- ‘என்னை இயக்கியது பா.ஜ.க.!’ செங்கோட்டையன் ஓபன் டாக்!
by RENGANATHAN P
‘‘பா.ஜ.க. தலைமை என்னை அழைத்து அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கச் சொன்னதால்தான், இணைப்பு குறித்து வலியுறுத்தினேன்’’ என செங்கோட்டையன் உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இ.பி.எஸ்) கடுமையாக விமர்சித்தார். “என்னைப் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இ.பி.எஸ் முதலமைச்சரானார். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது […]
- அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 14 பேர் நீக்கம்!
by RENGANATHAN P
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்து பேசினார் செங்கோட்டையன். இதனையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை அதிரடியாக நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக முன்னாள் எம்பி சத்யபாமா, ஈரோடு […]
- திருச்சி மத்திய மா.செ.வாகும் அருண் நேரு! உற்சாகத்தில் உ.பி.க்கள்!
by RENGANATHAN P
அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், பொன்முடியின் மகன் ஆகியோர் ஏற்கனவே மா.செ.க்களாக மகுடம் சூடிய நிலையில், தி.மு.க.வின் சீனியரான துரைமுருகனின் மகனும் மா.செ.வாக மகுடம் சூடிவிட்டார். இந்தநிலையில்தான் மலைக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மா.செ.வாகப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் பதவி […]
- வெள்ளத்தில் வேளச்சே(ஏ)ரி! உண்மையை உடைத்த எஸ்.ஜி.சூர்யா!
by RENGANATHAN P
‘‘வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேளச்சேரி மக்கள் இப்போதே பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 2023-ம் ஆண்டு கழுத்தளவு நீரில் தத்தளித்த கொடூரமான நினைவுகள் அவர்களைத் துரத்துவதால், பலர் தங்கள் வீடுகளின் தளங்களை உயர்த்துவது, வாகன நிறுத்துமிடங்களை மேடாக்குவது, ஏன், வீடுகளையே இடித்துப் புதிதாகக் கட்டுவது என லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து வருகின்றனர். “அன்றே ஏரியை தூர்வாரி இருந்திருந்தால், 2023-லேயே […]
- அன்புள்ள விஜய்க்கு… மருது அழகுராஜின் அடுக்கடுக்கான கேள்விகள்?
by RENGANATHAN P
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தனக்கும் கரூர் துயரச் சம்பவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல் விஜய் பேசினார். துயரச் சம்பவத்திற்கு துளிகூட வருத்தம் தெரிவிக்கவில்லை விஜய். இதுதான் தமிழக அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் ‘அன்புள்ள விஜய்க்கு….’ என்ற தலைப்பில் தி.மு.க.வின் கொள்கை […]
- விஏஓ பணியிடங்களை நிரப்ப தடை! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
by RENGANATHAN P
மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல், வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடியாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. வி.ஏ.ஓ., அலுவலர் சங்க மாநில தலைவர் அருள்ராஜ், சிவகங்கை மாவட்டம், சீவலத்தி வி.ஏ.ஓ.,அகமது பயஸ் தாக்கல் செய்த மனு:மாவட்ட பணியிட மாறுதலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலுள்ள, 218 வி.ஏ.ஓ., காலிப்பணியிடங்களுக்கு செப்., 1 முதல், 15 வரை […]
- முதல்வர் வேட்பாளர் விஜய்! தவெக பொதுக்குழுவில் தீர்மானம்!
by RENGANATHAN P
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி […]
- அடுத்த கட்ட நடவடிக்கை! செங்கோட்டையன் சூசகம்!
by RENGANATHAN P
‘‘அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்… நல்லதே நடக்கும்’’ என அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் புதிர் போட்டிருப்பதுதான் எடப்பாடி கூடாரத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 5, 2025) செய்தியாளர்களிடம் பேசினார். கடந்த 30ஆம் தேதி மதுரை முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது, ஓ.பன்னீர்செல்வம், […]
- 2026ல் அதிமுக ஆட்சி! சாணக்யா டிவி சர்வே முடிவு!
by RENGANATHAN P
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என சாணக்யா டி.வி. நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சாணக்யா டிவி கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. 2989 வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக 32 சட்டமன்ற தொகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இதில், மத்திய பாஜக […]
- திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்! எம்எல்ஏ பதவி ராஜினாமா!
by RENGANATHAN P
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் […]
- 10 – 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!
by RENGANATHAN P
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (நவம்பர் 4, 2025) வெளியிட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு (அரியர்) மற்றும் […]
- பாஜகவின் ‘குறி’க்கு பலி ஆகிவிட்டேன்! திருவாரூரில் கதறிய கே.என்.நேரு!
by RENGANATHAN P
‘‘திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன்’’ அமைச்சர் என திருவாரூரில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் […]
- சென்னையில் அதிகாலையில் களமிறங்கிய அமலாக்கத்துறை!
by RENGANATHAN P
சென்னையில் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வரும் நபரின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை […]