- 9 ஆண்டுகால உறவு முறிந்தது! திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக!
by RENGANATHAN P
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கட்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் […]
- ரகசிய காப்பு உறுதிமொழியை மீறுகிறாரா விஜய்? வில்சன் சரமாரி கேள்வி!
by RENGANATHAN P
கர்நாடகாவைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’யாக நியமித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘‘ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆவர். அரசில் அவர்கள் என்ன அதிகாரப்பூர்வப் பதவிகளை வகிக்கிறார்கள் […]
- திமுக ஆட்சியில் திமுகவினர் மகிழ்ச்சியில் இல்லை! அதிர்ச்சி ரிப்போர்ட்! அதிர்ந்த ஸ்டாலின்!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணத்தை அறிய குழு அமைத்தார் ஸ்டாலின். அந்தக் குழு அளித்துள்ள அறிக்கைதான் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் திமுகவினரே மகிழ்ச்சியாக இல்லையா என்று அதிர்ச்சி அடைந்துள்ள ஸ்டாலின், அமைச்சர்கள் கீழ் மட்ட தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் செவிசாய்க்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்டுள்ளார். சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவில் நிலவும் […]
- இன்று தாயகம்! நாளை அறிவாலயம்! வைகோவுக்கு ‘ஷாக்’ கொடுக்கும் ஸ்டாலின்!
by RENGANATHAN P
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக இன்று கூடுகிறது மதிமுக பொதுக்குழு. அதேசமயம், தங்களைத் தூற்றிவிட்டு தவெக-வை தூக்கிவைத்துக் கொண்டாடும் விதமாக இன்றைய பொதுக்குழுவில் முடிவெடுக்கப் போகிறது மதிமுக என்பதை ஊகித்துவிட்ட திமுக தலைமை, மதிமுக-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ‘பொடா தியாகிகள்’ உள்ளிட்டோரையும் நடப்பு நிர்வாகிகள் சிலரையும் நாளை காலையில் அறிவாலயப் பிரவேசத்துக்கு அழைத்திருக்கிறது. தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும் ஆதரவான […]
- முடிவுக்கு வந்த ‘முந்தானை முடிச்சு’ ! ‘காலமானார்’ இயக்குநர் பாக்கியராஜ்!
by RENGANATHAN P
நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் […]
- ஜூலை 2 முதல் துறை வாரியான ஆய்வுக்கூட்டம்!
by RENGANATHAN P
முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை தொடர் ஆய்வுக்கூட்டங்களை நடத்த முடிவு செய்து உள்ளார். தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தயாராகி வருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, தமிழக அரசின் […]
- ‘ திமுகவில் இணைந்துவிட்டேன்!’ வைகோவுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ.!
by RENGANATHAN P
சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் கேட்ட போது, அவர் கட்சியின் உயர்நிலைக் குழுவில் உறுப்பினராக இல்லாததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எம்எல்ஏ செந்தில் செல்வன், ‘‘நான் ஏற்கனவே மதிமுகவிலிருந்து விலகி […]
- திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!
by RENGANATHAN P
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ‘‘விரைவில் ஸ்டாலின் சட்டசபை செல்வார்!’’ என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசி இருந்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இன்னும் முடிவு எடுக்கவில்லை!’’ என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
- சென்னை மேயருக்கு ‘ஷாக்’! 35 டெண்டர்கள் அதிரடியாக ரத்து!
by RENGANATHAN P
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபாதை பணிகளுக்காக 35 டெண்டர்கள் விடப்பட்டன. இந்த டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் விஜய் உத்தரவில் அந்த டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியின் தலைவரான விஜய் முதல்வராகி உள்ளார். இந்நிலையில் […]
- விஜய்க்கு அவரது ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்த பூங்கோதை ஆலடி அருணா!
by RENGANATHAN P
தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ‘குட்டி கதை’ சொன்ன விவகாரம்தான் தி.மு.க.வினரை கொந்தளிக்க வைத்தது. அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினமே ஆர்.எஸ்.பாரதி முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அடுத்தது ஆ.ராசா உள்பட பலர் கடுமையாக எச்சரித்த நிலையில்தான், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். […]
- ஜெகதீஷ் மீது சட்ட நடவடிக்கை! எச்சரித்த திமுக வழக்கறிஞர் வில்சன்!
by RENGANATHAN P
முதல்வர் விஜய் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்த நிலையில், தி.மு.க. தரப்பிலும் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் செய்தி மக்கள் தொடர்பு துறையை அரசியல் பிரச்சாரத்திற்கு விஜய் பயன்படுத்துவதாகவும், இதற்கு அவரது தனிப்பட்ட செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமி இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தி.மு.க. எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் […]
- ‘ஒரே ஒரு வழக்கு! அரசியலை விட்டே விலகியிருப்பார் விஜய்!’ ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!
by RENGANATHAN P
“நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஒரேயொரு வழக்கு போட்டிருந்தால், விஜய் அரசியலை விட்டே ஓடிப்போயிருப்பார். தவறான பிரச்சாரங்களை பிஞ்சு உள்ளங்களில் ஏற்படுத்தி, அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விஜய் இன்று ஆட்டம் போடுகிறார்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக மிசாவையே பார்த்த கட்சி. பல்வேறு அடக்குமுறைகளை கண்டுள்ளோம். இது […]
- திமுக ஆட்சியில் விடப்பட்ட முக்கிய டெண்டர் ரத்து! தவெக அரசு அதிரடி!
by RENGANATHAN P
ஏற்கனவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் தொடங்கப்படாமல் இருந்த ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்த் துறையில் விடப்பட்டுள்ள டெண்டரும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்திற்காக 500 மின்சார பேருந்துகளை வாங்கவும், அதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் […]