திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.

நேரு​வின் சொந்த ஊரை உள்​ளடக்​கிய லால்​குடி தொகு​திக்கு எம்​எல் ஏ-வாக இருக்​கும் சவுந்​தர​பாண்​டியன், “எனது தொகு​திக்​குள் நடக்​கும் நிகழ்ச்​சிகளுக்கு கூட அதி​காரி​கள் என்னை அழைக்​கப் பயப்​படு​கி​றார்​கள். அதற்​குக் காரணம் அமைச்​சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்​கப்​பட்​டார். இந்​தப் பஞ்​சா​யத்து அறி​வால​யம் வரைக்​கும் போய் சமா​தானம் செய்​து​வைக்​கப்​பட்ட பிறகும் சவுந்​தர​பாண்​டியன் – நேரு சச்​சர​வு​கள் முடிவுக்கு வந்​த​பாடில்​லை.

சவுந்​தர​பாண்​டிய​னைப் போல​வே, ஸ்ரீரங்​கம் எம்​எல்​ஏ-​வான பழனி​யாண்​டி​யும் நேரு​வுக்கு எதி​ராக அடிக்​கடி பொது மேடைகளில் எதை​யா​வது பேசி​விட்டு கப்​சிப் ஆகி​விடு​கி​றார். 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, கரூர் மாவட்​டத்​தில் உள்ள பழனி​யாண்​டி​யின் கல் குவாரி​யில் வரு​வாய்த்​துறை​யினர் ரெய்டு நடத்​தினர். அப்​போது, “இதற்​குக் காரணம் நேரு​தான்” என பொத்​தாம் பொது​வில் குண்​டைத் தூக்​கிப் போட்ட பழனி​யாண்​டி, பின்​னர் சமா​தான​மா​னார்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் சாலைப்​பாது​காப்பு மற்​றும் மாவட்ட வளர்ச்​சிப் பணி​கள் ஆய்​வுக் கூட்​டம் திருச்சி ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்​றது. இதில் கலந்து கொண்ட பழனி​யாண்​டி, “எனது தொகு​தி​யில் கண்​ணுடை​யான்​பட்​டி, சமுத்​திரம் பகு​தி​களுக்கு 2 பாலங்​கள் கட்ட ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதை வேறெங்​கும் மாற்​றி​வி​டா​மல் எனது தொகு​தி​யிலேயே கட்​ட​வேண்​டும். ஏனென்​றால், ஏற்​கெனவே சமுத்​திரம் பாலத்தை மண்​ணச்​சநல்​லூர் தொகு​திக்கு மாற்​றிய​தில் எங்​கள் அமைச்​சர் (நேரு) மீது எனக்கு வருத்​தம் உண்​டு. அடுத்​தவங்க சாப்​பாட்டை எடுத்து சாப்​பிடக் கூடாதுல்ல” என்று தடாலடி​யாகப் பேசி​னார்.

2021-ல் திருச்சி மாவட்​டத்​தில் உள்ள 9 தொகு​தி​களை​யும் திமுக கூட்​டணி வசப்​படுத்​தி​ய​தில் நேரு​வுக்கு பெரும் பங்கு உண்​டு. திருச்சி மாவட்​டத்​தைப் பொறுத்​தவரை தேர்​தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்​டும்… யாருக்கு கொடுக்​கக் கூடாது என தீர்​மானிப்​பவர் நேரு தான். இந்த நிலை​யில், நேரு​வுக்கு எதி​ராக குடைச்​சல் கொடுத்து வரும் இந்த 2 எம்​எல்​ஏ-க்​களுக்​கும் இந்​தத் தேர்​தலில் சீட் கிடைப்​பது கஷ்டம் தான் என்​கி​றார்​கள் திருச்சி திமுக-​வினர்.

இந்த நிலையில்தான் லால்குடி தொகுதியைப் பொறுத்தளவில் இந்தமுறை கூட்டணிக் கட்சிக்குத் தள்ளிவிடப் பார்க்கிறாராம் கே.என்.நேரு. அதே போல், ஸ்ரீரங்கம் தொகுதி இந்தமுறை பழனியாண்டிருக்கு கிடையாது. கே.என்.நேருவைச் சுற்றி வரும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ‘கலர்’ சட்டைக் காரருக்கு கொடுக்கலாமா? என யோசித்து வருகிறாராம் கே.என்.நேரு. ஆனால், இவரும், சீட் வாங்கி வெற்றி பெற்ற பிறகு இன்னொரு பழனியாண்டியாக வந்துவிடுவாரோ? என்ற எண்ணவோட்டமும் கே.என்.நேருவுக்கு உள்மனதிற்குள் இருக்கிறதாம்.

தவிர, ‘கலர்’ சட்டைக் காரருக்கு சீட் கொடுத்தால், திருச்சியில் உள்ள மற்ற தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறுவது கடினமாகிவிடும். ஏனென்றால் ‘கலர்’ சட்டைக்காரர் ஏற்கனவே காவல்நிலையத்தில் நேரடியாகவே புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இதற்கிடையே, இந்த முறை முசிறி தொகுதியை முன்னாள் அமைச்சர் வனத்துறை அமைச்சர் மகன் கருணைராஜாவுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் கே.என்.நேரு. காரணம், 2006 & 2011 காலக்கட்டத்தில்¢ இரண்டு பேரும் அமைச்சராக இருந்தகாலத்தில் நீருபூத்த நெருப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் நடந்தபிறகு கே.என்.நேருவின் அரசியலை சமாளிக்க முடியாமல் என்.செல்வராஜ் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனாலும், கருணை ராஜா மீது மீண்டும் கருணை வைத்திருக்கிறார் கே.என்.நேரு என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal