சமீபத்தில் தி.மு.க. மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க.வில் இணைந்தார். இதனையடுத்து, தி.மு.க.கை கடுமையாக விமர்சித்தார், இந்த நிலையில்தான் பா.ஜ.க.விற்கு செக் வைக்கும் விதமாக தி.மு.க. எம்.பி. பதிவிட்டிருக்கிறார்!

பா.ஜ.க.வில் இணைந்த திருச்சி எம்.பி. சிவாவின் மகன் சூர்யா, ‘‘திமுக குடும்பத்தின் கட்சியாக உள்ளது. ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்றார். தந்தை திருச்சி சிவாவின் எதிர்ப்பையும் மீறி சூர்யா சிவா பாஜகவில் இணைந்துள்ளார். திமுகவின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகனை கட்சிக்கு இழுத்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தர்மபுரி மக்களவை தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ‘ஆக்டிவ்’வாக உள்ள இவர் பாஜகவிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 2 பாஜக எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளதாக செந்தில்குமார் எம்பி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது தொடர்பான பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவினருக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டசபை உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal