சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் வெற்றிக்கான வியூக வகுப்பில் திமுக தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில் ஜூன் முதல் வாரம் முதல் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தவிர, கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.