கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கின்றனர்!

கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர்மங்கலத்தினை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை வெளியே சொன்னால் பள்ளி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது அந்த மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது, பள்ளி மாணவிக்கு மகேந்திரன் 2 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையெடுத்து போலீசார் மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal