ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம் ருத்ராஷ்வரேர் திருக்கோவில்.

இடம்:-தேப்பெருமாநல்லூர். கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

உலகில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று இந்த கோவில். உலகில் உள்ள பல அதிசயங்களுக்கு நம்மால் விளக்கமும் கூற முடியாது அதற்கான காரணன்மும் கூற முடியாது. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. அதே போல் தான் இந்த கோவிலும் இந்த கோவிலுக்குள் நாடாகும் நிகழ்வுகளும்.

எந்த ஒரு மனிதனுக்கு அடுத்த பிறவி ஒன்று இல்லையோ அவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் செல்ல முடியம் என்பது இந்த கோவிலுக்கான சிறப்பு. அப்படியே முயற்சித்தாலும் பல தடைகள் வந்து மறுபிறவி எடுக்க போகும் மனிதர்களை அந்த சிவபெருமான் தடுத்து விடுவார் என நம்ப படுகிறது.

மேலும் வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது. மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒருமுறை நல்லபாம்பு இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்.இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

By Divya