தமிழகத்தில் தொடர்ச்சியாக 4 ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் 5 பேர் சிக்கினாலும், அவர்களிடமிருந்து ரூ.67 லட்சத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இதுவரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பலரை தனிப்படை போலீசார் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு தேடி வருகின்றனர். எனினும் மற்ற குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. பணமும் மீட்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் கோலார் பகுதியில் இருந்து நிஜாமுதீன் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை 4-வது நாளாக நடந்தது. விசாரணையின் முடிவில் அவரிடம் இருந்து ரூ.2 லட்சம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு நிஜாமுதீன் தான் மூளையாக செயல்பட்டதாக போலீசார் கூறினர். அவரை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர். ஏ.டி.எம். கொள்ளையில் 5 பேர் கைதான பிறகும் பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரியானாவில் தனிப்படையினரின் வேட்டையில் கும்பல் சிக்கினால் மட்டுமே முழுமையாக பணத்தை மீட்க முடியும். மேலும் கொள்ளை போன ரூ.67 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal