Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நெருங்கும் தேர்தல்! ஜனவரி 2ல் மோடி தமிழகம் வருகை!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம்…

திமுகவின் துருப்பிடித்த யுக்தி! அண்ணாமலை ஆவேச குற்றச்சாட்டு!

‘மத்திய அரசின் மீது பழிபோடும் துருப்பிடித்த யுக்தியை தி.மு.க. மீண்டும் கையில் எடுத்திருக்கிறது’ என அண்ணாமலை ஆவேசமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்திய அரசின் மீது…

பொன்முடி வீட்டுக்கே சென்று சந்தித்த மு.க.அழகிரி!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பொன்முடிக்கு கொடுக்கப்படவில்லை’ என உடன் பிறப்புக்கள் பொங்கி எழுந்த நிலையில், பொன்முடியை, மு.க.அழகிரி நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி…

தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி அவசர ஆலோசனை!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில்…

கணவன் கொலை! கள்ளக்காதலனுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கைது!

‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், கள்ளக்காதலுக்கு ‘எதுவுமே இல்லை’. கள்ளக்காதல் விவகாரத்தில் அடிக்கடி ‘கொலை’ சம்பவங்களும் அரங்கேறுகிறது. அப்படித்தான், கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாக இருந்த மனைவியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம்…

15 நிமிட சந்திப்பு… பேசியது என்ன..?

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தான் வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதிவியையும் பொன்முடி இழந்துள்ளார். இந்த தீர்ப்பு விவரங்கள்…

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்! மிரட்சியில் மினிஸ்டர்ஸ்!

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில் தான் அவர் தாமாக முன்வந்து சில வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அதாவது…

‘அப்பன்’ வீட்டு பணம்! அரசியல் எதிர்காலம்! எச்சரித்த நிர்மலா சீதாராமன்!

‘உன் அப்பன் வீட்டு பணத்தையா கேட்டோம்..!’ என உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்ததற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னையைத் தொடர்ந்து தென்மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது கனமழை. கடும் வெள்ள பாதிப்பினால் மத்திய அரசிடம் உதவி…

வெள்ள நிவாரணம் : அண்ணாமலை டெல்லி பயணம்!

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெறு வரும்…

எஸ்.ஜோயல் தாயார் மரணம்! உதயநிதி நேரில் அஞ்சலி..!

தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான தூத்துக்குடி எஸ்.ஜோயலின் தாயார் நேற்று இயற்கை எய்தினார். தி.மு.க. இளைஞரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ‘குட்புக்கில்’ இடம்பெற்று மீண்டும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்…