Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பெண்களுக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ ! ஐ.டி.விங்கின் அடுத்த பாய்ச்சல்!

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி சென்னை அதிமுக அலுவலகத்தில் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதற்கான ஏற்பாடுகளை ராஜ்சத்தியன் தலைமையிலான அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் செய்திருந்தது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை…

பரந்தூர் செல்ல விஜய்க்கு அனுமதி கிடைக்குமா..?

பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலத்தையும், குடியிருப்பையும் காப்பாற்றிக் கொள்ள நீண்டநாட்களாக போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்களை சந்திக்க விஜய் காவல்துறையில் அனுமதி கேட்டிருக்கிறார். அவருக்கு அனுமதி கிடைக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. பரந்தூர் விமான நிலையம்…

ஈரோடு கிழக்கில் களமிறங்கும் தே.மு.தி.க…?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாத பட்சத்தில் தே.மு.தி.க. சார்பில் விஜயபிரபாகரன் அல்லது தே.மு.தி.க. மா.செ. ஒருவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு…

‘மக்களை ஏமாற்றும் திமுக!’ விஜய் கடும் கண்டனம்!

‘‘எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை’’ என்று த.வெ.க., தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்…

‘பதவியில் இருக்கமாட்டேன்!’ சட்டசபையில் உருக்கமாக பேசிய முதல்வர்!

‘மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டம் வந்தால் நான் பதவியில் இருக்கமாட்டேன் என்று’ சட்டசபையின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகப் பேசினார். சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘‘சட்டசபை உறுப்பினர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல்…

பாலியல் தொல்லைக்கு எதிராக Dr.சரவணன் ‘ஆபரேஷன்’!

‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்கள் தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் வழிகாட்டுதல்படி பெண்கள் பாலியல்தொல்லைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள…

புஸ்ஸி ஆனந்தால் ‘புஸ்வானம்’ ஆகும் த.வெ.க.! புலம்பும் நிர்வாகிகள்!

கடந்த ஆண்டு மிகப் பிரம்மாண்மாக முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்தார் விஜய். ஆளும்கட்சி, எதிர்க்கட்சியே மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் கூட்டத்தைப் பார்த்து வாயடைத்துப்போனார்கள். இந்த நிலையில்தான் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளால் த.வெ.க. ‘புஸ்வானம்’ ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகின்…

மு.க.ஸ்டாலின் திருமாவுக்கு திடீர் வாழ்த்து..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை ஒட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்று அறிவித்ததுடன் அதற்கு பானை சின்னத்தையும் தேர்தல்…

ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி பாகுபாடு! போலீசுக்கு ஐகோர்ட் அட்வைஸ்!

‘‘ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து தரப்பினரையும் சமமாக பாவிக்க வேண்டும்’’ என தமிழக போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. அண்ணா பல்கலை விவகாரத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை எனக்கூறி பா.ம.க. தாக்கல் செய்த மனு…

ஈரோடு கிழக்கில் திமுக போட்டி! வேட்பாளர் சந்திரகுமார்?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவதாகவும், வேட்பாளராக சந்திரகுமார் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவிழா களைக்கு மாறி இருக்கிறது ஈரோடு. “ஈரோடு கிழக்கில்…