- குதிரை பேரம் வழக்கு! செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!
by RENGANATHAN P
குதிரை பேரம் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியிருக்கிறது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை […]
- ஃபைவ் ஸ்டார் ஓட்டல்! ஃபாரின் சரக்கு! டிஜிட்டல் பரிவர்த்தனை! அரசகுமாரின் அதிர வைக்கும் வாக்குமூலம்!
by RENGANATHAN P
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் மற்றும் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ரூ.100 கோடி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுக செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவர் அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டலில் மதுவிருந்து அளித்தது, டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் வசூலித்தது […]
- சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி டெண்டர்கள் அதிரடியாக ரத்து!
by RENGANATHAN P
சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, ரூ.700 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்களை ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும், திட்டமிடலை மேம்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், வருவாயைப் பெருக்கவும் சொத்துவரி மற்றும் தொழில்வரி ஆகியவற்றை […]
- அமைச்சரின் பரிந்துரை கடிதம்! அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தொடரும் சர்ச்சை!
by RENGANATHAN P
அரசு வழக்கறிஞர்கள் நியமனங்கள் திறன், நேர்மை அடிப்படையில் நடைபெற வேண்டும், பரிந்துரைகள் அல்லது பிற புறக் காரணிகளின் அடிப்படையில் நடைபெறக்கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அமைச்சர் சம்பத்குமார் பெயரில் வெளியாகியுள்ள பரிந்துரைக் கடிதத்தால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தபின் ஆவின் தலைவர், அரசு […]
- கரூர் செல்லும் விஜய்! பாதுகாப்பு ஏற்படுகள் குறித்து ஏடிஜிபி ஆய்வு!
by RENGANATHAN P
ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு, கரூர் வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்கத்தில் ஏடிஜிபி அன்பு ஆய்வு செய்தார். மேலும், விஜய் வருகையின்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மட்டும் தனியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். […]
- ‘விசில் ஒலிகள் ஓங்கி ஒலிக்கட்டும்!’ தோனிக்கு விஜய் பிறந்த நாள் வாழ்த்து!
by RENGANATHAN P
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வரலாற்றுப் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வோடு […]
- குதிரை பேர விவகாரம்! செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனு!
by RENGANATHAN P
தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என். இளையராஜா, சென்னை காவல் […]
- கரூர் செல்லும் விஜய்! தி.மு.க.வின் மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் வரும் 10ம் தேதி கரூருக்கு செல்ல இருக்கிறார். அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘‘சிபிஐ விசாரணை இன்னும் முடியாத நிலையில், விஜய் அங்கு செல்வது விசாரணையை பாதிக்கும் என்றும் எனவே விஜய் கரூர் செல்ல தடை விதிக்க வேண்டும்’’ என்றும் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்த […]
- அதிமுகவின் எதிர்காலம் டி.டி.வி.யா? அண்ணாமலையா? உள்ளே நுழையும் மிதுன்!
by RENGANATHAN P
தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்தது மிகப்பெரிய தோல்வி என்பதுதான் உண்மை. காரணம், 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் […]
- பேரம் பேசிய திமுக? ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!
by RENGANATHAN P
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையுமாறு திமுகவினர் தன்னிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாக, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம்தான் தமிழக அரசியலில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘‘ஸ்ரீவைகுண்டத்தில் நான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக, […]
- ‘இப்படியொரு மரியாதையா?’ த.வெ.க. அரசை பாராட்டிய அன்புமணி!
by RENGANATHAN P
முந்தை தி.மு.க. அரசு கூட்டணிக் கட்சிகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ‘எதிர்க்கட்சிகளுக்கு இப்படியொரு மரியாதையா?’ என வியந்து த.வெ.க. அரசை பாராட்டித் தள்ளியிருக்கிறார் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்! காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அனைத்துக் […]
- விஜய்யின் கரூர் பயணம் ரத்தாகுமா? தொடரும் சட்ட சிக்கல்கள்!
by RENGANATHAN P
தமிழக முதல்வர் விஜய் வருகிற 10ம் தேதி கரூர் செல்ல இருப்பதாகவும் அதற்கான இடம் தேர்வும் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் ரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், கடந்த 2025 செப்டம்பரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் […]
- பா.ஜ.க. எதிர்ப்பு! விஜய்யை விமர்சித்த வீரபாண்டியன்!
by RENGANATHAN P
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த எதிர்ப்பை முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன், ‘‘50 நாட்களில் ஓர் ஆட்சியை மதிப்பிட்டு விட முடியாது என்றார். தவெகவுக்கு இன்னும் காலம் தேவை என்பதை வலியுறுத்திய வீரபாண்டியன், ஆட்சிக்கு நிலைத்தன்மையும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். முதல்வர் […]