Home

  • ‘கணவனை தேடும் மனைவி..!’ விஜய்க்கு உதயநிதி பதிலடி..!
    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசு மீது மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முதலமைச்சர் […]
  • ‘பார்ட்டி ஃபண்ட்!’ ரூ.30 ஆயிரம் கோடி! நிர்மல் குமார் சரமாரி கேள்வி!
    “முதல்வர் விஜய் தனது உரையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ எனச் சொன்னவுடன் திமுகவுக்கு ஏன் பயம் என தெரியவில்லை. அவர்கள் வெளியேறிவிட்டனர்” என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் உரை தொடங்கியுடன் அவர், ‘பார்ட்டி ஃபண்ட்’ என சொன்னவுடன், திமுகவுக்கு என்ன பயம் எனத் தெரியவில்லை. பேரவையில் இருந்து அவர்கள் […]
  • கே.என்.நேரு மீதான வழக்கு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
    முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி […]
  • ‘உங்க அப்பாவைக் காணோம்?’ சட்டசபையில் உதயநிதியை சீண்டிய விஜய்!
    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர் விஜய், “அப்பாவைக் காணோம்” என்ற குட்டி ஸ்டோரி மூலம் அவர்களின் விமர்சனங்களைச் சம்பந்தமில்லாதவை என எள்ளி நகையாடினார். தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் அரங்கேறின. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை நோக்கி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு […]
  • ‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்கும் மார்க்சிஸ்ட் எம்.பி.!’ ஏ.என்.எஸ்.பிரசாத் பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘மத்திய – மாநில உறவுகளை சீர்குலைக்க சதி செய்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்’’ என்ற பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் முன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத். இது தொடர்பாக ன்னாள் பா.ஜ.க. செய்திதொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழக சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதன்மையாக ஒலிக்கப்பட்டதை, பெருமையுடன் ஏற்றுக் கொள்ளாமல், இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக […]
  • வெளியே எடப்பாடி! உள்ளே எஸ்.பி.வேலுமணி! 15 நிமிட சந்திப்பு..!
    தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபோது, அவைக்குள்ளே அமர்ந்திருந்தார் எஸ்.பி. வேலுமணி. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது பற்றி விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. அதிமுக தலைமைக்கு எதிராக மோதல் […]
  • ‘எதிர்க்கட்சி மட்டுமல்ல, ஆளுங்கட்சியும் திமுகதான்!’ சட்டமன்றத்தில் உதயநிதி ஆவேசம்!
    தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார். இதற்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த ரியாக்ஷன் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டத்தொடரின் 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டமன்றம் தொடங்கிய உடன், எதிர்க்கட்சிகள் மற்றும் தவெக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும், மேகதாது அணை […]
  • முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்! தங்க மோதிரம்! டாக்டர் சரவணன் அறிவிப்பு!
    தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் தவெக வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்.சரவணன் ஏற்பாட்டில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக […]
  • புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு!
    புதிய நடுவர் மன்றம்… எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு! தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் மீதான நன்றி உரைக்கு முன்பாக தமிழக முதல்வர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், […]
  • ‘எதிர்காலத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இணையலாம்!’ பெ.சண்முகம் சூசகம்!
    தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நின்றால், எதிர்காலத்தில் திமுக- அதிமுக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாறி, மாறி கூட்டணி […]
  • அதிகார மையங்களின் ஆதிக்கம்! அதிகாரிகள் மாற்றப்படும் பின்னணி?
    ‘‘தவெக ஆட்சியில் ஒரே ஒரு அதிகார மையம்தான், அந்த அதிகார மையம் நான்தான்’’ என்று முதல்வராக பொறுப்பேற்றபோது விஜய் கூறியிருந்த நிலையில், தற்போது அவரது கவனத்துக்கு செல்லாமலேயே, அவருக்கு கீழ் உள்ள அதிகார மையங்களால் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்பட்டிருப்பதுதான் விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன்குமார், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மதுரையிலேயே தொடர்வதற்கு […]
  • தனியார் வசமாகும் தூய்மைப் பணி! இந்திய கம்யூ. கடும் எதிர்ப்பு!
    தூய்மைப்பணியை தனியார் வசம் விடும் முடிவை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு எடுத்திருக்கிறது. ஆனால், எக்காரணத்தை கொண்டும் இதை செய்ய கூடாது என்று கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தனியார் வசம் இருந்த தூய்மை பணியை, அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, கடந்த திமுக ஆட்சியில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து இடதுசாரிகள் […]
  • தமிழகம் வரும் அமித் ஷா! பரபரப்பில் பா.ஜ.க.வினர்..!
    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அண்மையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற இந்த […]