இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது.

இந்த பெருமையை சமீபத்தில்தான் கொண்டாடினார் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சாதனைகளின் பேச்சுக்கள் அடங்குவதற்குள் உலகத் தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்து ஜி 20 மாநாடு நடத்தி அடுத்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் பிரதமர் மோடி!

ஜி20 இரண்டு நாள் உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. ஜி20 அணியில் அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் அங்கத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டின் முக்கிய முடிவுகளும், எதிர்கால நோக்கங்கள் குறித்தும் ஒரு அறிக்கை கூட்டாக வெளியிடப்படுவது வழக்கம். இம்முறை இந்த வரைவறிக்கை தயாரிக்கும் பணியில் ஒரு சிக்கல் எழுந்தது.

ரஷிய உக்ரைன் போரில், ஜி20 அணியில் உறுப்பினரான சீனா, ரஷியாவை ஆதரிக்கிறது. ஆனால் மற்றொரு உறுப்பினரான அமெரிக்கா ரஷியாவை எதிர்க்கிறது. ஒரு சில உறுப்பினர் நாடுகள் இரு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகிக்கிறது. இந்நிலையில், வரைவறிக்கை தயாரிப்பின்போது ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் கருத்துக்களால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், நேற்று மாலை அனைத்து உறுப்பினர்களின் 100 சதவீத ஒப்புதலுடன் கூட்டறிக்கை தயாரானதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லி பிரகடனம் எனும் பெயரில் அந்த அறிக்கை நாடுகளுக்கிடையேயான சச்சரவுகள் குறித்து உறுப்பினர் நாடுகள் அனைத்தும் ஏற்று கொண்டுள்ள அம்சங்களுடன் நேற்று வெளியாகியது. இதனை தயார் செய்ய இணை செயலாளர் ஈனம் கம்பீர் மற்றும் நாகராஜ் நாயுடு ஆகியோர் பல நாட்டு பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதன் பயனாக இச்சிக்கலில் மாநாட்டின் முதல் நாளிலேயே ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டது.

டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டது குறித்து இம்மாநாட்டிற்கான இந்திய அரசாங்கத்தின் ஷெர்பா எனப்படும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமிதாப் காந்த் கூறியுள்ளதாவது:- அறிக்கை தயாரிப்பில் மிகவும் சிக்கலாக இருந்தது புவிசார் அரசியல் பிரச்சனையான ரஷிய உக்ரைன் போர் குறித்து இடம்பெறும் பத்திகளும், அது சம்பந்தமான வாக்கியங்களும் உருவாக்கப்படுவதுதான். இதற்காக உறுப்பினர் நாடுகளின் பல்வேறு பிரதிநிதிகளுடன் இந்திய பிரதிநிதிகள் 200 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்காக 300க்கும் மேற்பட்ட சந்திப்புகள நடந்தன. 15-க்கும் மேற்பட்ட வரைவறிக்கைகளும் அவர்கள் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டு அதன் பிறகே இது சாத்தியமானது. இவ்வாறு அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். உலக தலைவர்களின் கூட்டறிக்கையில் “ரஷியா”, “உக்ரைன்” எனும் வார்த்தைகள் தவிர்க்கப்பட்டு “அனைத்து நாடுகளும் பிற நாடுகளின் எல்லைக்கான உரிமைகளை மதிக்க வேண்டும்” என்பது போன்ற பொதுவான வாக்கியங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றைக்கு இந்தியா உலகநாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது. அதற்கு காரணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான். எனவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் நரேந்திரமோடி பிரதமராவது உறுதி என இந்தியா மட்டுமின்றி, உலகநாடுகளே எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது பற்றி நாம் டெல்லி மேலிட வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், கடந்த பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. என்ன சாதித்துவிட்டது என்கிறார்கள். சந்திராயன் வெற்றி, ஜி 20 மாநாட்டு சாதனை என அடுக்கிக்கொண்டே போகலாம். பத்து ஆண்டுகளில் பா.ஜ.க. அமைச்சர்கள் யாரேனும் சொல்லிக்கொள்ளும் படியான ஊழல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? ஆனால், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், மாட்டுத் தீவன ஊழல்… என அடுக்கிக்கொண்டே போகலாம்.

எப்பாடியாவது, பா.ஜ.க.வையும் மோடியையும் வீழ்த்தி மீண்டும் இந்தியாவைப் பிடித்துவிடலாம் என ‘இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். அவர்கள் கனவு ஒருபோதும் நனவாகாது. பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை வல்லரசு நாடுகளின் பட்டியலில் விரைவில் சேர்த்துவிடுவார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘ஊழலில் முதலிடம்’ எனும் நிலைக்குத்தான் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது.

குறிப்பாக, மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா தலைமையிலான ஆட்சியில் சாரதா சிட்பன்ட் ஊழல், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் டாஸ்மாக் பார்களை டெண்டர் விடாமலேயே நடத்தியது… பாட்டிக்கு பத்து ரூபாய் தொடங்கி… 2 ஆண்டுகள் முடிவதற்குள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அக்கட்சியினராலேயே சுமத்தப்படுகிறது. இப்படி ஊழல்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இநதியா’ என்ற பெயரில் கூட்டணி வைத்தால் வெற்றி பெற்றுவிடுவார்களா? ஒரு போதும் முடியாது. அடுத்த பிரதமர் நரேந்திரமோடிதான்!

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, நாட்டில் ஊழல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’’ என்றனர்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் ஜி 20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் அழைத்த விருந்தில் பங்கேற்க வில்லை. ஆனால், தமிழக முதல்வரும், மேற்கு வங்க முதல்வரும் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal