Home

  • விஜய்யின் ‘டெல்லி மனசாட்சி’ யார்..?
    மறைந்த முதல்வர் கலைஞருக்கு ‘மனசாட்சி’யாக டெல்லியில் விளங்கியவர்தான் முரசொலிமாறன். தமிழகத்தில் ஆட்சி புரிபவர்களுக்கு தனக்கு மிகுந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும், மனசாட்சியாகவும் டெல்லியில் செயல்படக்கூடிய நபர் ஒருவர் அவசியம்! அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு, மருகன் சபரீசன் ஆகியோர் செயல்பட்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வராகியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு […]
  • திமுக கூட்டணியிலிருந்து விலகும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!
    தி.மு.க. கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியேறுவதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது. வருகிற ஜூன் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றியை பெற்ற நிலையில், ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி பிடித்தது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து […]
  • மின்மாற்றி கொள்முதல் ஊழல்! அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு!
    திமுக ஆட்சியில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள் ளது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது 2021-23 காலகட்டத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி கள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் […]
  • பணிச்சுமை! மனஅழுத்தம்! ஆட்டோ ஓட்டும் ‘ஐ.டி.’ பெண்!
    பெங்​களூரு​வைச் சேர்ந்த முன்​னணி தகவல் தொழில்​நுட்ப (ஐடி) நிறுவன பெண் மேலா​ளர் ஒரு​வர், தற்​போது ஆட்டோ ஓட்​டுந​ராக பணி​யாற்றி வரு​கிறார். கேரளாவை பூர்வி​க​மாகக் கொண்ட பெண் தொழில​திபர் நெஸ்​ரின் மித்​லாஜ். ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாயை மைய​மாகக் கொண்டு அவர் பல்​வேறு நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். அண்​மை​யில் கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வுக்கு சென்ற அவர் ஒரு ஆட்​டோ​வில் பயணம் […]
  • நாளை மறுநாள் (திங்கள்) திருச்சி செல்லும் விஜய்!
    முதல்வர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேரில் செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு […]
  • த.வெ.க. மீது ஆளுநரிடம் அதிமுக ‘பகீர்’ புகார்! நடவடிக்கை பாயுமா?
    “அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில் இணைந்துவிட்டனர். இதையடுத்து அதிமுகவில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி […]
  • அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சி.வி.சண்முகம்! அடுத்த மூவ்..?
    அதிமுகவில் பிரிந்த அணிகள் இணைந்த போதும், சி.வி.சண்முகம் மட்டும் இணையாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவியை சி.வி.சண்முகம் எடப்பாடி தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறார். சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏ-க்கள் அணி திரண்டனர். இதனால் அத்தனை பேரின் மாவட்டச் செயலாளர்களின் பதவியும் […]
  • எடப்பாடியின் சுயநலத்தால் கரையும் அ.தி.மு.க.! துளிரும் த.வெ.க.!
    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. கரைந்துகொண்டிருக்கிறது. கொக்கு காத்திருப்பதுபோல் காத்திருந்து ஒவ்வொருவரையாக ‘தூக்கி’ வருகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. […]
  • தி.மு.க.வில் இணையும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர்!
    த.வெ.க.வில் இணைந்து அமைச்சர் பதவி பெற முயற்சித்த அ.தி.மு.க.வின் ‘மாஜி’ அமைச்சர்களின் கனவு பலிக்காமல் போய்விட்டது. இதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடம் இருப்பதால், த.வெ.க.வும் தயங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் […]
  • தமிழக டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!
    தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி தேர்வுக்கு 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ள நிலையில், இன்றைக்கு மகேஷ் குமார் அகர்வாலை டி.ஜி.பி.யாக நியமித்திருக்கிறது தமிழக அரசு! தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி பணி ஓய்வு பெறுவதற்கு […]
  • ‘வந்தே மாதரம்’ பாடல்… டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த கேரளா!
    மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தை கட்டாயமாக பாட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த அறிவிப்பில் அரசு நிகழ்ச்சியில் முதலாவதாக வந்தே மாதரம் பாடலைத்தான் பாட வேண்டும் என்றும், அதன் பிறகே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது. அதே போல வந்தே மாதரம் பாடலின் அதிகாரப்பூர்வ முழுப் […]
  • ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகள்! உச்ச நீதிமன்றம் 3 மாதம் ‘கெடு’!
    நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாங்கள் ஒத்திவைக்கும் தீர்ப்புகளை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘தீர்ப்புகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் வழக்காடுபவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து உயர் நீதிமன்றங்களும் […]
  • அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்! திகு திகு திருச்செந்தூர்!
    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ரகசியமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் விரைவாக தரிசனம் செய்ய ரூ.4000 அர்ச்சகர் பணம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சாமானிய மக்களை போல் முகக்கவசம் அணிந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கோயில் வளாகம், அன்னதானம் […]