காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார்.

இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 100 நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கொண்ட நடை பயணத்தில் இன்று திமுக எம்பி கனிமொழி இணைந்துள்ளார். அதோடு அரியானா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் ராகுல் காந்தியின் நடைபயணம் நாளை அதாவது சனிக்கிழமை டெல்லியில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal