எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பூங்கா முருகன் கோவிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு வழிபாடு செய்து தங்கத் தேரை அதி.மு.க மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் இழுத்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 72 வது பிறந்தநாள் விழா வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி வருகிறது, இதனை தொடர்ந்து எடப்பாடியாரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து மதுரை பூங்கா முருகன் கோவிலில் அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் ,கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷே& ஆராதனை செய்து, எடப்பாடியாரின் திருபெயரில் சிறப்பு பூஜை செய்து,வருகின்ற 2026 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வர வேண்டியும், நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிராத்தனை செய்து தங்க தேரை இழுத்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் கூறியதாவது; ‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறுவடிவம், 2 கோடி தொண்டர்களின் பாதுகாவலர், 8 கோடி மக்களின் பாதுகாப்பு அரணாக திகழும் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழா, வருகிற மே மாதம் 12ஆம் தேதி வருகிறது, அதனை தொடர்ந்து முன்கூட்டியே பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது தற்போது தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து எடப்பாடியாரின் திருப்பெயரில் ஏழை,எளிய சாமானிய மக்கள் நலன் காக்கும் விழாவாக கொண்டாடும் வகையில் விபத்தில் கை கால் இழந்த 71 நபர்களுக்கு செயற்கை கால் மற்றும் கைகள்,71 நபர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் குடல் அறுவை சிகிச்சைகள், 71 நபர்களுக்கு காது கேட்கும் கருவி, 71 நபர்களுக்கு கண்ணாடி, 71 நபர்களுக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை. உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது’’ என கூறினார்.