எடப்பாடி பழனிசாமி முதுகுவலி, மூட்டுவலி என்று சிறுசிறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டாலும் தலைநகர் சென்னைக்கு வராமல் சேலத்திலேயே பெரும்பாலான நாட்கள் இருந்து விடுகிறாரே என்று கழக கண்மணிகள் ஆதங்கப்படுகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து வருபவர்கள் சென்னையில் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

சேலத்தில் உடலுக்கு சற்று ஓய்வு கொடுத்து கொண்டிருந்தாலும் கட்சியின் முக்கிய வேலைகளில் தீவிரமாகவே இருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கான புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். பொது மக்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அவர் அமரும் முன் இருக்கை கொஞ்சம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. காரின் இரு புறமும் பாதுகாப்பு படையினர் நின்று கொண்டு வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal