- கரூர் அரசு பணி ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
by RENGANATHAN P
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனிடையே தவெக தலைவர் விஜய் 2026-ஆம் ஆண்டு சட்டமனற […]
- எஸ்.பி.வேலுமணி அணியில் விரிசல்! இபிஎஸ் பக்கம் சென்ற தங்கமணி!
by RENGANATHAN P
த.வெ.க.வுடன் நெருக்கம் காட்டி வரும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு ‘செக்’ வைக்கும் விதமாக விவசாயிகள் பிரச்னைகளை கையில் எடுத்து அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும்’’ என உத்தரவிட்டிருந்தார். […]
- ‘வெற்றி தமிழ்நாடு’ முதலீட்டாளர்கள் மாநாடு! ரூ.68 கோடிக்கு ஒப்பந்தம்! 1 லட்சம் பேருக்கு வேலை!
by RENGANATHAN P
தமிழக அரசின், ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு-2026’ சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கிய முதல்வர் விஜய், ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். மாநாட்டில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது வரவேற்புரையில் பேசியதாவது: தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது எங்கள் இலக்கு. ஆட்சிப் பொறுப்பேற்ற 100 […]
- தேநீர் விருந்தில் கனிமொழி! ‘ஷாக்’கில் காங்கிரஸ்! ‘குஷி’யில் பி.ஜே.பி.!
by RENGANATHAN P
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரிய தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. ஆனால், இதில் தி.மு.க எம்.பி கனிமொழி பங்கேற்றது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் புதிய அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பாரம்பரியத் தேநீர் விருந்தை காங்கிரஸ், […]
- அதிமுகவிலிருந்து விலகிய அப்சரா! மனம் திறந்து எழுதிய மடல்!
by RENGANATHAN P
அதிமுகவில் இருந்து விலகுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, திருநங்கை அப்சரா கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எனது அரசியல் பயணம் இனி வேறு ஒரு பாதையில் செல்லலாம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக அதிமுகவில் இருந்து எம்எல்ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில், தற்போது அப்சராவும் கட்சியில் இருந்து விலகுவதாக பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த […]
- ‘டாஸ்மாக்‘கைப் போல் குவாரிகளை தமிழக அரசே நடத்துமா..?
by RENGANATHAN P
தமிழகத்தில் அனைத்து குவாரிகளையும் அரசு நடத்தக் கோரிய வழக்கில் மாநில அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமர்லால் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரி நடவடிக்கைகளையும் அரசு ஏற்று நடத்த வேண்டும். அவற்றை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், குவாரிகளில் இருந்து […]
- மனிதனின் ‘தலைவிதி’! சிந்திக்க வைத்த மருது அழகுராஜின் பதிவு..!
by RENGANATHAN P
தமிழக அரசியல் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி ‘குட்டு’ வைத்து எழுதுபவர்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ். சமீபதில் ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ கோட்டை’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் பதிவு செய்திருந்தது மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்தான் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்,‘‘தலைவிதி’’ எனும் தலைப்பில்… ‘‘ “தல”எழுதியவிதிஅதனால்அதற்குதலைவிதிஎனப் […]
- காவல்துறையில் ஊழல் ஒழிப்பு தனி பிரிவு! சென்னை கமிஷனர் அமல்ராஜ் அதிரடி!
by RENGANATHAN P
போலீஸார் லஞ்சம் கேட்டால், புகார் தெரிவிக்கும்படி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் தெரிவிக்க வசதியாக செல்போன் எண்ணையும் வெளியிட்டு, ஊழல் ஒழிப்பு தனிப் பிரிவையும் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ போலீஸார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி […]
- ‘புகழிழந்து போகும் புனித ஜார்ஜ் கோட்டை!’ மருது அழகுராஜ் ஆவேசம்..!
by RENGANATHAN P
‘கன்னிப் பேச்சு பேசும் உறுப்பினர்கள் கண்ணியமாக பேசவேண்டும்’ என சொந்தக் கட்சி உறுப்பினர்களுக்கே சபாநாயகர் குட்டு வைக்கும் அவலநிலை தமிழக சட்டப் பேரவையில் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில்தான், ‘‘புகழிழந்து போகிறது புனித ஜார்ஜ் கோட்டை..!’’ எனும் தலைப்பில் கவிஞரும், எழுத்தாளரும், தி.மு.க. கொள்கை பரப்புத் துணைத் தலைவருமான மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில் ஆவேசமாக தனது […]
- கண்ணைக் கட்டும் கடன்! சட்டப் பேரவையில் கர்ஜித்த எடப்பாடி!
by RENGANATHAN P
“தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சி முடியும்போது ரூ.10 லட்சம் கோடி கடன் என்பது ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ஓர் அரசின் […]
- லஞ்சம், ஊழல்! கே.என்.நேருவை பாதுகாத்த திமுக அரசு! நீதிமன்றத்தில் பகீர் தகவல்!
by RENGANATHAN P
‘‘ நகராட்சி அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியும் முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேரு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை’’ என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். கடந்த திமுக ஆட்சியில், நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் […]
- எடப்பாடிக்கு எதிராக மீண்டும் ‘உடைத்து’ பேசிய சி.வி.சண்முகம்!
by RENGANATHAN P
“தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் காரணமா? முறையாக கூட்டணி அமைக்காதது; பிரிந்தவர்களை ஒன்றிணைக்காததுதான் அதிமுக தொல்விக்கு மிகப் பெரிய காரணம். சென்னையில் அதிமுக துடைத்தெறியப்பட்டுவிட்டது” என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் இபிஎஸ் காரணம், தோற்றால் மாவட்ட செயலாளர்கள் […]
- மேகதாது விவகாரம்! தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்!
by RENGANATHAN P
மேகேதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியலில் ஈடுபட உள்ளதால் தமிழகப் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாதுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்தும் கன்னட அமைப்புகள் இன்று மதியம் மறியலில் ஈடுப்பட உள்ளன. இதன் காரணமாகத் தமிழக – கர்நாடக எல்லையில் […]