‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பொன்முடிக்கு கொடுக்கப்படவில்லை’ என உடன் பிறப்புக்கள் பொங்கி எழுந்த நிலையில், பொன்முடியை, மு.க.அழகிரி நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து பொன்முடியின் அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று பொன்முடி சந்தித்தார். அப்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலணியில் உள்ள பொன்முடி வீட்டிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மு.க.தமிழரசுஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal