- ‘எதிரியையும் நண்பராக்குவார் எங்கள் முதல்வர்!’ பூங்கோதை ஆலடி அருணா பதிவு!
by RENGANATHAN P
தி.மு.க.விலிருந்து பிரிந்து அக்கட்சிக்கு எதிராக அ.தி.மு.க. என்ற இயக்கத்தை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.! அந்த இயக்கத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவரை தி.மு.க.வில் இணைந்து ‘இன்ப அதிர்ச்சி’யைக் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.விற்கு செல்வதும், தி.மு.க.விலிருந்து சொல்லிக்கொள்ளும் படியான முக்கிய நிர்வாகிகள் விலகாமல் இருப்பதற்குமான காரணங்களை மிகவும் அழகாக, ‘எதிரியையும் […]
- என்.டி.ஏ. கூட்டணியில் விஜய்! பியூஷ் கோயல் கிரீன் சிக்னல்!
by RENGANATHAN P
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் திருச்சியில் சந்தித்தனர். திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘திமுக மீது மக்கள் அதிருப்தியில் […]
- முடிவுக்கு வந்த கூட்டணி! முடிவுக்கு வராத தொகுதி பங்கீடு!
by RENGANATHAN P
தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தனது கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நிறைவு செய்தது. தொடர்ந்து காங்கிரஸ் அதிக இடங்களை கேட்டு முரண்டு பிடித்து வந்த நிலையில், மூத்த நிர்வாகிள் திமுகவுடன் இணைந்து […]
- கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!
by RENGANATHAN P
காரைக்குடியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தின் மீது இன்று காலையில் சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை லோக்சபா தொகுதியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது எம்பி அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ளது. […]
- வளைக்கும் சி.பி.ஐ.! வளைந்து கொடுப்பாரா விஜய்..?
by RENGANATHAN P
கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், கட்சி பணிகள் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து தான் தற்போது வரும் 15 ஆம் தேதி ஆஜராக சிபிஐ […]
- கரூர் துயரம்! சிபிஐ சம்மன்! மார்ச் 17ல் ஆஜராகும் செந்தில்பாலாஜி!
by RENGANATHAN P
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், மார்ச் 17ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக […]
- திமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களில் யாருக்கு சீட்டு?
by RENGANATHAN P
சமீபத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வின் சீனியர் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான, ஓ.பி.ரவீந்திரநாத்தும் இணைந்தார். இணையும்போதே தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தரும் உத்தரவாதத்தை தி.மு.க.விடம் பெற்றுக்கொண்டுதான் இணைந்தாராம் ஓ.பி.எஸ்.. ‘‘ மூன்றுமுறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு போடி தொகுதி, வைத்திலிங்கத்திற்கு ஒரத்தநாடு தொகுதி, […]
- த.வெ.க.வில் யாருக்கு சீட்டு? வெளியான வேட்பாளர் பட்டியல்!
by RENGANATHAN P
த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட உத்தேச பட்டியல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை த.வெ.க. பெற்றது. 4,200-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தது. இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் இன்று முதல் நேர்காணல் நடத்த உள்ளார். இதற்காக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் […]
- நீதிமன்றம் அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக எம்.பி.!
by RENGANATHAN P
அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவரான ஜி.கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்கள் கிராமத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான […]
- விஜய் வாகன விபத்தில் சிக்கிய இளைஞருக்கு அன்பில் மகேஷ் ஆறுதல்!
by RENGANATHAN P
தவெக கூட்டத்தில் பங்கேற்க விஜய் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தபோது விபத்தில் சிக்கி காயமடைந்த மாணவரை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே அய்யாச்சாமிபட்டியில் மார்ச் 4-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க திருச்சியில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர […]
- சிபிஐயிடம் அவகாசம் கேட்கும் விஜய்! ‘சம்மன் வரவில்லை’! செந்தில் பாலாஜி!
by RENGANATHAN P
கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், தேர்தல் பணி கா ரணமாக 15 நாள் அவகாசம் கேட்டு சிபிஐக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் […]
- திருச்சி கிழக்கு – பெரம்பூர்! விஜய் களமிறங்கும் 2 தொகுதிகள்!
by RENGANATHAN P
த.வெ.க. தலைவர் விஜய் நாளை விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக […]
- கரூர் துயரம்! மீண்டும் சம்மன்! விஜய் திடீர் ஆலோசனை!
by RENGANATHAN P
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த […]