நடிகர் விஜய் தலைக்கு விதவிதமான விக் பயன்படுத்தி வருவதாக கூறிய பயில்வான் ரங்கநாதனை தளபதி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் நடித்ததை விட தற்போது திரைப்பிரபலங்கள் பற்றி வில்லங்கமான கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் தான் பிரபலமாகி உள்ளார். யூடியூப்பில் சினிமா பிரபலங்கள் பற்றி சில அந்தரங்க தகவல்களை வெளியிட்டு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பயில்வானின் பேச்சுக்கு நடிகர், நடிகைகள் கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமின்றி அவரை அடித்த சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக நடிகை ராதிகா திருவான்மியூர் கடற்கரையில் வைத்து பயில்வானின் கன்னத்திலேயே அறைவிட்டு சென்றிருந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா நாயரும் தான் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்த பயில்வான் பொது இடத்தில் திட்டித்தீர்த்து அடிக்கப்பாய்ந்த சம்பவமும் அரங்கேறி இருந்தது.

இப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும், தொடர்ந்து பிரபலங்களைப் பற்றிய பகீர் தகவல்களை தொடர்ந்து யூடியூப்பில் பேசி வருகிறார். அந்த வகையில், நடிகர் விஜய்யை பற்றி பயில்வான் பேசி உள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த வீடியோவில் அவர் நடிகர் விஜய் விக் பயன்படுத்துவதாக பேசி இருக்கிறார். அவரின் இந்த பேச்சை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது :”விஜய் 7 வருடத்திற்கு மேலாக படங்களில் விக் வைத்து தான் நடித்து வருகிறார். அவரது தந்தைக்கு வயசானாலும், அவருக்கு முடி உதிராமல் இருக்கிறது. ஆனால் விஜய்க்கு இந்த வயதிலேயே முடி உதிர அவர் ரசாயனம் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்தியது தான் காரணம். உலகநாயகனுக்கும் இதுபோன்ற பிரச்சனை வந்தது. ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று முடியை மீண்டும் வளர்த்துக்கொண்டார்.

ரஜினிக்கும் முடி கொட்டிவிட்டது. ஆனால் அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வழுக்கை தலை உடனே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஆனால் விஜய் விக் வைத்துக் கொண்டு தான் வலம் வருகிறார். விக் வைப்பது தவறல்ல. சினிமா பிரபலங்களுக்கு அது சாதாரண விஷயம் தான். ஆனால் விஜய் விக் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விஜய் விதவிதமான விக்கை பயன்படுத்துகிறார். தயவு செய்து ஒரே விக்கை வைத்து பழகுங்கள். உதாரணத்துக்கு பனையூரில் ரசிகர்களை அண்மையில் சந்திக்க வந்தபோது நீண்ட முடியுடன் கூடிய விக்கை விஜய் அணிந்து வந்ததாக பயில்வான் அதில் கூறி உள்ளார். பயில்வானின் இந்த பேச்சை கேட்ட விஜய் ரசிகர்கள் தெறி பட சமயத்திலேயே விஜய் முடிக்கு சிகிச்சை எடுத்து வளர்த்துக் கொண்டதாகவும், ஒரிஜினல் முடிக்கும், விக்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசாத, உனக்கு அவ்வளவு தான் லிமிட்டு என வறுத்தெடுத்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal