தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்போது நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மனுவேலுவும், அதிமுக வேட்பாளர் உஷாவும் 266 வாக்குகள் பெற்று சமநிலை பெற்றனர்.

இதையடுத்து நடைபெற்ற குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal