தெலுங்கானா முன்னாள் கவர்னரும், தென் சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆந்திரா, தெலுங்கானாவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் மதத்தின் பெயரால் சாதியின் அடிப்படையில் மக்களை உணர்வு பூர்வமாக பிளவு படுத்தி வருகிறது. தெலுங்கானாவில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சியுடனும், சில இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு நேரடி போட்டி உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களால் தெலுங்கானா அதிக பலன் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டின்வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலத்திற்கு இதுவரை 22 முறை வந்துள்ளார்.

அமைச்சர்கள் ஜி கிஷன் ரெட்டி, ஈடல ராஜேந்தர் ஆகியோர் ஐதராபாத் மற்றும் தெலுங்கானாவை புறக்கணிக்கின்றனர். முறையற்ற திட்டங்கள், வளர்ச்சி நிதி பற்றாக்குறை மற்றும் அடுக்கடுக்கான ஊழலால் வளர்ச்சியில் பின்னோக்கி செல்கிறது. வருகிற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு வாக்களிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal