மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ், இவரது மனைவி துளசிமணி,31, என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். தனராஜ் அதே பகுதியில் உள்ள பழனிசாமி என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். துளசிமணி கூலி வேலை செய்து கொண்டு ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார்.

இந்நிலையில் ஜூன் 15ம்தேதி இரவு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் துளசிமணியின் தந்தை பொன்னுசாமிக்கு தனது மகள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதாக தகவல் கூறினர். சம்பவ இடம் வந்து பார்த்த போது முகத்தில் காயங்களுடன் மகள் இறந்து கிடந்தார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கடம்பூர் போலீசில் பொன்னுசாமி புகாரளித்தார். கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையில் பங்களா புதூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில் துளசிமணியின் கணவர் தனராஜ்,40, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தை நெறித்து கொன்றதாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். பின்பு கடம்பூர் போலீசார் தனராஜை கைது செய்த கோபி மாவட்ட சிறையிலடைத்தனர். கடம்பூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கழுத்தை நெறித்து மனைவியை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal