அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். நீலகிரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 16 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் ஆனலில் கொதிக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் துவங்கியுள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளரை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே வேட்பாளரை அறிவிக்கவில்லை.

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இறுதி கட்டமாக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

ரீபெரும்பதூர் &- பிரேம்குமார்
வேலூர் -& பசுபதி
திருவண்ணாமலை -& கலிய பெருமாள்
திருச்சி -& கருப்பையா
தர்மபுரி -& அசோகன்
கள்ளக்குறிச்சி – &குமரகுரு
திருப்பூர் – &அருணாசாலம்
நீலகிரி (தனி) -& யோகேஷ் தமிழ்செலவ்ன்
கோவை &- சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி -& அப்புசாமி என்ற கார்த்திகேயன்
திருச்சி – & கருப்பையா
பெரம்பலூர் &- என்.டி.சந்திர மோகன்

மயிலாடுதுறை &- பாபு
சிவகங்கை &- மணக்குடி சேகர் தாஸ்
தூத்துக்குடி &- சிவசாமி வேலுமணி
நெல்லை & -சிம்லா முத்து சோழன்
புதுச்சேரி -& தமிழ்வேந்தன்

விளவங்கோடு சட்டமன்ற தேர்தல்& – ராணி
நேற்று எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 16 வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal