கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அதிகாரியின் அலுவலகத்தில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர் நியமிக்கப்பட்டார்!

இந்த நிலையில்தான், கோவை பாலசுந்தரம் சாலையில் இணை போக்குவரத்து கமிஷனர் அலுவலகம் செயல்படுகிறது. இணை கமிஷனராக உமாசக்தி உள்ளார். இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி வித்யா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத ரூ.28 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal