- கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
by RENGANATHAN P
கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் பேட்ஸ்மேனாக படைத்திருக்கும் சாதனை என்ன என்பது குறித்து பார்ப்போம். […]
- பிஜேபியின் பிளான் ‘B’! தவெகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை!
by RENGANATHAN P
2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை யாரும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. காரணம், விஜய் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போதைய அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு […]
- அனுமதியின்றி கனமவளங்கள் எடுத்தால் குண்டர் சட்டம்!
by RENGANATHAN P
ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்களில் இருந்து அரசின் உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி யெடுத்து, வாகனங்களில் கடத்திச் […]
- ஆம் ஆத்மி கட்சியை ‘முடித்த’ பா.ஜ.க.!
by RENGANATHAN P
ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் முன்னிறுத்தி, எந்தவிதமான தனி அரசியல் கோட்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (AAP), இன்று தன் வரலாற்றிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லி அரசியல் களத்தில் அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், ஒரு கட்சிக்கு “கொள்கை” (Ideology) எவ்வளவு முக்கியம் என்பதை உரக்கச் […]
- மே 4ம் தேதி (ரிசல்ட்) ஆஸ்திரேலியா செல்லும் விஜய்!
by RENGANATHAN P
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதி அன்று, தவெக தலைவர் விஜய் ஆஸ்திரேலியா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் […]
- ‘அவரே தொடர்கிறார்’! மருது அழகுராஜ் ஆருடம்..!
by RENGANATHAN P
திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவு தி.மு.க.வினரைத் தாண்டி அனைத்துக் கட்சியினரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக மருது அழகுராஜ் […]
- தமிழக அரசியயல் வாரஇதழ் 30-04-2026
by admin
- அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி! அதிமுக அவசர மனு!
by RENGANATHAN P
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் […]
- ரூ.1,262 கோடி மதிப்பில் பணம் – பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் தகவல்!
by RENGANATHAN P
தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார். […]
- அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடரும்!
by RENGANATHAN P
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச […]
- மயிலை திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல்!
by RENGANATHAN P
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.வேலுவின் தனி உதயவியாளராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது வீட்டில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க கட்டுக்கட்டாக பணம் பதுக்கி […]
- செல்வப் பெருந்தகை மீது வருமான வரித்துறை கமிஷனரிடம் புகார்!
by RENGANATHAN P
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மீது காவல்துறையில் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தனது வீட்டில் […]
- ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்! திமுகவினர் மீது வழக்குப் பதிவு!
by RENGANATHAN P
தேர்தல் நடத்தை விதிகளை மீறிவாக்காளர்களுக்கு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை விநியோகித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோவை தெற்கு, பாலக்கோடு, பர்கூர், அண்ணாநகர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பெரும்பாலான தொகுதிகளில் திமுகவினர் ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன்களை […]