தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுக பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஏற்கனவே அண்ணாமலைக்கு 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலின் நேற்று ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் திமுக எம்.பி., கனிமொழி சொத்து விபரத்தை வெளியிட்ட அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் என்று கனிமொழியும் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ‘‘சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பிய நிலையில் நானும் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்வேன் என்றும், அதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக கேட்டபோது, ‘‘நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. மாவட்ட மக்களின் நலன் கருதி நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன்!’’ என்றார்.

அடுத்த கட்சிகள் மீது அவதூகளையும், பிளவுபடுத்தலின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

எனவே, ஒரு கட்சியை பலப்படுத்த கட்டமைப்பு வசதிகள்தான் முக்கியம் என்பதை தமிழக பா.ஜ.க. உணரவேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal