Home

  • பழனி கோவில் நில மோசடி! விற்றவர், வாங்கியவர், சார்பதிவாளர் வீடுகளில் ரெய்டு!
    பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக திண்டுக்கல்லில் உள்ள பழனி சார் பதிவாளரின் […]
  • ‘ஜனநாயகன்’ ரிலீஸ்! புஸ்ஸி ஆனந்தின் அன்புக் கட்டளை!
    வருகிற 23ம் தேதி முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ‘இப்படைத்தை த.வெ.க.வினர் திருவிழா போல் கொண்டாடவேண்டும்’ என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்தநாளன்று கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். கடந்த பொங்கலுக்கு படத்தை ரீலீஸ் செய்ய கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. […]
  • நேற்று ஆய்வு… இன்று அரசாணை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!
    முதல்வர் விஜய் சமூகநீதி விடுதில் நேற்று ஆய்வு செய்து, இன்றைக்கு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதுதான் மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னையில் மழைக்கு நடுவே சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் இன்று மாலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சமயத்தில் விடுதியில் உள்ள மாணவர்கள் விஜய்யிடம் பல்வேறு புகார்களை கூறிய நிலையில் விரைவில் சரிசெய்து வழங்குவதாக விஜய் […]
  • ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? ‘சாதனை’ மாணவனின் பேட்டி!
    கடந்த ஜுன் 21-ம் தேதி மீண்​டும் நடத்​தப்​பட்​ட நீட் தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யா​யின. இத்​தேர்வில் மொத்​தம் 11.21 லட்​சம் பேர் தேர்ச்சி பெற்​றுள்ள நிலையில், இதில் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று பஞ்​சாப்​பைச் சேர்ந்த ஆரியன் குப்தா மற்​றும் ஹரி​யா​னாவைச் சேர்ந்த பன்​ஷுல் பன்​சால் ஆகியோர் முதலிடம் பிடித்​துள்​ளனர். அதே நேரத்​தில், 19 பேர் […]
  • குதிரை பேர விவகாரம்! கோபப்பட்ட விஜய்! யார் மீது தெரியுமா..?
    ‘த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியது’ என செந்தில்¢பாலாஜி ஆதரவாளர்களாகக் கூறி சிலரை கைது செய்தது காவல்துறை! ‘தமிழகத்தில் குதிரை பேரம் செய்வது விஜய்தான்’ என தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருப்பதுதான் விஜய்க்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. மாற்றுக்கட்சியிலிருந்து தவெகவில் சேரும் தலைவர்களால் தலைவலி தான் ஏற்படுகிறது என்று தனது ஆலோசகர்களிடம் கோபப்பட்டுள்ளார் […]
  • ‘நான் ஓடி ஒளியவில்லை!’ செந்தில் பாலாஜி காவல்துறைக்கு கடிதம்!
    நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது பெயரும் என் சகோதரர் அசோக்குமார் பெயரும் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இல்லாத போது நாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. தவெக […]
  • அமலாக்கத்துறை விசாரணையில் மீண்டும் சிக்கிய செந்தில் பாலாஜி!
    தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் குதிரை பேர வழக்கில் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு விசாரணைக்கு இடையே இதில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் உள்ளதால் அமலாக்கத்துறை தரப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை விலைக்கு வாங்க முயன்ற வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி மற்றும் அவரது […]
  • கட்சித் தாவல்! குதிரை பேரம்! உள்ளாட்சியில் தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் சுளீர் பேட்டி!
    “உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக் கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும். எனவே தேவை ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை […]
  • லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். இடமாற்றம்!
    லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஐ.ஜி. மகேஸ்வரிக்கு கூடுதலாக அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ். அருண், போலீஸ் அகாடமிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.ஜி. மகேஸ்வரிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]
  • தவெக அரசின் முதல் பட்ஜெட்! ஜூலை 16ல் அமைச்சரவை கூட்டம்!
    தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. […]
  • குதிரை பேர அரசியல்! திமுக, அதிமுக அதிரடி முடிவு!
    “முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் […]
  • எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
    திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஜூலை 13-ந் தேதி மேல்முறையீடு செய்துள்ளது. திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ”திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் […]
  • கட்சித் தாவல் தடை சட்டத்தில் திருத்தம் தேவை! Dr.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
    ‘‘தமிழகத்தில் தற்போது நிலவிவரும் குதிரை பேர அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: ‘‘தமிழகத்தில் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான் எனது கோரிக்கை. திமுக, அதிமுக, […]