ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே பொதுக்குழுவில் நேரடியாக வெடித்த மோதல்தான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

இன்று தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனையைவிட, ஓபிஎஸ் மீதான எதிர்ப்புகள்தான் அதிகமாக வெளிப்பட்டது. ஏனென்றால் ஓ.பி.எஸ்.ஸும், சென்னை நோக்கி கிளம்பினார். இந்த கூட்டம் நடப்பதற்கு முன்னதாக, அங்கே வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் பேனரை, எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர். அதேபோல, எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர்.

‘துரோகத்தின் மொத்த உருவம்’ என்று தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியின் சீனியர். ஜெயலலிதா காலத்தில் இருந்தே அமைச்சராக இருந்தவர். இப்போதும் எடப்பாடியின் குரலாக இவர்தான் ஒலித்து கொண்டிருக்கிறார். எடப்பாடியின் நிழலாக பின்தொடர்ந்து கொண்டுமிருக்கிறார்.ஒவ்வொரு முறையும், அதிமுகவின் அதிகாரப்பூர்வமான விஷயங்களை மீடியாவில் பகிர்ந்து கொள்பவர் ஜெயக்குமார்தான்.

அப்படிப்பட்ட ஜெயக்குமார், தன் கட்சியின் பொருளாளரையே, பொதுவெளியில், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்திருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. இவர்கள் எத்தனை மீட்டிங் நடத்தினாலும், இவர்களுக்குள் சுமூக முடிவு எட்டப்படுவதில்லை என்ற எண்ணமும் எழுந்துள்ளது. இனி நாளைக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது. நாளைக்கு என்னவெல்லாம் நடக்க போகிறதோ தெரியவில்லை.

அதேசமயம், பெரும்பாலான ஆதரவுகள், எடப்பாடிக்கே இருக்கும்நிலையில், ஓபிஎஸ் இனி என்ன செய்ய போகிறார்? என்ற குழப்பமான கேள்வியும் தொண்டர்களிடம் சூழ்ந்துள்ளது. ஓபிஎஸ் ஒருசில பிளான்களை வைத்து காய் நகர்த்தலை துவக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்றைய தினம் தேனி நோக்கி செல்லும்போது, ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பு, பாஜக மாவட்ட செயலாளர் பாண்டி, ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். அப்போது பாண்டி, திடீரென ஓபிஎஸ்சுக்கு காவி துண்டு அணிவித்தார். உடனே, பாஜக சார்பில் பாரத் மாதா கி ஜே என்ற கோஷமும் எழுப்பப்பட்டது கவனிக்கத்தக்கது. நடந்து கொண்டிக்கும் அதிமுகவின் மோதல்கள் எந்த மாதிரியான முடிவை தர போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், தேனியில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது ‘பாரத் மாதா கி ஜே!’

ஏற்கனவே பன்னீர் செல்வம் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார் என்று வதந்திகள் வந்த நிலையில், தேனியில் அவருக்கு ‘காவி’ துண்டு அளித்திருப்பதுதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal