கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதையடுத்து இதற்க12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த ‘சைடஸ் கேடிலா’ என்றநிறுவனம் தயாரித்துள்ளது.

மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்ததோடு, அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரியும் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில், அக்கரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, ‘சைகோவ் – டி’ தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று (20.8.2021) ஒப்புதல் அளித்தது.

உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள முதல், டி.என்.ஏ., தடுப்பூசி இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin