மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவைப் போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் சின்ன முடக்கப்பட்ட எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

மகாராஷ்டிராவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க.விற்கு வந்தாலும் வரலாம் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal