர்ஜித்த தவெக தலைவர்!
by RENGANATHAN P
‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விஜய்யை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா?’ என சேலத்தில் விஜய் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் முதலில் பேசி விஜய்க்கும் தொண்டர்களுக்கும் உற்சாகமாக வரவேற்பு அளிக்க தொடர்ந்து சரியாக பன்னிரண்டு 40 மணிக்கு விஜய் தனது பேச்சை துவங்கினார். த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது, ‘‘நம்மை யார் […]
- விஜய்யை எதிர்த்து களமிறங்கும் எஸ்.ஜோயல்!
by RENGANATHAN P
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து, தி.மு.க. சார்பில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எந்தத் தொகுதியில் களம் காணும் […]
- ராஜ்யசபா எம்.பி.யாகும் சபரீசன்!
by RENGANATHAN P
அன்றைக்கு மறைந்த முதல்வர் கலைஞருக்கு டெல்லியில் மனசாட்சியாக விளங்கியவர் மறைந்த முரசொலிமாறன். இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு டெல்லியின் மனசாட்சியாக சபரீசன் மாறப்போகிறார் என்ற தகவல்கள் கசிகிறது. சபரீசனின் ‘பென்’ நிறுவனம் உடனுக்குடன் சர்வேக்களை எடுத்து திமுக-வின் சாதக பாதகங்களை சமர்ப்பித்து வருகிறார்கள். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அதிகமான ஃபாலோயர்களுடன் இயங்கும் பிரபல்யமான முகங்களுக்கு ‘தேவையான’ கன்டென்ட்களைக் கொடுத்து கருப்பு […]
- ‘பாவம்’ ஒருபக்கம்! ‘பழி’ ஒருபக்கம்! உப்பிலியபுரம் தில்லுமுல்லு!
by RENGANATHAN P
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம் தளுகை ஊராட்சி மங்கப்பட்டியில் சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமத்துவபுரம் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த செந்தில்குமார் என்பவரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். […]
- ஆட்சியில் பங்கு! திமுகவை மீண்டும் மீண்டும் சீண்டும் காங்கிரஸ்!
by RENGANATHAN P
‘‘தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பிரச்சனை இல்லை’’ என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டுள்ளார். ‘‘தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது’’ என்று முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்த நிலையில், ‘‘பிற மாநிலங்களில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் போது தமிழகம் தயங்குவது ஏன்?’’ என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். […]