இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி கிரமத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பாக மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள்,ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பரமக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து,125 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, தலைமை வகித்தார்.கூடுதல் ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முருகேசன்,மாவட்ட ஊராட்சி தலைவர் உ.திசைவீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பொதுமக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பிற மாநிலங்களில் முதல்வர்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிடும் வகையில் என்னற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000/- மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்குதல்,ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3/- விலைக் குறைப்பு திட்டம்,அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் போன்ற ஏழைய எளிய மக்களுக்கு பயனாளிக்க கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் மூலம் தனித் துறையின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை ஆகிய இரண்டு துறைகளும் மிகவும் சவலாக உள்ளது.மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்தாக விளங்கும் இந்த இரண்டும் துறைகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படி இந்த இரண்டு துறைகளிலும் உள்ள பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்க்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நரிப்பையூர் மற்றும் குதிரை மொழி குடிநீர் திட்டங்களுக்கு செயல்வடிவம் வழங்குவதற்க்கு பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.முதற்கட்டமாக நரிப்பையூர் குடிநீர் திட்ட பணிகளுக்கு மிகுந்த கவனம் செலுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பரமக்குடியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்க்கு ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்தின் மூலம் பரமக்குடி, முதுகுளத்தூர்,கடலாடி,கமுதி, ஆகிய நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட 224 கிரமங்களை சார்ந்த பொதுமக்கள் இவ்வலுவலகத்தின் மூலம் பயன் அடைந்து வருகின்றனர்.

பழகுநர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம்,ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல்,நடத்துனர் உரிமம்,கனரக வாகன ஓட்டுனர் உரிமம் புதிய வாகனங்கள் பதிவு, மறு பதிவு,பதிவு எண்கள் வழங்குதல்,தகுதி சான்று வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை பெற்று பயனடைய வாய்ப்பாக அமைந்துள்ளது என மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள். மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் தினைக்குளம் கிராமத்தில் ரூ.25.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூட கட்டிடத்தை திறந்து வைத்து,பரமக்குடி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 3 புதிய வழிதடங்கள்,3 நிறுத்தப்பட்ட வழிதடங்கள்,7 வழிதட நீட்டிப்பு,ஒரு வழிதட மாற்றம் என 14 வழிதடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சரக துணை போக்குவரத்து ஆணையார் எம்.எஸ்.இளங்கோவன்,வட்டார போக்குவரத்து அலுவலர் ஜ.சேக் முஹம்மது,சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன்,பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

By admin