பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது, ‘‘தமிழகத்தில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில் உள்ளனர். இளைஞர்களின் மனதை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ளன. பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்றால் அதிகமாக புத்தகங்களை படிக்க வேண்டும்; வரலாறு, அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும். ‘வாட்ஸ் ஆப்’பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்து கொள்ள வேண்டும்.

மகாபாரதத்தை ஆயிரம் முறை படிக்க வேண்டும். இதில் ஒவ்வொருவரின் வாழ்கையையும் நேரில் பார்ப்பது போல் இருக்கும். நான் இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன். 12 ஆயிரம் புத்தகங்களை பராமரிப்பு செய்து வருகிறேன். படிக்க படிக்க தான் மனிதன் ஆகிறோம். சாதி, மதங்களை கடந்து மனிதம் உருவாக புத்தகம் படிக்க வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal