உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சிங்கிள் வோட்டில் வாகை சூடிய வேட்பாளர்களைப் பார்க்கலாம்..!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுகந்தி 341 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி 342 வாக்குகள் பெற்று ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதேபோல் பவானி நகராட்சி 2-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் 435 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விஜயகுமாரி 434 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். தி.மு.க. வேட்பாளர் மோகன்ராஜ் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சத்யமூர்த்தி 175 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பழனிச்சாமி 174 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சத்யமூர்த்தி வெற்றி பெற்றார்.

சத்தியமங்கலம் நகராட்சி 8-வது வார்டில் பா.ஜனதா வேட்பாளர் உமா 256 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கீர்த்தனா 255 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் உமா வெற்றி பெற்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal