Category: அரசியல்

பட்ஜெட்டுக்குப் பின் பதவி பறிப்பு – இலாகா மாற்றம்..!

வருகிற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமைச்சரவை மற்றும் இலாகா மாற்றம் இருப்பதாக தெரிகிறது. அதற்கான லிஸ்ட் தற்போதே விஜய் கையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில்…

அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு புதிய பதவி!

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக தவெகவில் இணைந்தவர்களுக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தலைமை…

அறநிலையத்துறையில் நடந்த ஊழல் குறித்த வெள்ளை அறிக்கை! ‘ஷாக்’கில் திமுக!

இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக…

10வது மாடியில் முதல்வர் அலுவலகம்! ஆடம்பரமாகும் அமைச்சர்களின் அலுவலகங்கள்!

முதல்வர் விஜய் தனது அலுவலகத்தை சென்னை சட்டசபை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடிக்கு மாற்றி உள்ளார். அங்கு அலுவலகம் அமைப்பதற்காக ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டசபை செயலகத்தில் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களை புனரமைக்க முதல்வர்…

எல்லை தாண்டிய நிதிநிலை அறிக்கை! சட்டமன்ற மரபு மீறப்பட்டதா?

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், எதிர்வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் வரைவை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்திய நிகழ்வு, சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. பட்ஜெட்…

காவிரி நீர் ‘அரசியலுக்கு’ முற்றுப்புள்ளி! தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!

கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்​து​ வரு​வ​தால் அங்​குள்ள கபினி, ஹாரங்​கி, கிருஷ்ண​ராஜ​சாகர் உள்​ளிட்ட அணை​கள் வேக​மாக நிரம்பி வரு​கின்​றன. இதனால் அணை​களின் பாது​காப்பு கரு​தி, தமிழகத்​துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான…

இடைத்தேர்தலுக்கு விதித்த தடையை நீக்க கோரி விஜயபாஸ்கர்(கள்) மனு!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில்…

‘தி.மு.க. ஆட்சியை இழந்தது ஏன்?’ மனம் திறந்த தோப்பு வெங்கடாச்சலம்!

“உட்கட்சி பூசலால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சியை இழந்துவிட்டது. நான் திமுகவுக்கு வந்தது என்னை வளப்படுத்திக் கொள்வதற்காக அல்ல. ஒருநாள் கூட நான் நல்ல தூக்கம் தூங்கியது கிடையாது” என முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உருக்கமாக தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய…

‘அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா?’ விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

“மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தனி…

தமிழகம் வரும் ராகுல்காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்காமல் செல்வது ஏன்?

காவிரி விவகாரம், மேகதாது அணை, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுன்றத் தேர்தல் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு தமிழகம் வரும் ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யை சந்திக்காமல் செல்வது ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கர்நாடகா உடனான காவிரி பிரச்சினையின் நடுவே…