- டெல்லி செல்லும் முன் அமித்ஷாவுக்கு விஜய் ‘கிரீன்’ சிக்னல்!
by RENGANATHAN P
சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி செல்வதற்கு முன்பு, கூட்டணி குறித்து விஜய் தரப்பில் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுக்கப்போகும் அரசியல் முடிவு மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைவது குறித்து […]
- மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வசமாகுமா? 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு!
by RENGANATHAN P
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாக திமுக சார்பில் எம்எல்ஏ இல்லாதது அந்த தொகுதி திமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தமுறை மொடக்குறித்து தொகுதி தி.மு.க. வசமாகுமா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி,அந்தியூர், பெருந்துறை, பவாளி, கோபிசெட்டி பாளையம், பவானிசாகர் என மொத்தம் 8 […]
- ‘அ.இ.பு.த.ம.மு.க.’! சசிகலாவின் புதிய கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம்!
by RENGANATHAN P
‘அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தன் புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் வி.கே.சசிகலா. தேர்தலில் போட்டியிட இந்தக் கட்சிக்கு ‘தென்னந்தோப்பு’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். அக்கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என வைத்துள்ளார். தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகலா […]
- திமுக ஆதரவு கட்சித் தலைவரை கைது செய்த அமலாக்கத்துறை!
by RENGANATHAN P
தி.மு.க.ஆதரவு அரசியல் கட்சித் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.25 கோடி சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஏ.எம்.மூர்த்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணியில் பசும்பொன் முன்னேற்றக்கழகம் இருப்பது […]
- திமுக மாணவரணி செயலாளராக வீரமணி ஜெயக்குமார் நியமனம்!
by RENGANATHAN P
திமுகவின் மாநில மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகியை நியமித்து அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவரணி துணைச் செயலாளராக இருந்த வீரமணி ஜெயக்குமார் என்பவரை மாணவரணி செயலாளராக நியமித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க.வில் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ்காந்தி கொள்கைப் […]
- அதிமுகவில் இணைந்த நா.த.க. காளியம்மாள்!
by RENGANATHAN P
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் சென்னையில் இன்று (மார்ச் 13) காலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பும், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பி.காளியம்மாள். தன்னுடைய அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். […]
- அரணாக மாறும் விசிக! அடைக்கலம் தருமா திமுக? அந்தரத்தில் இஸ்லாமிய வாக்குகள்!
by RENGANATHAN P
எட்டு சதவீத வாக்கு வங்கி கொண்ட இஸ்லாமியர்கள் 12 முதல் 15 அமைப்புகளாக இன்று பிரிந்து இருந்தாலும், அனைவரும் அண்ணா அறிவாலயத்தனை மட்டுமே நம்பி கட்சி நடத்துவதாக புலம்ப துவங்கியுள்ளனர் சில இஸ்லாமிய தலைவர்கள். அவர்களின் புலம்பல்கள் உண்மை என்பதைப் போல, தாய்க் கழகம் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக் இன்று இரண்டு […]
- தி.மு.க. வசமாகும் பெருந்துறை – பவானி தொகுதிகள்!
by RENGANATHAN P
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுநாள்வரை தி.மு.க. வெற்றிபெற்றதில்லை. பெருந்துறை தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.கவே அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, முதன்முறையாக தி.மு.க. வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் 1957ல் இந்திய பொதுவுடைக் கட்சி வேட்பாளர் என்.கே.பழனிசாமி வெற்றி பெற்றார். இதன் பிறகு மூன்று முறை […]
- மதுரை வடக்கு தொகுதி பெண்களுக்கு ஹேண்ட் பேக்! Dr.சரவணன் ‘எலெக்ஷன்’ கிஃப்ட்?
by RENGANATHAN P
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரும்பாலையில் கடந்த 11ம் தேதி அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பா.சரவணன் அவர்கள் அப்பகுதி அனைத்து வீடு தோறும் உள்ள இல்லத்தரசிகள் பொது மக்கள் அனைவருக்கும் ஹேண்ட் பேக்குகள் பரிசு வழங்கினர். மேலும் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை சார்பில் கரும்பாலை […]
- சட்டமன்றத் தேர்தல் தேதி! தேர்தல் ஆணையம் புதிய தகவல்!
by RENGANATHAN P
இன்னும் 3 முதல் 5 நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தத் திட்டம்; மேற்கு வங்கம் மாநிலத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. அடுத்தவாரம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் […]
- ‘எதிரியையும் நண்பராக்குவார் எங்கள் முதல்வர்!’ பூங்கோதை ஆலடி அருணா பதிவு!
by RENGANATHAN P
தி.மு.க.விலிருந்து பிரிந்து அக்கட்சிக்கு எதிராக அ.தி.மு.க. என்ற இயக்கத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.! அந்த இயக்கத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவரை தி.மு.க.வில் இணைந்து ‘இன்ப அதிர்ச்சி’யைக் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.விற்கு செல்வதும், தி.மு.க.விலிருந்து சொல்லிக்கொள்ளும் படியான முக்கிய நிர்வாகிகள் விலகாமல் இருப்பதற்குமான காரணங்களை மிகவும் அழகாக, ‘எதிரியையும் […]
- என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்! பியூஷ் கோயல் கிரீன் சிக்னல்!
by RENGANATHAN P
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திருச்சியில் சந்தித்தனர். திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘திமுக மீது மக்கள் அதிருப்தியில் […]
- முடிவுக்கு வந்த கூட்டணி! முடிவுக்கு வராத தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தொடர்ந்து காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில், மூத்த நிர்வாகிள் திமுகவுடன் இணைந்து […]