பாலிவுட் படமொன்றில் நடித்தபோது ஆடைகளை அகற்றிவிட்டு உள்ளாடையை காட்டுமாறு இயக்குனர் தன்னை வற்புறுத்தியதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டிற்கு சென்ற அவருக்கு, அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்தியாவில் ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கு நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றவர் பிரியங்கா சோப்ரா தான்.

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடந்த 2018-ம் ஆண்டு புகழ்பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸை விட 10 வயது மூத்தவர் ஆவார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டு தான் வாடகைத்தாய் மூலம் அவர்களுக்கு இந்த பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பின்னரும் பிரியங்கா சோப்ரா சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது அவருக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் இவர் நடித்த சிட்டாடெல் என்கிற வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இதனிடையே சமீபத்தில் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் இயக்குனர் பற்றி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை பிரியங்கா சோப்ரா சினிமாவில் அறிமுகமான 2002-2003ம் ஆண்டுகளில் இந்த சம்பவம் நடந்ததாம். அப்போது பாலிவுட் படமொன்றில் ரகசிய ஏஜெண்ட்டாக நடித்து வந்தாராம். அப்போது ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டதாம்.

அந்த காட்சியில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்புக்கொண்டாலும், அப்படத்தின் இயக்குனர் அவர் உள்ளாடையுடன் மட்டுமே நடிக்க வேண்டும் என வற்புறுத்தினாராம். தன்னுடைய ஸ்டைலிஸ்ட்டை அழைத்து என்னுடைய ஆடையை கழற்றி உள்ளாடையை காட்ட சொன்னதாகவும், அதைப்பார்க்க தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள் என்றும் கொச்சையாக பேசியதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனரின் விருப்பப்படி உள்ளாடையுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா. 2 நாட்கள் மட்டுமே நடித்த நிலையில், உன் படமே வேண்டாம் என தூக்கியெறிந்துவிட்டு அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இயக்குனரின் அந்த செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal