- மா.செ. மாற்றம்! ஆலோசித்த ஸ்டாலின்! காத்திருக்கும் அதிர்ச்சி!
by RENGANATHAN P
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று அறிவாலயத்திற்கு (25ம் தேதி) வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு கொடுத்தனர். திமுகவில் 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் அந்த 20 நிர்வாகிகளும் அதிருப்தி அடையாமல் இருப்பதற்காக மாநில அளவிலான பதவியை கொடுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் […]
- மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா! மாணவர்கள் கொண்டாட்டம்!
by RENGANATHAN P
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்; மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எனது ராஜினாமாவை பிரதமருக்கு அனுப்பியுள்ளேன்“ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். […]
- அரசியலில் இருந்து ஓய்வு! இனி அன்புமணிதான்! ராமதாஸ் அறிவிப்பு!
by RENGANATHAN P
‘‘அரசியலில் இருந்து விலகுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். இனி நான் அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன்’’ என்று ராமதாஸ் ஓய்வை அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை ஒட்டி அவரை தைலாபுரம் வீட்டிற்கு சென்று சந்தித்த அன்புமணி, வாழ்த்து […]
- ஆய்வு பணியில் அமைச்சரின் சகோதரர்! புதுக்கோட்டையில் வெடித்த சர்ச்சை!
by RENGANATHAN P
மீபத்தில்தான் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து கட்சியினர் ஆய்வுக்கு செல்லக்கூடாது என புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார். தவிர, அரசு பள்ளியில் பெண் அமைச்சர் ஆய்வு(!?) நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்களுமே தேவையில்லாமல் ஆய்வுக்கு செல்லவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான், புதுக்கோட்டையில் அரசு முகாமில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக […]
- முதல்வர் அறை மாற்றம்..? மாற்றப்படும் மரபு..? பின்னணியில் ஜோதிடரா..?
by RENGANATHAN P
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப் படிதான் பல்வேறு முடிவுகளை எடுப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் முதல்வர் அறையையும் தனது ஜோதிடரிடன் ஆலோசனைப்படி மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷயாம் ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்தில் திமுக காவிரி விவகாரம் குறித்து குரல் எழுப்பி […]
- நள்ளிரவு வீடியோ… இளைஞர்களுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி..!
by RENGANATHAN P
நீட் வினாத்தாள் முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டியும் கரப்பான் பூச்சி கட்சியினர் சார்பாக டெல்லியில் ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஜேபி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நள்ளிரவில் ஒரு வீடியோவை வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, […]
- ‘ஜனநாயகன்’ படம் பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும்! சபாநாயகரின் ‘அடடே’ பதில்!
by RENGANATHAN P
‘‘ ‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த அரசு தயாராக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் விரும்பும் மாற்றங்களை செய்ய, விரல் நுணியில் விவரங்களோடு, முதல்வர் முனைப்புடன் தயாராக […]
- காவிரி நீர் விவகாரம்! ஆக.3 கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்!
by RENGANATHAN P
“மேகேதாது அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்.” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். அதே சமயம் காவிரி நீர் விவகாரம் தொடர்பாகவும் அம்மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கும்பகோணத்தில் இன்று வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கர்நாடக […]
- ஒரு மாத தலைமறைவுக்கு முற்றுப்புள்ளி! நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி!
by RENGANATHAN P
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு கடந்த 8-ந்தேதி நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருவரும் காலை […]
- ஆகஸ்டில் கட்சி, கொடி அறிமுகம்! செப்டம்பரில் முதல் அரசியல் மாநாடு!
by RENGANATHAN P
தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சர் ஆனார் விஜய்! இது திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மத்தியிலும் ஆளும் பா.ஜ.க. 2026ல் கூட்டணி ஆட்சியை அமைத்துவிடுவோம் என்று கணக்குப் போட்டதும் பொய்த்துப் போனது. இந்த […]
- தமிழக அரசு கிரீன் சிக்னல்! உச்சநீதிமன்றம் அனுமதி! சிபிஐ கையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!
by RENGANATHAN P
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்ல உள்ளது. வழக்கின் […]
- செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி! ஐகோர்ட் சரமாரி கேள்வி!
by RENGANATHAN P
செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறது. ‘முன்ஜாமீன் பெற்றும் இதுவரை சரண் அடையாதது ஏன்?’ என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்ஜாமீன் பெற்ற நிலையில், போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி செந்தில்பாலாஜி […]
- ரத்தக் காயத்துடன் கைதான ராகுல் காந்தி! த.வெ.க. கடும் கண்டனம்!
by RENGANATHAN P
டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் ரத்தக் காயம் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு […]