தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கடலூர்) மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஆக.,23) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கடலூர்) மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, தென்காசி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு வேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இப்பகுதிகளில் மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal