திருவண்ணாமலை

கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது


தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

By admin