Home

  • மாந்திரீக பூஜை! முதியவரை எரித்துக் கொன்ற கிராம மக்கள்!
    ஆந்திராவில் மாந்திரீக பூஜை செய்த முதியவரை கிராம மக்கள் எரித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் அரக்கு மலை கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். தொம்புரிகுடா கிராமத்தில் 15 வீடுகள் உள்ள நிலையில், அவற்றில் மலைவாழ் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் […]
  • 2026 சட்டமன்றத் தேர்தல்! கமல் எடுத்த அதிரடி முடிவு!
    நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து வருவதால், அந்த விஸ்வரூபத்தை ‘உலக நாயகன்’ கமல் மூலமாக முறியடிக்க தி.மு.க. காய்களை நகர்த்தி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் இறங்கிய பிறகும் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். கடந்த […]
  • ஒத்திவைப்பு தீர்மானம்! மோடியிடம் வழங்கப்படும்! கனிமொழி தகவல்!
    ‘‘தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்குவோம்’’ என தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், ‘‘தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்’’ என்று […]
  • பிஜேபியின் இப்தார் நோன்பில் ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!
    பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி வைப்பதில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பி.ஜே.பி.யின் இப்தார் நோன்பில் கலந்துகொள்வதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் வருகிற மார்ச் 25ம் தேதி புனித ரமலான் இப்தார் நோன்பு நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தேசிய […]
  • எடப்பாடியாரின் தலைமையை ஏற்கும் சசிகலா! பற்ற வைத்த ‘வைகை’!
    ‘‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையை சசிகலா ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்’’ என வைகைச் செல்வன் பேசியிருப்பதுதான் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி நிற்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஒற்றை அதிகாரம் கொண்ட நபராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். […]
  • திமுகவை கண்டித்து நாளை ‘கருப்புக் கொடி’ போராட்டம்! அண்ணாமலை அறிவிப்பு!
    தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என அடுத்தடுத்து அறிவிப்புகளை அறிவித்து, ஆளுந்தரப்பிற்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார் அண்ணாமலை. நாளை (மார்ச் 22) ‘‘தி.மு.க., அரசை கண்டித்து நாளை காலை 10 மணிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடக்கும்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
  • இரட்டை இலை சின்னம்! அதிமுக புதிய மனு!
    அதிமுக கட்சிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அக்கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் […]
  • அமலாக்கத்துறை வழக்கு! ஆஜராவதில் விலக்கு கேட்ட அமைச்சர்!
    அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 19) நேரில் ஆஜராகினர். கடந்த 2006 – 11 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு […]
  • குற்றவாளிகள் ‘தப்பிக்க’ முடியாது! முதல்வர் கடும் எச்சரிக்கை!
    திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இது குறித்து சட்டசபையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. சட்ட சபையில் இ.பி.எஸ்., பேசியதாவது: ‘‘ஜாஹிர் உசேன் வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 3 மாதங்களுக்கு முன் உயிருக்கு […]
  • மிரட்டிய மா.செ.! நீக்கிய தலைமை!
    தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதியன்று இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், பதவிக்கு வந்த கையோடு நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், எல்லாமே இனிதான்தான் என்றும் தன்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரையும் தான் நினைத்தால் இடமாற்றம் செய்யமுடியும் […]
  • ‘சாதிக்க வயது, பாலினம் தடையல்ல!’ பூங்கோதையின் நெகழ்ச்சி பதிவு!
    ‘‘உலகில் சாதனை படைக்க வயது மற்றும் பாலினம் ஒரு தடையல்ல’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதிவிட்டிருப்பதுதான் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. இது தொடர்பாக தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, ‘‘அனைவருக்கும் வணக்கம் இன்று காலை எழுந்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் […]
  • ‘மக்களைத் தேடி மருத்துவம்’! நிதிநிலை அறிக்கையில் உண்மையில்லை! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடி 20 லட்சம் பயனாளிகள் பயன் அடைந்தவர்கள் என்று உண்மைக்கு புறம்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நான்காண்டுகளில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 75,694 கோடிக்கு செய்த பணிகளுக்கு அமைச்சர் வெள்ளை அறிக்கை விடுவாரா? தமிழகத்தில் அதிகரித்து வரும் புற்று நோய்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கையை ஸ்டாலின் மறைத்துள்ளார்.தற்போது […]
  • லாலுவுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!
    ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக நிலம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிச் தலைவரும், பிஹாரின் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவ், மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “76 வயதான லாலு, பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. […]