குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் இன்றைக அதிக பேரிடம் இருக்கிறது. அதற்காக எதையும் செய்யத்துணிந்துவிடுகிறார்கள்.

அந்த வகையில் கடல் ஆமை, மண்ணுளி பாம்பு வரிசையில் திமிங்கல வாந்தியையும் விட்டு வைக்காமல், கடத்திய கும்பல் தற்போது சிக்கியிருக்கிறது.

மதுரை மாவட்டம் அருகே திமிங்கல வாந்தியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மேலூர் அருகே 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். காரில் திமிங்கல வாந்தி ( ஹம்பர்கரி ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நத்தத்தை சேர்ந்த அழகு 46, பழனிசாமி45 குமார் 34 , ஆகியோரை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் இருந்து 7 மொபைல் போன்கள், ரூ. 10,700 பறிமுதல் செய்யப்பட்டது. ஹம்பர்கரி பாலியல் தூண்டுதல் தொடர்பான மருந்துகள் செய்ய பயன்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal