Month: May 2024

பிரச்சாரத்தில் நிதானம் தேவை! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

“தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி…

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள்! சென்னையில் சிக்கிய கும்பல்!

சென்னையில் பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்…

யார் யாருடன் தொடர்பு? கஸ்டடியில் கக்கிய சவுக்கு சங்கர்!

போலீஸ் காவலில் உள்ள யு டியூபர் சவுக்கு சங்கரிடம் லேப்டாப், அலைபேசி தொடர்புகள் குறித்து பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் கஸ்டடியில் சவுக்கு சங்கர் யார் யாருடன் தொடர்பு இருக்கிறது என கக்கியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. காவல்துறை அதிகாரிகள், பெண்…

ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? பிரசாந்த் கிஷோர் ஆருடம்!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே கட்டமாக 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலின் போதும், அதனை தொடர்ந்து மேலும் 2 நாட்கள் வரை பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இது தொடர்பாக…

மீண்டும் பாஜக ஆட்சி! பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்..!

‘‘மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், கடந்த முறையை போல் இந்த முறையும் தொகுதிகள் கிடைக்கக்கூடும்’’ என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த…

அதிமுகவின் காங்கிரஸ் பாசம்! போட்டுடைத்த செல்லூர் ராஜூ!

‘மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார்… மோடி எங்கள் டாடி…’ என்றெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்கள் கூறிவந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி முழுமையாக முடிந்ததற்கு காரணம் ‘மேலிடம்’தான் என்பதை எல்லோரும் அறிந்தது. இப்படி ஆட்சியில் இருக்கும் போது, ஆட்சியைக்…

தமிழர்கள் மீது மோடிக்கு வெறுப்பு! மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்…

அமீருக்கு ரூ.3.93 கோடி கொடுத்தீர்களா? ஜாபர் மனைவியிடம் ED கிடுக்கிப்பிடி!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மனைவியிடம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். ஆஸ்திரேலியா, மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக போதைப்பொருள் கடத்திய…

வங்கக் கடலில் புயல் சின்னம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

கேரளா மற்றும் தமிழகத்தை தென்மேற்கு பருவமழை நெருங்கும் நிலையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆழ்கடல் மீனவர்கள், நாளை மறுதினத்துக்குள் கரை திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 19) துவங்கி, தமிழக…

‘கள்ள மவுனம் வாசகத்துக்கு மறு உருவம் எடப்பாடி பழனிசாமி’- அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..!

கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணைக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் எனவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றும்…