Home

  • கிடப்பில் மசோதாக்கள்! ‘காரசார’ விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு!
    ‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு ஆளுநர் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டு காரசார விவாதம் நடந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக […]
  • விஜய்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்!
    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். விஜய்யின் நீலங்கரை இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆதவ் […]
  • கைத்தறித் துறையில் ஊழல்! சிறை செல்லும் அமைச்சர்களில் முதல் நபர்! அண்ணாமலை அறிக்கை!
    ‘‘2026ம் ஆண்டுக்குப் பிறகு சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்’’ என அண்ணாமலை சில ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘கடந்த ஆண்டு, உற்பத்திச் செலவில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதை வெளிப்படுத்தினோம். 2024 ஜூலை 11ம் தேதி, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை […]
  • பெரியாரை ஏற்கும் தம்பிகள் கட்சியை விட்டு விலகலாம்! சீமான் அதிரடி..!
    ‘பெரியார்தான் வேண்டும் என்றும், பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம்’ என சீமான் அதிரடியாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கி வரும் கட்சி நாம் தமிழர் கட்சி, அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகராக உள்ளனர். […]
  • ‘போஸ்டர் அரசியல்’! கொந்தளித்த கோகுல இந்திரா!
    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. மதுரையில் அடிதடியே அரங்கேறியது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கோகுல இந்திரா! சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கோகுல இந்திரா பேசியதாவது: ‘‘நேர்மை என்பது எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்; என்னை பார்த்த உடனே […]
  • திமுக வலையில் சிக்குகிறாரா செங்கோட்டையன்? அடுத்த முடிவு ..?
    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் தி.மு.க. விரித்திருக்கும் வலையில் சிக்குவாரா? அல்லது த.வெ.க.வின் வலையில் சிக்குவாரா? என்பதுதான் கொங்குமண்டலத்தில் ஹாட்டாபிக்காக இருக்கிறது. அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று (9.2.2025) நடைபெற்றது. விழா […]
  • கெஜ்ரிவாலுக்கு தோல்வி ஏன்? பி.கே. புது விளக்கம்..!
    ‘‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது முக்கிய காரணம்’’ என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 48 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு […]
  • சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு இழப்பு! எடப்பாடி தரப்பு வாதம்!
    அ.தி.மு.க. விவகாரத்தில் நீதித்துறைக்கு இணையான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என கடந்த முறை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான், அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளி […]
  • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! கல்வித் தகுதி ரத்து! எச்சரித்த கல்வி அமைச்சர்!
    ‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருக்கிறார்! தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
  • ‘நம்முடைய நயினார்!’ திமுக திடீர் பாசத்தின் பின்னணி?
    திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையோடு பேசியதுதான் தி.மு.க.வினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ஜ.க. தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே நீடிப்பார் என தகவல்கள் வெளியாகிறது. இதனிடையே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இடையில் சுமூகமான உறவு […]
  • கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! கர்ஜித்த எடப்பாடி பழனிசாமி!
    கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை அளித்ததோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் […]
  • கிடப்பில் மசோதாக்கள்! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகள்!
    தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் […]
  • பாதுகாப்பில்லாத தமிழகம்! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!
    ‘‘சாதாரண மக்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் விட வேண்டும்’’ என அ.தி.மு.க. கழக மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக மருத்துவரணி சார்பில், […]