மதுபான கொள்கை மோசடி வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் உள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தனர். கைதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17க்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், சி.பி.ஐ., வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு இன்று(ஜூலை 05) விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால், சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.