எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால், தமிழகம் முழுவதிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இதில் நடிகை திரிஷா மற்றும் விஜய் குறித்து ‘இரட்டை’ அர்த்தத்தில் பேசினார். இந்த விவகாரத்தில் உதயநிதியை கைது செய்த காவல்துறை, விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘‘நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி சிut சிஷீஜீஹ் றிணீstமீ செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர். அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். இந்த கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” என பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், வீட்டின் முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தவிர தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal