திரைப்பட நடிகைகளும் சரி, சீரியல் நடிகைகளும் சரி, மனஅழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக வேறு வழியில் தீர்வுகாணாமல் தற்கொலைக்கு முயற்சிப்பதுதான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ‘கயல்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பினாயலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.