‘‘இஸ்லாத்தின் நெறிகளுக்கு மாறான பயஙகரவாத படுகுழியில் சிக்கி ஒருநாடு இருநாடாகி இன்று மூன்றாம் பிளவை நோக்கி சென்று அழிந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்!

‘‘இறுதியுத்தம்!’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில்,

‘‘1947- ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15 – ம் தேதி இந்தியாவும் அடுத்தடுத்த நாட்களில் சுதந்தரம் பெற்ற நிலையில். அடுத்த ஆண்டே அதாவது 1948- லியே இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதை எதிர்த்து முதல் அக்கப்போரை பாகிஸ்தான் தொடங்கியது.

ஆனால் இந்தியாவின் வலுவான எதிர்தாக்குதலாலும் சர்வதேச அழுத்தங்களாலும் ஐநாவின் தலையீட்டாலும் மூன்றே மாதத்தில் பாகிஸ்தான் பணிந்தது. காஷ்மீரின் மூன்றில் இரண்டிலொரு பாகம் இந்தியாவுடனும் ஒருபகுதி பாகிஸ்தானுடனும் என்கிற அடிப்படை ஓப்பந்தங்களோடு அந்தப் போர் முடிவுக்கு வந்தாலும் சிரங்கெடுத்தவன் கைள் சொறியாமல் இருக்காது என்பது போல் இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் தனது அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதன் விளாவாக 1965 ல் மீண்டும் காஷ்மீரை மையப்படுத்தியே மிக உக்கிரமான போர் வெடித்தது இருதரப்பிலும் மிக அதிகமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டது. ஆனாலும் அதிலும் இந்தியாவின் கையே ஓங்கி நிற்க சோவியத் மற்றும் அமெரிக்கா முன்னெடுத்த மத்தியஸ்தங்களால் தாஷ்கண்ட் ஒப்பந்தம் உருவாகி அமைதி மீண்டது.

ஆனாலும் குரைப்பதை நிறுத்தாத அடிபட்ட வெறிநாயாக அலைந்த பாகிஸ்தானுக்கு இந்த முறை அதாவது 1971 -ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதிகளை மையப்படுத்தி பிரிவினை கிளர்ச்சி ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் தஞ்சம் புகவே அப்போதைய பாரதப்பிரதமர் அதனை மிகலாவகமாக அவ்விவகாரத்தை கையிலெடுத்து பதினேழே நாட்களில் ஒரு உச்சகட்ட போரை நடத்தி வங்காள தேசம் என்கிற ஒரு நாட்டையே உருவாக்கி கொடுத்ததோடு தான் அப்போரில் கைப்பற்றிய பாகிஸ்தானின் பல பகுதிகளை சிம்லா ஒப்பந்தஅடிப்படையில் திருப்பியும் கொடுத்து இந்தியா பெருந்தன்மை காத்தது.

ஆனாலும் தன்னில் ஒரு பாகத்தை இழந்து வங்காளம் பிறந்ததில் பாகிஸ்தான்தலைகுனிந்த அவமானத்தால் இந்தியாவுடனான வன்மத்திற்கு புதுவடிவம் தேடியது.

இந்தியாவுடனான அனைத்து போர்களிலும் தோற்று ஓடிய பாகிஸ்தான் தன் பாதையை மாற்றிக் கொண்டு அது பயங்கர வாதத்தை கையில் எடுத்தது.எல்லைகளில் வாலாட்டும் தொல்லைகளை தொடர்ந்தது மட்டுமன்றி இந்திய போலி ரூபாய்களை அச்சடித்து அதனை காஷ்மீர் வழியாக உட்புகுத்தி வன்முறையோடு சேர்த்து இந்திய பொருளாதாரத்தை குலைக்கும் ஈனக்காரியங்களிலும் ஈடுபட்டது.

இந்திய பாதுகாப்புப்படை மீது கல்லெறிபவர்களுக்கு போலி இந்திய கரன்சி தாள்களை விநியோகிக்கும் அளவுக்கு படுகேவல நாடாக பாகிஸ்தான் மாறியது.அதன் விளைவாக 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தம் ஏற்பட்டு அதிலும் இந்தியாவிடம் மரண அடிவாங்கி புறமுதுகோடியது.

ஆனாலும் திருந்தாத ஜென்மமான பாகிஸ்தான் இளைஞர்களை பயங்கரவாதிகளாக்கும் மூளைச்சலவையை முன்னெடுத்து காலப்போக்கில் உலகப் பயங்கரவாத இயக்களுக்கான நாற்றங்களாகவும் தீவிரவாதிகளுக்கும் சம்பளம் பென்சன் வழங்கும் தீவிரவாதத்தின் தலைமை பீடம் என்னும் அளவுக்கு சீரழியத் தொடங்கியது.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கி திவாலாகத் தொடங்கியது. உலக பொருளாதார மையங்களிடம் கடன் பெற்று வயிறையும் வன்முறையையும் வளர்க்கும் மதவெறி மனநோயாளியாகியது.

அதன் உச்சகட்ட விளைவில் தான் இன்று “வல்லாதிக்க நாடுகளின் அழுத்தத்தால் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் நாங்கள் துணை நின்றோம் ” என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரே ஒப்புக் கொண்டு முச்ந்தியில் நின்று மூக்குச்சிந்தும் நிலை உருவாகி இருக்கிறது.

அதே சமயம் உலக மக்கள் தொகையில் சுமார் 20 கோடி இஸ்லாமிய மக்களை கொண்டிருக்கும் இந்திய தேசம் கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தன் மீது பாகிஸ்தான் ஏவுகிற பயங்கரவாதத்தையும்ஆலயங்கள் ஹோட்டல்கள் முதல் பாராளுமன்ற கட்டிடம் வரை அது ஏவிய தீவிரவாதத் தாக்குதல்களையும் பொறுமையோடு எதிர்கொண்டு உலகம் மதிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது..

இரண்டரை சதவீத சீக்கிய மக்களின் பிரநிதியாக டாக்டர் மன்மோகன் சிங் எங்கள் நாட்டின் பிரதமர் ஒன்பது சதவீத இஸ்லாமிய மக்களின் பிரதிநிதியாக டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் எங்கள் தேசத்தின் குடியரசுத்தலைவர் நாலரை சதவீத கிறிஸ்தவ மக்களின் பிரதியான சோனியா காந்தி எங்கள் நாட்டின் அரசை வழிநடத்தும் கட்சியின் தலைவர் சுமார் 85 சதவீத இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் ஆளப்படும் குடிமக்கள் என்னும் அளவுக்கு உலகமே வியந்து போற்றும் மதச்சார்பற்ற நாடு என்னும் பெருமித வரலாற்றினை வடித்துஇன்று உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாம் பெரும் தேசமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். ஆனால் இந்தியாவோடு இன்னும் சொல்லப் போனால் நமக்கு ஒருநாள் முன்னதாகவே சுதந்திரம் பெற்று

தன்னை ஒரு இஸ்லாமிய குடியரசாக பிரகடனம் செய்து கொண்ட பாகிஸ்தான் வன்முறை தீவிரவாதம் என்னும் இஸ்லாத்தின் நெறிகளுக்கு மாறான பயஙகரவாத படுகுழியில் சிக்கி ஒருநாடு இருநாடாகி இன்று மூன்றாம் பிளவை நோக்கி சென்று அழிந்து கொண்டிருக்கிறது.

கோல் அடிக்க முடியாத கோழை ஆள் அடிப்பான் என்னும் கதையாக நேருக்கு நேர் நின்று போர் நடத்தி வெல்ல முடியாத கோழைத்தனத்தின் உச்சமாக இன்று சுற்றுலா வந்த அப்பாவிகளை சுட்டுக் கொன்று விட்டு நாங்கள் தான் அதனை செய்தோம் என அறிவித்த கொடியவர்களை தங்கள் மடியில் வைத்து கொஞ்சுகிறது பாகிஸ்தான் என்றால் இதற்கு மேலும் பொறுமை காத்தால் இந்தியாவுக்கு முப்படை தான் எதற்கு என்ற கேள்வியை நூற்று முப்பது கோடி இந்திய மக்களும் எழுப்புவார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்ட நரேந்திர மோடியின் தீரமிக்க அரசு 26 அப்பாவிப் பெண்களின் குங்குமத்தை பறித்தவர்களின் கூடாரங்களை இரண்டு பெண் சிங்கங்களின் தலைமையிலேயே ஊடுருவல் தாக்குதல் நடத்தி அதே 26 என்ற எண்ணிக்கையில் ( இது பாகிஸ்தானே ஒப்புக் கொண்ட எண்ணிக்கை)பழி தீர்த்திருக்கிறது என்றால் அதனை வணங்கி வரவேற்பது தான் அரசியல் நோக்கம் கடந்த அனைவரது கடமையாக இருத்தல் வேண்டும்.

இதற்கு மேலும் வெட்கித் தலைகுனியாது குண்டித் துணியை அவிழ்த்து வைத்துவிட்டு இந்தியாவிடம் சரணடைந்த சரித்திரத்தை மறந்து விட்டு “வா போருக்கு” என மதநோயாளி பாகிஸ்தான் மீண்டும் அழைக்குது என்றால்

இந்த யுத்தம் பாகிஸ்தானோடு நாம் நடத்தும் இறுதி யுத்தமாகவும் பாக்கிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்கிற அவமானத்தை துடைத்தெறியும் உறுதி யுத்தமாகவும் அமையட்டும்.. ஜெய்ஹிந்த் வந்தேமாதிரம்… ’’ என பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal