Home

  • தமிழ்நாட்டிற்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் !
    தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 285 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு 397 கோடி ரூபாய் வழங்கவும் மத்திய […]
  • குட்கா கடத்தல்; ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து நீக்கம்..!
    பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு 600 கிலோ குட்கா கடத்தி வந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள வி ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் (வயது […]
  • பெங்களூருவில் திருமாவளவன் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் !
    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் […]
  • ரேபரேலியில் அரசியல் கணக்கை துவக்கும் பிரியங்கா! இன்று மாலை அறிவிப்பு!
    உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று (சனிக்கிழமை) மாலை அக்கட்சி அறிவிக்கிறது. இதனால், இந்தத் தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ராகுல், பிரியங்கா காந்தியே வேட்பாளர்கள் அவர்கள் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள் என்ற […]
  • ‘நோட்டா’வுக்கும் குறைவா? வேட்பாளர்களுக்கு தடை?
    நாட்டில் நடைபெறும் தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஒருவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அவர்கள் அனைவருக்கும் எதிராக வாக்களிக்க விரும்புபவர்களுக்காக ‘நோட்டா’ என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டது. வாக்காளர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல் சட்டத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கடந்த 2013-ம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ‘நோட்டா’வுக்கென தனிச் […]
  • நாய்க்கு புலி வேஷம்! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..!
    மயிலாடுதுறையில் சிலநாட்களுக்கு முன் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. ஆனால், சில மர்ம நபர்கள் தெரு நாயின் உடலில் புலியைப் போலவே அழகான கோடுகளை வரைந்து, வண்ணமிட்டு உலவவிட்டது தெரியவந்தது. புலி வேஷம் போடப்பட்ட நாய், கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் […]
  • குட்கா கடத்தல்! தென்காசி திமுக பிரமுகர் கைது!
    திமுகவைச் சேர்ந்த தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு போதை பொருட்களின் கூடாரமாக மாறி வருகிறது என்று தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்தார். இளம் தலைமுறையினர் திமுக ஆட்சி காலத்தில் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினார் மோடி. அதே […]
  • குடிநீர் தொட்டியில் சாணம்! புதுக்கோட்டையில் மீண்டும் புகைச்சல்!
    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்ததாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுகள் கலந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டு […]
  • 4 கோடி ரூபாய் சிக்கிய வழக்கு..! சிபிசிஐடி-க்கு மாற்றிய டிஜிபி..!
    கடந்த 6-ந்தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்குரகசிய தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் பறக்கும்படை அதிகாரிகள் ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பணத்துடன் 3 பேர் சிக்கினர். அவர்கள் கொண்டு செல்ல முயன்ற 4 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் […]
  • இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்..!  நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு  தீவிரம்..!
    டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து கண்காணிப்பு தீவிரபடுத்தியுள்ளனர். 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து சென்னையிலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இன்று காலை கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு […]
  • இந்தியாவை விட்டு வெளியேறுவோம்! வாட்ஸப் நிறுவனம் வாதம்!
    “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end encryption)ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் கடந்த 2021ம் ஆண்டு ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’ கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் […]
  • கேரளாவில் தாமரை மலரனும்! கீர்த்தி சுரேஷ் தாய் விருப்பம்!
    நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா இன்று திருவனந்தபுரத்தில் ஓட்டுப்போட்ட நிலையில் ‘‘தாமரை தான் மலர வேண்டும்” என அவர் கூறினார். கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இன்று ஒரே கட்டமாக கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை […]
  • ஓட்டு போட்டால் இலவச பீர்! கர்நாடகாவில் புதிய ஆஃபர்..!
    வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் கர்நாடகாவில் ஓட்டல், பார், வர்த்தக நிறுவனர்கள் பல வித அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இலவச பீர், இலவச உணவு போன்ற அறிவிப்பு வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 88 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் காலை முதல் […]