கடந்த ஐந்து மாதங்களாக ‘நாங்கள் சொல்வதைக் கேள்’ என்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகர்கள் ஐந்து பேரை சென்னை செங்குன்றம் போலீசார் கொத்தாக தூக்கிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி ஓட்டுனராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்ற நிலையில், தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் சிறுமி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதையில் சிறுமியின் வீட்டுக்கு வந்த 5 மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த சிறுமியை மிரட்டி எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு கொடுமை செய்து கொடுத்து வந்துள்ளனர். அளவுக்கு அதிகமான போதையில், வீட்டை பூட்டி சிறுமியை போதைக் கும்பலைச் சேர்ந்த 5 பேரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. அவர்கள் சொவதைக் கேட்டு சிறுமி நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வெளியில் சொன்னாலோ, தங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால் சிறுமியை கொன்று விடுவோம் என்றும் அந்த போதைக் கும்பல் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல நாட்களாக கொடுமை தொடர்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இது குறித்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

முதலில் சிறுமி அளித்தது பொய் புகார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் உரிய விசாரணை நடத்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் மற்றும் மனநல நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கி விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என்பது தெரியவந்தது இதையடுத்து போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 21 வயதான கௌதம், லட்சுமணன், அப்துல், அக்பர், பாபு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி புகார் கொடுத்த அடுத்த நாளே 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு ஐந்து பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal