Home

  • உயிர்ப்பித்த ஊழல் வழக்கு! வைத்திலிங்கத்திற்கு வைக்கப்பட்ட செக்!
    முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஒரத்தநாடு வைத்திலிங்கம் மீதான முடித்து வைக்கப்பட்ட ஊழல் வழக்கு உயிர்ப்பித்திருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான லஞ்ச வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை திரும்பப் பெற அனுமதிக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
  • அண்ணாமலை கட்சியில் இணையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!
    நடிகர்கள் பலரும் ‘மக்களுக்கு சேவை’ செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர். இதில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. தமிழகம் முழுவதிலும் 1980ம் ஆண்டே ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜயகாந்தால் 2011ல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பிடிக்க முடிந்தது. அதன் பிறகு அக்கட்சியும் பெயருக்குதான் இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சி […]
  • கட்டுக் கடங்காத கடன் ! தவெகவுக்கு தாவும் அதிமுக புள்ளிகள்!
    2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடும் என நினைத்து பலரும் பல கோடிகளை வாரியிறைத்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். குறிப்பாக அ.தி.மு.க.வில் இந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களிடம் முன்கூட்டியே ‘10 சி’ கொடுத்தவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்பட்டது. பல ‘மாஜி’க்கள் ‘10 சி’ கொடுக்க தயங்கியதால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ஒரு பைசா கூட செலவு […]
  • 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!
    தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அதிகாரிகளை நியமித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். அந்த 4 தொகுதிகளும் காலியாகியுள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கையை […]
  • முதல்வர் விஜய்யை சுற்றி 4 ‘பவர்’ சென்டர்கள்! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்?
    மிழகத்தைப் பொறுத்தளவில் ஆளும் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக ‘பவர்’ சென்டர்களாக சிலர் வலம் வருவார்கள். இவர்களைப் பிடித்தால் ‘உச்ச’ பதவியை பெற முடியும். அவரைப் பிடித்தால் ‘அந்த’ இடத்திற்கு டிரான்ஸ்பர் ஆக முடியும் என்பதுதான் வரலாறு! தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, ‘இங்கு யாரும் ‘பவர்’ சென்டர்கள் கிடையாது. நான் ஒருவன் மட்டும்தான் ‘பவர்’ சென்டர்’ என ஓபனாக […]
  • கே.என்.நேரு விவகாரத்தில் சிக்கிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ்!
    ஏற்கனவே அமலாக்கத்துறை குறியில் சிக்கிய உதயநிதியின் நண்பர் ரத்தீஷ், தற்போது கே.என்.நேரு விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்! தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. விஜய் […]
  • அலைகள் ஓய்ந்தது… இமயம் சரிந்தது… பாரதிராஜாவுக்கு முதல்வர் அஞ்சலி!
    இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து […]
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… எச்சரித்த முதல்வர் விஜய்..!
    “பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்படும்” என சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதல்வர் விஜய் பேசினார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி […]
  • ‘தங்கம், குட்டி’யால் ‘கெட்டி’யாக சிக்கும் ‘மாஜி’ மந்திரி..!
    தி.மு.க. ஆட்சி முடிந்து த.வெ.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அமைச்சர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது. அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்து துறை அமைச்​ச​ராக இருந்​த​போது, வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி […]
  • ‘த.வெ.க. அரசில் ஊழல் குறைந்துள்ளது!’ அன்புமணி பெருமிதம்!
    “தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதல்வரை சந்தித்து தமிழகத்தில் சாதி […]
  • முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்காது ஏன்? அமைச்சரின் ‘அடடே’ விளக்கம்!
    “முதல்வர் விஜய் செயல்பாடுகளையே முக்கியமாக நினைக்கிறார். சொன்னதைச் செய்கிறோமா, மக்கள் அதில் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதையே முதல்வர் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் காட்டிலும், செயல்வடிவத்திலே அவருடைய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.” என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், […]
  • பிரபல பாருக்குள் பாலியல் தொழில்! பாய்ந்து பிடித்த ‘சிங்கப் பெண்’!
    பிரபலமான பாரில் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் போதையின் உச்சத்திற்கு கொண்டு சென்று, பலான தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை இளம் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தட்டித் தூக்கியிருப்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஹைத​ரா​பாத் கூகட்​பல்லி பகு​தி​யில் உள்ள ‘கிளப் மஸ்​தி’ எனும் பார் வெகு பிரசித்​தம். இதனை ‘கு​யின்ஸ் அண்ட் கிங்ஸ் பப்’ என்​றும் அழைப்​பர். இங்கு இரவில் நிபந்​தனை​களை […]
  • தேர்தல் தோல்விக்கு யார் காரணம்? சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!
    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றி ஸ்டாலின் ஆலோசித்தாரம். அடுத்த ஓரிரு நாட்களில் ஸ்டாலின் சில அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி […]