Home

  • செந்தில் பாலாஜி விவகாரம்… முதல்வர் விஜய் கையில் ‘லகான்’!
    தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சற்றும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டை வட்டாரத்தில் இப்போது மிக முக்கியமான ஒரு விவாதம் முளைத்துள்ளது. அது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ-வுமான வி. செந்தில் பாலாஜிக்கு எதிரான […]
  • ‘பதவிக்காக கட்சிக்கு சிலர் துரோகம்!’ மா.செ.க்களிடம் உருகிய எடப்பாடி!
    ‘‘பதவிக்காக கட்சிக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு போய்விட்டார்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் ஒரு பிரிவினர், அதாவது சிவி சண்முகம்- எஸ்பி வேலுமணி தலைமையில், தமிழக […]
  • கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… எடப்பாடியை எச்சரித்த சி.வி.சண்முகம்!
    ‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல, தனது பதவிக்கு ஆபத்து வந்தவுடன் ‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என பேசுகிறார். முன்னமே இதனை செய்திருந்தால், பழனிசாமி இன்று முதல்வராகியிருப்பார்’’ என்று சி.வி.சண்முகம் ஆதங்கத்துடன் பேசினார். சென்னையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய […]
  • எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி தரப்பு ‘ஷாக்’ எச்சரிக்கை!
    “கட்சித் தாவல் தடைச் சட்ட புகார் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் நபர் அமைச்சராக இருந்தால் ஆர்டிக்கல் 142 வழங்கும் சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்யலாம்’’ என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்பதுரை எம்.பி., வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கட்சித் தாவல் தடைச் […]
  • முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
    முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர்கள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளி […]
  • ‘சாதிய இறுக்கத்திலிருந்து விடுபடாத தமிழகம்!’ திருமாவளவன் ஆதங்கம்!
    “சமூக நீதி மண், பெரியார் மண் என்று சொன்னாலும் தமிழகம் சாதிய இறுக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத மாநிலம். இங்கே அவ்வளவு இலகுவாக தலித் முதல்வராக முடியாது. திமுக – அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், அது தொடர்பாக பல இடங்களில் கிசுகிசுப்பாக பேசப்பட்டது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் […]
  • அரசியலில் இருந்து ஓய்வு… ஸ்டாலினுக்கு ‘ஷாக்’ கொடுத்த பி.டி.ஆர்.!
    அரசியலில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதார் பத்ருதீனிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இன்று (மே 18) பிடிஆர் அறிக்கை ஒன்றை […]
  • அ.தி.மு.க.விலிருந்து விலகிய செம்மலை!
    அ.தி.மு.க. தலைமைக்கு இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும்போது, பக்கபலமாக இருந்தவர்தான் சேலத்தைச் சேர்ந்த செம்மலை. அதிமுக மூத்த தலைவரான செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாகப் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுகவில் எடப்பாடி தலைமையிலானோர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். மறுபுறம் எஸ்பி வேலுமணி- சி வி சண்முகம் […]
  • ‘விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமையா?’ மனம் திறந்த ரஜினி!
    தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்தது ஏன்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமாக விவரித்துள்ளார். சென்னை – போயஸ் கார்டனில் செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்திருந்தார். அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து விளக்கம் தர […]
  • அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள்! எப்போது நியமனம்..?
    முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத முக்கிய துறைகள் இருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்..! தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின்படி, ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி […]
  • சிறப்பு பொதுக்குழுவை கூட்டும் சி.வி.சண்முகம்! பொ.செ.வாகும் சசிகலா!
    அ​தி​முக​வில் ஏற்​பட்​டுள்ள உட்​கட்​சிப் பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலை​யில், கட்​சி​யில் சிறப்பு பொதுக்​குழுவை கூட்​டு​வதற்​காக பழனி​சாமிக்கு எதி​ராகச் சண்​முகம் தரப்பு அதிரடி​யாகக் கையெழுத்து வேட்​டை​யில் இறங்​கி​யுள்​ளது. மறு​புறம் சண்​முகம் தரப்​புக்கு எதி​ராக நீதி​மன்​றத்தை நாட பழனி​சாமி தரப்பு முடிவு செய்​திருப்​ப​தால் அக்​கட்​சி​யில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்து அதி​முக வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]
  • விஜய் அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? இலாகாக்கள் ஒதுக்கீடு!
    தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல்வர் விஜய் பொது நிர்வாகம், மகளிர் நலன், இளைஞர் நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார். அமைச்சர் புஸ்சி ஆனந்திற்கு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சரான செங்கோட்டையனுக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. […]
  • எடப்பாடியை சந்திக்கிறாரா ஆளுநர் அர்லேகர்..?
    தமிழ்நாடு அரசியல் பரபரப்பில், தவெக அரசைச் சுற்றிய குதிரை பேரம் குற்றச்சாட்டுகள் அதிமுக உள்கட்சி போருக்கு வழிவகுத்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி அணியை குறிவைத்து, 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறி நடவடிக்கை கோரிய நிலையில், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து நிலைமையை விளக்க முயல்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான […]