நாடாளுமன்றத் தேர்தலில் ‘எந்த பிரதமர்’ வேட்பாளருக்கு அ.தி.மு.க. ஆதரவு என தி.மு.க. கேள்வி எழுப்பிய நிலையில், ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என எடப்பாடி பழனிசாமி எதிர் கேள்வி எழுப்பினார்.

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக எதிர்க்கும் வகையில் ‘இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்களும் நடந்தன. இந்த நிலையில்தான், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால், அந்த கூட்டணியில் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அந்த கூட்டணியில் எந்த திட்டமும் இல்லாதது போல் தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவதில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகிக் கொள்ள வேண்டும் என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார். மேலும், உ.பி.யின் கோசி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால், அங்குசமாஜ்வாதி தோல்வியடைந்திருக்கும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடுங் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூரில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க கட்சியின் மாநில தலைவருக்கு அதிகாரம் இல்லை. பாட்னா, மும்பை ஆகிய இடங் களில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் அஜய் ராய் கலந்து கொள்ளவில்லை. இந்தியா கூட்டணி பற்றி அவருக்கு என்ன தெரியும்? காங்கிரஸில் அஜய் ராய் போன்ற சிலர் பாஜகவுடன் இணைந்து சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். தனது கட்சி பற்றி கருத்து தெரிவிக்க, இது போன்ற சிறிய தலைவர்களை காங்கிரஸ் தலைமை அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் எங்களை ஏமாற்றும் என தெரிந்திருந்தால், நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கிடையாது என முதல்நாளே தெரிந்திருந்தால், இந்தியா கூட்டணி கூட்டங்களுக்கு நாங்கள் சென்றிருக்க மாட்டோம்’’இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவின் இந்த கருத்து, ‘இந்தியா’ கூட்டணிக்குள் ‘இடியாப்ப’ சிக்கலை ஏற்படுத்தியதோடு, பிளவு ஏற்படும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கோண்ட்வானா கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி கட்சி பிஜாவர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து மொத்தம் 1.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal