பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு நெடுநாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 20ம் தேதி விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரம் தொடர்ச்சியாக அரசு சார்பில் நிலம் எடுக்கும் பணிகள் ஆகியவற்றுக்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் போராட்டக் குழுவினரை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் போராட்டக்காரர்களை வரும் 20/01/2025ஆம் தேதி சந்திக்க அனுமதி வழங்கி காஞ்சிபுரம் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.

முன்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் போராட்டக்காரர்களை சந்திக்க அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது காவல்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal