சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, அதிமுகவில் ஓபிஎஸ்-.இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்கு சசிகலா தலைமை ஏற்க வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும்,இது தொடர்பாக பல பகுதிகளில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்த.இதனைத் தொடர்ந்து, சசிகலா தலைமையிலான அதிமுகவுடன், அண்ணா திராவிடர் கழகத்தை அக்கட்சி நிறுவனர் திவாகரன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்,அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார். முன்னதாக,கடந்த 2018-ம் ஆண்டு சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். ஆனால், அக்கட்சியில் தனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக்கூடாது என சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதைத்தொடர்ந்து, ‘சசிகலா இனி தனது சகோதரி இல்லை’ என திவாகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்,சசிகலா தலைமையிலான தாய் கழக அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன் இணைத்துள்ளார். மேலும், அண்ணா திராவிடர் கழகம் சார்பில் சசிகலாவுக்கு செங்கோல் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,மேடையில் பேசிய திவாகரன், ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சசிகலாவுக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் ஜெயலலிதாவின் உடல் நலனில் மட்டுமே அக்கறை கொண்டவராக சசிகலா இருந்தார். கயல் சீரியலில் வரும் கயல் எப்படியோ? அது போல் தான் சின்னம்மா’’என்று கூறினார்.

மறைந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவை அமைச்சராக்கி அழகு பார்க்க நினைத்தால் என்று திவாகரன் கூறியிருப்பதுதான், அ.தி.மு.க.வினரை வியக்க வைத்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal