தமிழகத்தில் ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையேயான பனிப்போர் முற்றிக் கொண்டிருக்கிறது. கோவை குண்டுவெடிப்பு மற்றும் சில விவகாரங்களில் தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை ஆளுநர் வெளியிட்டார்.
ஆளுநரைக் கண்டித்து தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை திணித்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் பின்னர் நாளை இரவு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க உள்ள நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal