படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார். அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார்.

அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் காதலர்கள் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். அதனால் இந்த திரைப்படத்தை ஆர்வத்துடன் இளைஞர்கள் பார்த்து வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றது. இன்றைய கால கதையை கேவலப்படுத்தும் தலைமுறைக்கு புத்தி புகட்டும் விதமாக இந்த படம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

காதல் என்பது என்ன என்பதை அழகாக இயக்குனர் படத்தில் காண்பித்து இருக்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். அதிலும் 90ஸ் கிட்ஸ் கால காதல் தான் உண்மை காதல் என்று மாறு தட்டி சொல்லும் அளவுக்கு இந்த படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் இன்றைய தலைமுறைகளையும் யோசிக்க வைத்திருக்கிறது என்பதை சொல்லலாம்.

By Divya