Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கொடநாடு கொலை… ‘நிழலை’ நெருங்கும் போலீஸ்..!

கொடநாடு வழக்கு விசாரணை நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று நீதிபதியின் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த முக்கிய நபர் யார் என்பது தற்போதுதான் தெரியவந்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கொடநாடு…

மின்வெட்டு… அண்ணாமலை சொன்னது உண்மையா..?

தமிழகத்தில் தி.மு.க. அரசு செயற்கையான மின்வெட்டை உருவாக்கி வருகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், ‘உண்மையாக இருக்குமோ..’ என்ற தகவல்தான் நமக்கு கிடைக்கிறது. நாட்டில் 2,200 கோடி டன்…

உப்பிலியபுரம் பணிமனையில்… ‘முத்து’ குளிக்கும் மூவர்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் லஞ்சத்தில் திளைத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்! காரணம்… சமீபத்தில் எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கணக்கில் வராத…

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த…

இந்தியா – அமெரிக்கா… நாளுக்கு நாள் வலுவடையும் நல்லுறவு!

‘இந்தியா – அமெரிக்கா இடையிலான நல்லுறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளின் மாநாடுகளில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் டில்லி திரும்பும் முன் செய்தியாளர்களுக்கு…

துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம்… க்ளைமாக்சை நெருங்கும் ராமஜெயம் வழக்கு?

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் விரைவில் துப்பு கிடைத்து ராமஜெயம் கொலை வழக்கு க்ளைமாக்சை நெருங்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

தொடரும் ரெய்டு… சிக்கும் பணம்…
போக்குவரத்துத்துறையின் அவலம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அதிகாரியின் அலுவலகத்தில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர்…

கொடநாடு வழக்கு… விசாரணை வளைத்தில் முக்கிய புள்ளிகள்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் கூறியுள்ளார். மேலும் இன்னும் சில முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

மாணவிக்கு பாலியல் தொல்லை… கம்பி எண்ணும் கல்லூரி பேராசிரியர்!

கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், தற்போது கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல்…

‘தபேலா அடித்தால் இசைஞானியா..?’ சாதி சர்ச்சையில் ஈ.வி.கே.எஸ்.!

பணம், புகழ் வந்தால் மட்டும் உயர்ஜாதி ஆகி விட முடியுமா என்று இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, சர்ச்சையாக பேசி உள்ளார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘பிரதமர் மோடி தலைமையில்,…