புரட்சிதமிழர் எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு முருகபெருமானின் அறுபடை வீடுகளில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம், இரத்த முகாம் நடத்துவது மற்றும் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க எல்லையில் நமக்காக போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும்,வெற்றி பெறவும் மும்மத வழிபாடு செய்யவும் அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன், கழக நிரந்திர பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியாரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு,கழக மருத்துவரணி சார்பில், கழக மருத்துவரணி செயலாளர் டாக்டர் வேணுகோபால் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தார். இதில் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களை சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன வருமாறு…
தீர்மானம் -1 ; புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறு வடிவம், கழக நிரந்தர பொதுச் செயலாளர், அன்பின் பிறப்பிடம்,கருணையின் இருப்பிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால முதலமைச்சர், மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்த நாள், வருகின்ற மே 12 ம் தேதி வருவதையொட்டி,கழக மருத்துவரணி சார்பில்,புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் திருப்பெயரில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களில் தங்க தேர் இழுத்து, எடப்பாடியார் பல்லாண்டு காலம், நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழவும், 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டி சண்முகா அர்ச்சனையும், அதனை தொடர்ந்து 71 நபர்களுக்கு செயற்கை கால்கள், கைகள்,71 நபர்களுக்கு இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சையும், 71 நபர்களுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அதனை தொடர்ந்து எடப்பாடியாரின் திருப்பெயரில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடத்திட வேண்டும் என்று கழக மருத்துவரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் -2 : பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக, இந்தியா ஆபரேஷன் சித்தூர் நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை பாகிஸ்தான் தாக்க ஏற்பட்ட நிலையில் அதனை முறியடித்து, நமது நாட்டு மக்களை காத்து வரும் பாரத பிரதமர் அவர்களுக்கும், ராணுவப்படை வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரே தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும், நமக்காக எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும் கோவில்களில், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாடு தலங்களில் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார் இதனை தொடர்ந்து கழக பொதுச்செயளாலர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெறவும் மும்மத வழிபாட்டை ,கழக மருத்துவரணி சார்பில் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
தீர்மானம் -3 : கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், 525 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, இந்த 4 ஆண்டுகளில் 10 சகவீத தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல், தொடர்ந்து மக்களை வாட்டி வதைக்கும் வகையில் கடுமையான சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, இதனை தொடர்ந்து நீட் தேர்வு என்ற பொய்யான தேர்தல் வாக்குறுதியால் 23 அப்பாவி மாணவர்கள் பலி கள்ளச்சாராயம் மரணம், இப்படி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் ஸ்டாலின் திமுக அரசின் வேதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் என கழக மருத்துவரணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் – 4 : தமிழக மக்கள் விரும்பும் பாஜகவுடன் மகத்தான கூட்டணி அமைத்து, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு,கழகத்திற்கு மகத்தான வெற்றியை பெறுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில், வெற்றி கூட்டணி தொடக்கமாக பாஜக கூட்டணி அமைத்து, தீய சக்தி திமுக என்ற பொது எதிரியை வீழ்த்துவதற்கு, ஒத்த கருத்துக்கள் கொண்ட அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம்பெறச் செய்தும், 2026 ஆம் ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் புனித ஆட்சி மலர ஒரு மெகா கூட்டணி அமைப்பதற்கு வீயூகம் வகுத்து வரும் ,கழக நிரந்திர பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கு இக்கூட்டம் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, வருகின்ற 2026 ஆண்டில் மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் ஆட்சி மலர நாம் அனைவரும் அயராது பாடுபடுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது