முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பத்து மாத கால திமுக ஆட்சி எந்த குறையும் இன்றி சிறப்பாக இருப்பதாக தாய்மார்கள் கூறுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஒழுந்தியாம்பட்டியில் ரூ.24.77 கோடியில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், ரூ.42 கோடியில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘10 மாத கால திமுக ஆட்சி குறித்து தாய்மார்களிடம் கருத்து கேட்கையில், எந்தவித குறையும் இன்றி சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறினர். இது இனியும் தொடரும்.

இதுவரை அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரங்களில் 90 சதவீத மக்கள் இன்னமும் அதே வீடுகளில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுவே எனக்கு மகிழ்ச்சியான செய்தி. கருணாநிதியின் சிந்தனைகளை, கொள்கைகளை எனது மூச்சு இருக்கும் வரை கொண்டு செல்வேன்’’ இவ்வாறு அவர் பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal