டாஸ்மாக் கடை விவகாரங்களில் மாவட்ட கலெக்டர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட கலெக்டர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் தமிழக அரசு விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அந்த ஆட்சேபனைகளைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல்முறையீடு செய்யவும், திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal