‘நடிகர் சித்தார்த்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் (அட்ஜஸ்ட்மென்ட்) படுக்கையை பகிர ரெடி’ என இளம் நடிகை ஓபனாக பேசியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இளம் நடிகை ஒருவர் சித்தார்த் வாய்ப்பு கொடுத்தால் அவருடன் படுக்கையை பகிர தயார் என்று அதிரடியாக பேசியிருப்பது கடும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் அவலம் அதிகமாக இருக்கிறது. அது குறித்து ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் முன்னணி நடிகையாக முடியும் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகை காயத்ரி ரமா, சித்தார்த் குறித்து வெளிப்படையாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை பற்றி கூறியிருக்கும் அவர் நடிகை விருப்பப்பட்டால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யலாம். ஆனால் வாய்ப்பைக் காட்டி யாரும் கட்டாயப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எனக்கு நடிகர் சித்தார்த்தை மிகவும் பிடிக்கும். அவர் மேல் எனக்கு ஒரு க்ரஷ் இருக்கிறது.

அதனால் யாராவது அவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் அவருடன் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொன்னால் நான் தயங்காமல் அவருடன் படுக்கையை பகிர தயார் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். மேலும் உண்மையிலேயே சித்தார்த் என் மேல் விருப்பப்பட்டு இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால் நான் மறுக்காமல் சம்மதிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவர்களுடைய உடல், அவர்களுடைய இஷ்டம், விருப்பத்துடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதில் தப்பே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சுக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு எதிராக நேர்மையான கருத்துக்களை கூறிய நடிகை, சித்தார்த் விஷயத்தில் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பது சில நெகட்டிவ் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal